08/12/2021
விபத்து ஏற்படுமுன் ஆக்கிரப்பு வாகனங்களை அப்புறப்படுத்துவார்களா?
செங்குன்றம் பாலவாயில் ஜங்ஷன் சிக்னலிருந்து லட்சுமி திரையங்கம் வழியாக பவானி நகர், கரிகாலன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் ரெக்கவரி வேன்களும், பழுது பார்ப்பதற்காக லாரிகளும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், விபத்து ஏற்படும் சூழ்நிலையை உருவாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த சர்வீஸ் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், கார்கள் 80 கி.மீ. வேகத்தில் செல்வதால் நகர் பகுதியிலிருந்து வெளியே செல்லும் மக்கள் சிக்கி உயிரிழப்பு ஏற்படவும் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால், கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிப்பதுடன், வேகத்தடை அமைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனை போக்குவரத்து காவல்துறை உடனடியாக கவனத்தில் எடுத்து செயல்பட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்புக் குழு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களால் பவானிநகர், கரிகாலன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைவதுடன், மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,