30/07/2025
பூதப்பாண்டி பேரூராட்சியில் கவுன்சிலரின் நூதன போராட்டம்!
இன்று (30-07-2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் பூதப்பாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பூதப்பாண்டி பேரூராட்சியின் 4-வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சகோதரி M. நபீலா அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐதுரூஸ் நகர், ஆப்தீன் நகர், முகமது கார்டன், பள்ளித்தெரு கிழக்கு, விளாங்காடு ரோடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் முழுமையான தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், கையில் அரிக்கேன் விளக்குடன் மன்றக் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
#பூதப்பாண்டி #கவுன்சிலர்_போராட்டம் #தெருவிளக்கு