15/03/2022
ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்து மாநில அரசின் தொழில் ரீதியான நலவாரியங்களை பாதுகாத்திடவும், புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றக் கோரி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, மனுஷி வீட்டு வேலைத் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி மாபெறும் பேரணி நடைப்பெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் கோரியும், மத்திய தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தலைமை செயலகத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் உயர்திரு.C.Vசண்முகம் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வ