Arivar Padhai Off

Arivar Padhai Off Although the Dalit people have a history of two centuries of liberation, the history of these people

 #அண்ணல்  #அம்பேத்கரின்  #இஸ்லாமிய  #வெறுப்பு என்னும் புரட்டுமதமாற்றம் குறித்து, “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தேர்ந்தெடுக...
27/07/2024

#அண்ணல் #அம்பேத்கரின் #இஸ்லாமிய #வெறுப்பு என்னும் புரட்டு

மதமாற்றம் குறித்து,

“டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த தனது சகாக்களைக் கலந்தாலோசித்தார்
மாற்றத்திற்கான சரியான மதம். அவர் இப்போது சீக்கிய மதத்தைத் தழுவ முடிவு செய்திருந்தார். அவரது நண்பர்களும் சக ஊழியர்களும்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சீக்கிய மதத்திற்கு மாறுவதற்கு இந்து சபைத் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என எண்ணினர்; ஏனெனில், இந்துமகா சபை தலைவர்கள் சீக்கியம் ஒரு அன்னிய மதம் அல்ல என்று நம்பினர்,இது இந்து மதத்தின் பிறப்பிடமாக இருந்தது, எனவே சீக்கியர்களும் இந்துக்களும் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் சீக்கியர்கள் இந்து மகாசபை உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, இந்து மகாசபையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மூஞ்சே பம்பாய்க்கு அழைக்கப்பட்டார். மற்ற இரு நண்பர்கள் முன்னிலையில் டாக்டர். அம்பேத்கர், ஜூன் 18, 1936 அன்று இரவு ஏழரை மணிக்கு ராஜ்கிரிஹாவில் டாக்டர் மூஞ்சேவுடன் உரையாடினார். அம்பேத்கர் அனைத்து சிக்கல்களையும் சரிசெய்து, Dr.Moonje உடன் சுதந்திரமாக பேசினார். மறுநாள் டாக்டர்.அம்பேத்கரின் கருத்துகளின் நோக்கம் ஒரு அறிக்கையாக குறைக்கப்பட்டது அதை தனிப்பட்ட முறையில் Dr.Moonje ஒப்புதல் அளித்தார்.//

இப்படி இந்த மொத்த பேச்சும் இந்து மகா சபையின் செய்தித்தொடர்பாளர் Dr moonje அவர்களோடு நடத்தப்பட்ட ஒரு உரையாடல் தான்.

அதிலும் குறிப்பிட்ட முதல் பகுதி ஒரு இந்து இப்படியாக நினைப்பார் என்று தான் ஆங்கில மூலத்தில் 240 வது பக்கத்தில் கடைசி பத்தியில் வருகிறது.

அண்ணல் சொல்லி இருப்பதில் என்ன தவறு ????

The second question is, looking at these three alternative
faiths purely from the standpoint of the Hindus, which is the
best—Islam, Christianity or Sikhism?

இரண்டாவது கேள்வி, இந்த மூன்று மாற்று நம்பிக்கைகளையும் இந்துக்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்ப்பது.
என்று தெளிவாக ஒரு இந்து ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறினால் எப்படி பார்ப்பார் என்பது பற்றி சொல்லி இருக்கிறார். இஸ்லாமுக்கு அல்லது கிருத்துவத்துக்கு மாறினால் அது நாட்டுக்கு கேடு என்று ஒரு இந்து நினைப்பார் அதுவே சிக்கியராக மாறினால் அது ஏற்க்கணவே இந்து மத கலாச்சாரத்தை தானே பின் பற்றுகிறது அதனால் பிரச்னை இல்லை என்று நினைப்பா்கள் ( இந்துக்கள்) என்று மிகத்தெளிவாக தான் சொல்கிறார்.

