Tamil Nadu Department of Archaeology

Tamil Nadu Department of Archaeology Official account of Tamil Nadu Department of Archaeology

11/09/2026

கூகூர் சங்க காலச் செங்கல் கட்டுமானம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கூகூரில், நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மணலில் புதைந்திருந்த பழமையான செங்கல் கட்டுமானத்தின் சில பகுதிகள் வெளித்தோன்றியுள்ளன.

22.08.2026 மற்றும் 23.08.2026 ஆகிய தேதிகளில் Sonar Scanning, Scuba Diving மற்றும் Drone தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

39–43 செ.மீ. நீளம், 20–22 செ.மீ. அகலம், 6–7 செ.மீ. தடிமன் கொண்ட செங்கற்களால் அமைந்துள்ள இக்கட்டுமானம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், பூம்புகார் போல சங்க கால நீர் மேலாண்மை கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் உய்த்துணரப்படுகிறது.

#கூகூர் #சங்ககாலம் #தொல்லியல் #கொள்ளிடம்ஆறு #தமிழர்வரலாறு

[ கூகூர், சங்க காலம், செங்கல் கட்டுமானம், கொள்ளிடம் ஆறு, தொல்லியல், நீர் மேலாண்மை, களஆய்வு, Sonar Scanning, Scuba Diving, Drone தொழில்நுட்பம் ]
Chief Minister of Tamil Nadu

புதிய கற்கால கருவிகளை கூர்மைப்படுத்துவதனால் ஏற்பட்ட பள்ளங்கள்  – ஆனூர் Grooves Caused by Sharpening Neolithic Stone Tool...
11/09/2026

புதிய கற்கால கருவிகளை கூர்மைப்படுத்துவதனால் ஏற்பட்ட பள்ளங்கள் – ஆனூர்
Grooves Caused by Sharpening Neolithic Stone Tools – Anur

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், ஆனூர் கிராமத்தில் பாலாற்றின் வடக்கரையில், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளை கூர்மைப்படுத்தியதற்கான முக்கியமான தடயங்கள் காணப்படுகின்றன.

வேட்டையாடி அலைந்து திரிந்த வாழ்க்கையிலிருந்து விவசாயம் மற்றும் நிலையான வாழ்க்கைக்கு மனிதன் மாறிய காலமே புதிய கற்காலம். இக்காலத்தில் கற்கருவிகளை மெருகேற்றி செம்மைப்படுத்துவதற்காக, தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு அருகிலிருந்த பாறைகளில் அவை தேய்க்கப்பட்டன.

ஆனூரில் காணப்படும் இப்பள்ளங்கள் சுமார் 15 முதல் 60 செ.மீ நீளமும், 2 முதல் 5 செ.மீ அகலமும் கொண்டவை. கைக்கோடாரிகளை உருவாக்கி, பாறைகளில் தேய்த்து செம்மைப்படுத்தியதன் விளைவாக உருவான நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளங்கள் இங்கு காணப்படுகின்றன.

இதனால், ஆனூர் பகுதி புதிய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கப்பட்ட ஒரு தொழிற்கூடமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலும் இதுபோன்ற பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தேய்ப்புப் பள்ளங்கள், புதிய கற்கால மக்களின் கற்கருவி தயாரிப்பு நுட்பத்திற்கான முக்கியமான தொல்லியல் சான்றுகளாக விளங்குகின்றன.

#ஆனூர் #புதியகற்காலம் #தொல்லியல் #தமிழகவரலாறு

[ ஆனூர், புதிய கற்காலம், கற்கருவிகள், கற்கருவி தயாரிப்பு, தொல்லியல், பாலாறு, செங்கல்பட்டு, கைக்கோடாரி, பழங்கால தடயங்கள், Neolithic ]
Chief Minister of Tamil Nadu

பட்டணமருதூர் அகழாய்வு – 2026PATTANAMARUDUR EXCAVATIONS – 2026 தூத்துக்குடியிலிருந்து சுமார் 16 கி.மீ. வடக்கில், ஒட்டப்பி...
09/09/2026

பட்டணமருதூர் அகழாய்வு – 2026
PATTANAMARUDUR EXCAVATIONS – 2026

தூத்துக்குடியிலிருந்து சுமார் 16 கி.மீ. வடக்கில், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள பட்டணமருதூர் தொல்லியல் களம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2026 மார்ச் அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. சங்குத் தொழிலின் சான்றுகள், சங்கு வளையல் துண்டுகள், தங்கத் தகடு, சுடுமண் உருவங்கள், செப்புக் காசுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. செலாடன் மற்றும் பீங்கான் பானை ஓடுகள் விரிவான வணிகத் தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.



[ Pattanamarudur, பட்டணமருதூர், Archaeological Excavation, அகழாய்வு, Archaeological Site, தொல்லியல் களம், Shell Industry, சங்குத் தொழில், Ancient Trade, தொல்பொருட்கள் ]
Chief Minister of Tamil Nadu

கீழையூர் இரட்டைக் கோயில் - சோழர் காலக் கட்டடக் கலைப்பாணியை பிரதிபலிக்கும் சிறப்புமிக்க வரலாற்றுச் சின்னம்.தஞ்சாவூரிலிருந...
08/09/2026

கீழையூர் இரட்டைக் கோயில் - சோழர் காலக் கட்டடக் கலைப்பாணியை பிரதிபலிக்கும் சிறப்புமிக்க வரலாற்றுச் சின்னம்.

