31/05/2026
அரசு நிர்ணயித்த விலையை விட #பாட்டிலுக்கு20ரூபாய் கூடுதலாக வாங்கும் அநியாயம்,
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ?
தமிழக முதல்வர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனையே தமிழகத்தில் இருக்கக்கூடிய 717 மது கடைகளை மூடுவதாக அறிவிக்கைவிடுத்தார்.. ஆனால் இன்றளவும் பல கடைகள் மூடப்படுவதாக கண்துடைப்பு நாடகங்கள் மட்டுமே அரங்கேற்றி வருகிறது. இதனை நேற்றைய தினம் மாநில தலைவர் நைனா நாகேந்திரன் ஜி அவர்கள் திரு விஜய் அவர்களால் மூடப்பட்ட 717 மதுக்கடைகளுக்கான வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கூறியிருந்த நிலையில், இன்றைய தினம் சென்னை கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில் மவுலிவாக்கம் பாய் கடை பகுதியில் பொதுமக்களுக்கும் , அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மதுபான கடையை மூடிட வலியுறுத்தி சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி அவர்கள் தலைமையில், தேசிய சிறுபான்மையணி செயற்குழு உறுப்பினர் திரு
வேலூர் இப்ராஹிம் அவர்கள் முன்னிலையில், குன்றத்தூர் தெற்கு மண்டல் தலைவர் திரு. வடிவேலன் அவர்கள் முன்னெடுப்பில் பொதுமக்களும் ஏராளமான பாஜகவினரும் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட மது கடையினை 15 நாட்களுக்குள் மூடுமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய காலங்கள் சென்று இப்பொழுது பாட்டிலுக்கு 20ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் விசாரிக்க வலியுறத்தினர்.
VELLORE IBRAHIM Gkumar Ganesan Kumar