#அம்பேத்கர்

சித்தீக் காப்பான் டெல்லியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளரும், கேரளா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (KUWJ), ட...
05/08/2022

சித்தீக் காப்பான் டெல்லியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளரும், கேரளா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (KUWJ), டெல்லி கிளையின் செயலாளரும் ஆவார்.அக்டோபர் 2020இல் 19 வயது தலித் பெண் உத்தர் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் எனும் ஊரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஆவணப்படுத்தச் சென்ற சித்தீக் காப்பானை இன்னும் மூன்று முஸ்லிம் ஆண்களோடு தேசதுரோக வழக்கின் பெயரில் அநியாயமாக கைது செய்தனர். 669 நாட்களாக சிறையில் வாடும் இவருக்கு ஜாமீன் வழங்க அலஹாபாத் நீதிமன்றம் மறுத்துள்ளது. http://www.sagodharan.com/justice-denied-to-siddique-kapan/

05/08/2022
பெளத்த மதத்தில் உள்ள பல கொள்கைகளை பற்றி தொடர்ந்து விரிவாக பேச இருக்கிறோம்.. தங்களின் ஆதரவை கொடுத்து உதவுகள். ஜெய் பீம் ஜ...
05/08/2022

பெளத்த மதத்தில் உள்ள பல கொள்கைகளை பற்றி தொடர்ந்து விரிவாக பேச இருக்கிறோம்.. தங்களின் ஆதரவை கொடுத்து உதவுகள். ஜெய் பீம் ஜெய் புத்தம்.



அறிவர் பாதை youtube சேனல் மூலம் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வரலாற்றையும், அரசியலையும் பேச இருக்கிறோம். நன்றி, வணக்க.....

வேதகால கப்ஸா - இடையீடுஇந்திய வரலாற்றில் குறைந்தபட்ச அறிமுகம் உள்ளோருக்கெல்லாம் தெரிந்த விஷயம் இத்துணைக் கண்டத்தில் கற் ச...
27/07/2022

வேதகால கப்ஸா - இடையீடு
இந்திய வரலாற்றில் குறைந்தபட்ச அறிமுகம் உள்ளோருக்கெல்லாம் தெரிந்த விஷயம் இத்துணைக் கண்டத்தில் கற் சிலைகளின் உருவாக்கம் அறவாழியான் அசோகன் காலத்தில் இருந்தே தொடங்கியதென. அப்போதும் கூட பாறைகளை குடைந்து உருவாக்கும் வரைவுகளே பெரும்பான்மையாகவும் தனித்த சிலைகள் என்பன குறைவாகவும் இருப்பது கண்கூடு. தம்மசக்கரம், தம்மசிங்கம் போன்றவைகளுக்குதான் தனிச் சிலைகள் கிடைக்கின்றன. மனித அல்லது தெய்வ உருவங்களை சிலைகளாக வடிக்கும் கலை அப்போதும் உருவாகவில்லை.
புத்தருக்குமே உருவம் அசோகன் எழுப்பிய சைத்யங்கள், ஸ்தூபிகளில் எங்குமே காண முடியாது. அதிகபட்சம் புத்தரின் பாதச் சுவடு, சைத்ய உருவம், போதி மரம் போன்றவைகளையே அவரை குறிக்க அப்போது பயன்படுத்தினார்கள். கிமு 2ம் நூற்றாண்டில் இருந்துதான் சிலைகளின் வருகை தொடங்குகிறது. அதற்கும் பின்னர் கிபி 1ம் நூற்றாண்டு தொடங்கி கிரேக்கர்கள் பெருமளவில் வந்து குடியேறி புத்த தம்மத்தை ஏற்று அவர்கள் தங்கள் கடவுளர் சிலைகளை ஒத்து இங்குள்ள கடவுளர்களுக்கு காந்தாரப் பகுதிகளில் உருவாக்கிய சிலைகளே இந்திய துணைக் கண்டத்தின் முதற் சிலைகள். இன்றைக்கும் பாகிஸ்தான் ஆஃப்கனிஸ்தன் பகுதிகளில் அகழாய்வுகளில் அந்த காலத்திய சிலைகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
எனில் கேள்விகள்:
1. வேதங்களிலும், புராணங்களிலும் பேசப்படும் சிலைகள் எந்த காலத்தவை?
2. கோதம புத்தருக்கு முன்னால் தள்ளப்படும் வேதகாலத்தில் சிலைகள் வந்தது எப்படி?
முகலாயர் காலத்தில் வேஷ பமணர்கள் எழுதித் தள்ளிய புழுகு மூட்டைகளில் இச்சிலைகள் வந்து அமர்ந்து கொண்டதை வரும் காலங்களில் விரிவாக துவைத்தலசி காயப்போடுவோம்.
#அயோத்திதாசரியம் #பூர்வபெளத்தம்