தஞ்சாவூரிலிருந்து சுமார் 35 கி.மீ. வடக்கிலும், அரியலூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில்கள், கல்வெட்டுகளில் அவனிகயதர்ப்ப ஈஸ்வரர் கோயில் மற்றும் அவனிகயதர்ப்ப ஈஸ்வரர் கிருகம் என அறியப்படுகின்றன. இரண்டு கோயில்களும் ஒற்றை மதிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இத்தலத்தில், அவரது 13-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும், முதலாம் பராந்தக சோழனின் 12-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும் காணப்படுகின்றன. பழுவேட்டரையர் கண்டன் அமுதனார் பாண்டியர்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவகோட்டங்களில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை சோழர்காலச் சிற்பக்கலையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

#கீழையூர்இரட்டைக்கோயில் #சோழர்காலம் #தமிழர்வரலாறு

[ கீழையூர் இரட்டைக் கோயில், Keelaiyur Twin Temples, அவனிகயதர்ப்ப ஈஸ்வரர், Avanigandharppa Eeswarar, சோழர் காலக் கட்டடக்கலை, Chola Architecture, சோழர்கால சிற்பக்கலை, Chola Sculpture Art, கல்வெட்டுகள், Chola Inscriptions

Chief Minister of Tamil Nadu

07/09/2026

பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் ஆய்வு மூன்றாம் கட்ட பணியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

06/09/2026

பூம்புகார் ஆழ்கடல் தொல்லியல் அகழ்வாய்வு மூன்றாம் கட்ட பணியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடக்கி வைத்தார்

06/09/2026

மாற்பிடுகுப்பெருங்கிணறு (சுவஸ்திக் கிணறு) | Sw****ka Well

கி.பி. 800-ஆம் ஆண்டு, பல்லவ மன்னன் தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில், கம்பன் அரையனால் இக்கிணறு வெட்டப்பட்டது. கல்வெட்டில் இது “மாற்பிடுகுப் பெருங்கிணறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவஸ்திக வடிவில் அமைந்ததால் “நாலுமூலைக் கேணி” என்றும் அழைக்கப்படுகிறது.

நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள், சுமார் 52 படிகள், சிற்பங்கள், அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் அரைவட்டப் படிகள் என இதன் கட்டடக்கலை சிறப்புகள் குறிப்பிடத்தக்கவை. பண்டைய தமிழர்களின் கட்டடக்கலை, பொறியியல் மற்றும் நீர் மேலாண்மைத் திறமைக்கு இது முக்கியச் சான்றாக விளங்குகிறது.

Built around 800 CE during the reign of Pallava king Dantivarman, the well was constructed by Kamban Araiyan. An inscription identifies it as “Marpidugu Perunkinaru”. Its swastika-shaped design gave it the name “Nalu Moolai Keni”.

With four entrances, about 52 steps, sculptures, decorative carvings and semicircular steps, the well showcases the advanced architectural, engineering and water-management skills of ancient Tamils.

#தமிழர்வரலாறு #பல்லவர்காலம் #தமிழர்கட்டிடக்கலை #நீர்மேலாண்மை

[ Sw****ka Well, Marpidugu Perunkinaru, Nalu Moolai Keni, Dantivarman, Kamban Araiyan, Pallavas, Tamil History, Ancient Architecture, Water Management, Inscription ]

மாற்பிடுகுப்பெருங்கிணறு (சுவஸ்திக் கிணறு) | Sw****ka Wellகி.பி. 800-ஆம் ஆண்டு, பல்லவ மன்னன் தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில...
04/09/2026

மாற்பிடுகுப்பெருங்கிணறு (சுவஸ்திக் கிணறு) | Sw****ka Well

கி.பி. 800-ஆம் ஆண்டு, பல்லவ மன்னன் தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில், கம்பன் அரையனால் இக்கிணறு வெட்டப்பட்டது. கல்வெட்டில் இது “மாற்பிடுகுப் பெருங்கிணறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவஸ்திக வடிவில் அமைந்ததால் “நாலுமூலைக் கேணி” என்றும் அழைக்கப்படுகிறது.

நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள், சுமார் 52 படிகள், சிற்பங்கள், அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் அரைவட்டப் படிகள் என இதன் கட்டடக்கலை சிறப்புகள் குறிப்பிடத்தக்கவை. பண்டைய தமிழர்களின் கட்டடக்கலை, பொறியியல் மற்றும் நீர் மேலாண்மைத் திறமைக்கு இது முக்கியச் சான்றாக விளங்குகிறது.

Built around 800 CE during the reign of Pallava king Dantivarman, the well was constructed by Kamban Araiyan. An inscription identifies it as “Marpidugu Perunkinaru”. Its swastika-shaped design gave it the name “Nalu Moolai Keni”.

With four entrances, about 52 steps, sculptures, decorative carvings and semicircular steps, the well showcases the advanced architectural, engineering and water-management skills of ancient Tamils.

#தமிழர்வரலாறு #பல்லவர்காலம் #தமிழர்கட்டிடக்கலை #நீர்மேலாண்மை

[ Sw****ka Well, Marpidugu Perunkinaru, Nalu Moolai Keni, Dantivarman, Kamban Araiyan, Pallavas, Tamil History, Ancient Architecture, Water Management, Inscription ]

Address

Chennai
600008

Opening Hours

Monday 9am - 5:45pm
Tuesday 10am - 5:45pm
Wednesday 10am - 5:45pm
Thursday 10am - 5:45pm
Friday 10am - 5:45pm

Telephone

+919500080546

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Department of Archaeology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Nadu Department of Archaeology:

Shortcuts

Share