சனாதன தர்மத்தின் அடிப்படையிலான நமது கலாச்சார பாரம்பரியம் குறைந்தது 15,000 ஆண்டுகள் பழமையானது. நமது மகத்தான ரிஷிகளும், ஞானம் பெற்றமுனிவர்களும் மனித குலத்திற்குத் தெரிந்ததிலேயே மிக உயர்ந்த அறிவை நமக்கு விட்டுச் சென்றனர். நமது பெரிய மன்னர்கள் மற்றும் முன்னோர்கள் இந்த பாரம்பரியத்தை கற்களால், அற்புதமான கோவில்கள் மூலம் செதுக்கியுள்ளனர். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கோயில் சா
ர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கினார்கள். 700 ஆண்டுகளுக்கு முன் நமது புனித பூமியை ஆக்கிரமித்த முகலாயப் படைகள் நமது கோவில்களை அழித்து அதன் செல்வங்களை கொள்ளையடித்ததுடன் இஸ்லாத்தையும். சுதந்திரத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது கோவில் சார்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூகங்களை திட்டமிட்டு அழிக்க தொடங்கினர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1947 முதல், இந்திய வரலாற்றை கம்யூனிஸ்டுகள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்களால் மேலும் சிதைத்து தவறாக பயன்படுத்தினர். இப்போது, மதச்சார்பின்மை என்ற குடையின் கீழ் இந்து கோவில்கள் மட்டுமே அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு அரசியல் அரசியல் அமைப்புகளை சார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளால் சட்டப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையடித்ததைத் தவிர, பெரும்பாலான கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த தனித்துவம் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் வாரிசுகளான நாம், நமது கோவில்களைக் காப்பாற்ற இப்போது ஒன்றுபட அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆலயம் காப்போம் என்பது
ஆலயம் காப்போம் என்பது இந்து பக்தர் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. நமது கோயில்கள், அவற்றின் பரம்பரை சொத்துக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதுடன், ஆகமம் ஒட்டி வழிபாடு மற்றும் கோயில் நிர்வாகம் செய்வதற்கான உரிமைகளை இந்துக்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் நாம் மொழி, ஜாதி மற்றும் அரசியல் பிரிவினைகளை தவிர்த்து, சேர்ந்து நிற்பதற்கான ஒரு வலுவான தளமாக ஆலயம் காப்போம் அமையும். ஆலயம் காப்போம் அமைப்பில் அதிக அளவிலான இந்துக்களை உறுப்பினராகச் சேர்ப்பதுடன், மற்ற இந்து பக்தர் குழுக்களையும் எங்களுடன் இணைத்து பணியாற்றுவதற்கு முயற்சி எடுப்போம்.
ஆலயம் காப்போம் மக்களுக்கு இந்து தர்மத்திலுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், அவர்கள் மதமாற்றில் ஈடுபடும் தீய சக்திகளின் கவர்ந்திழுக்கும் வித்தைகளுக்கு வீழாமலிருக்க பாடுபடும். இதில் உடன் சேரும் குழுக்கள் தங்கள் சுய அடையாளத்துடன் உள்ளூர் சேவைகளை தொடர்ந்து செய்யலாம்.
கூடிய விரைவில் ஆலயம் காப்போம் உறுப்பினர்கள் நமது இந்த மாபெரும் குறிக்கோளை நிறைவேற்றுவது மற்றும் தங்களது ஊர் கோயில்களை சேவைகளில் ஈடுபடுவது தொடர்பான செய்திகள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும். மத்திய குழுவினர் இதற்கு உறுதுணையாக செயல்படுவர்.
நம் அரும்பெரும் பொக்கிஷங்களான ஆலயங்களை காத்திட, லிங்க் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி உறுப்பினராக வேண்டுகிறோம். :
ட்விட்டர்: https://twitter.com/AalayamKappom