Ravana Ambedkar

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மற்ற சிறுமிகளும் படிக்கவில்லை என்ற காரணத்தால், மைனர் தலித் சிறுமியை பள்ளிக்கு...
27/07/2022

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மற்ற சிறுமிகளும் படிக்கவில்லை என்ற காரணத்தால், மைனர் தலித் சிறுமியை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று உள்ளூர்வாசிகள் சிலர் கூறியதை அடுத்து, ஏழு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பவாலியாகெடி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் - சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையே மோதல் வெடித்தது, சிலர் காயமடைந்தனர், போலீசார் தெரிவித்தனர்.

கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அவதேஷ் குமார் ஷேஷா, ஒரு புகாரை மேற்கோள் காட்டி, 16 வயது பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த சிறுமி சனிக்கிழமை மதியம் உள்ளூர் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

சில நபர்கள், சிறுமியின் பள்ளிப் பையைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, மேலும் கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்கள் அவ்வாறு செய்யாததால் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதாக அவர் கூறினார்.

பின்னர், சிறுமியின் குடும்பத்தினருக்கும் குற்றவாளியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது, என்றார்.

புகாரைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை ஏழு பேரைக் கைது செய்தனர், என்றார்.

மற்றொரு தரப்பின் குறுக்கு புகார், தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறுமியின் சகோதரர் மற்றும் மூன்று பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

மோதலில் காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக திரு ஷேஷா கூறினார், ஆனால் அவர்களின் சரியான எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.

சிறுமி தனது பள்ளிப் பையைப் பறித்துச் சென்றதாகவும், வகுப்புகளுக்கு வருவதை எதிர்த்ததாகவும் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது சகோதரர் அவர்களின் கருத்துக்களை எதிர்த்தபோது அவரைத் தாக்கியதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

24/07/2022

லட்சுமிக்குட்டிக்கு
புரியவே இல்லை.

பால்க்கார தாத்தா
வந்திருக்காங்க..!

கேபிள்கார ‌அண்ணன்
வந்திருக்காங்க...!

கீரைக்காரப் பாட்டி
வந்திருக்காங்க...!

என்ற போதெல்லாம்
ஒன்றுமே சொல்லாத
அம்மா..

குப்பைக்கார மாமா
வந்திருக்காங்க..!

என்ற போது
ஏன் திட்டுகிறாளென..?

__கண்மணிராசா__

பார்ப்பனியத்தை எதிர்ப்பவர் என்றால் பகிருங்கள்...
24/06/2022

பார்ப்பனியத்தை எதிர்ப்பவர் என்றால் பகிருங்கள்...


 #கட்டவிழ்க_படும்_உண்மைகள்   – Dr. Ambedkar’s Talk to BBC London//There is a third consideration which should make an ap...
20/06/2022

#கட்டவிழ்க_படும்_உண்மைகள்

– Dr. Ambedkar’s Talk to BBC London
//There is a third consideration which should make an appeal to the world and particularly the South East Asian part of it. The world has been faced with the onslaught of Karl Marx and the Communism of which he is made the father//
மேற்கண்ட வரிகளுக்கு கீழ் காணும் வரிகள் தான் சரியா மொழி பெயர்ப்பா
நல்லா ஆங்கிலம் தெரிந்த நபர்கள் சொல்லுங்கள்.
// உலகை அழிக்கும் குறிப்பாக அதன் தென் கிழக்கு ஆசியப்பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்று உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும் தான் அந்த மூன்றாவது அம்சம்.//
(அம்பேத்கர் நூல் தொகுதி 37 தமிழ் மொழி பெயர்ப்பு பக்கம் 657.)
என் அறிவுக்கு எட்டிய வரையில்
காரல் மார்க்ஸ் மற்றும் அவரது கம்யூனிசம் உலகத்தின் மீது குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவின் மீது தாக்குதல் நடத்துகிறது. எந்த வகையான தாக்குதல் என்று பார்த்தால் (secular affairs) மத சார்பற்ற தன்மையை நோக்கி நகர வைக்கும் ஒரு தாக்குதல் மதங்களின் மீது நடத்துகிறது. என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பை போட்டு கேள்வி கேட்கும் தோழர்கள் கையில் ஆங்கில பதிப்பும் நிச்சயம் இருக்கும்.
படிப்போம் ஆனால் எங்களுக்கு தேவையானது எழுதுவோம் இப்படிக்கு
நாங்கள் விமர்சகர்கள்.
– Dr. Ambedkar’s Talk to BBC London
In the short time allotted to me, I am asked to answer two questions. First is ‘why I like Buddhism ’ and the second is ‘How useful it is to the world in its present circumstances.’
I prefer Buddhism because it gives three principles in combination which no other religion does. All other religions are bothering themselves with God and Soul and life after death. Buddhism teaches Prajna (understanding as against superstition and supernaturalism). It teaches Karuna (love). It teaches Samata (equality). This is what man wants for a good and happy life on earth. These three principles of Buddhism make their appeal to me. These three principles should also make an appeal to the world. Neither God nor Soul can serve Society.
//There is a third consideration which should make an appeal to the world and particularly the South East Asian part of it. The world has been faced with the onslaught of Karl Marx and the Communism of which he is made the father//
The challenge is very serious one – That Marxism and Communism relate to secular affairs. They have shaken the foundation of the religious system of all the countries. This is quite natural for the religious system although today is unrelated to the secular system, yet is the foundation on which everything secular rests when the secular system cannot last very long unless it has got the sanction of the religion however remote it may be.
I am greatly surprised at the turn of mind of the Buddhist countries in South East Asia, towards communism. It means that they don’t understand what Buddhism is. I claim that Buddhism is a complete answer to Marx and his Communism. Communism of the Russian type aims to bring it about by a bloody revolution. Those who are eager to embrace communism may note that the Sangh is a Communist organization. There is no private property. There has not been brought about by violence. It is the result of a change of mind and yet it has stood for 2500 years. It may have deteriorated but ideals are still binding. The Russian Communism must answer this question. They must also answer two other questions. One is that why communistic system is necessary for all times. They have done the work which, it may be admitted the Russians could never have been able to do, but when the work is done why the people should not have freedom accompanied by love as the Buddha preached. The South East Asian countries must, therefore, be aware of jumping into Russian net. They will never be able to get out of it. All that is necessary to them is to study the Buddha and what he taught, a right and to give political form to his teachings. Poverty there is and there will always be. Even in Russia there is poverty, but poverty cannot be an excuse for sacrificing human freedom.
Unfortunately, the Buddha’s teachings have not been properly interpreted and understood. That his gospel was a collection of doctrines and social reforms have been completely understood. Once it is realized that Buddhism is a social gospel, the revival of it would be everlasting event, for the world will realize why Buddhism makes such a great appeal to everyone.
B. R. Ambedkar
26, Alipur Road,
New Delhi
12th May 1956.

ஜிப்ஸி

 #அம்பேத்கர்_நூல்_தொகுதி -1  #தமிழ்_மொழிபெயர்ப்பு  #இந்தியாவில்_சாதிகள்  #எதிர்_வெளியீடு  #தமிழ் #இந்தியாவில்_சாதிகள்_அவ...
19/06/2022

#அம்பேத்கர்_நூல்_தொகுதி -1 #தமிழ்_மொழிபெயர்ப்பு
#இந்தியாவில்_சாதிகள் #எதிர்_வெளியீடு #தமிழ்
#இந்தியாவில்_சாதிகள்_அவற்றின்_அமைப்பியக்கம்_தோற்றம்_வளர்ச்சி
அம்பேத்கரின் நூல் தொகுதி ஒன்றிலும்,இந்தியாவில் சாதிகள் புத்தகதிலும் தமிழ் மொழி பெயர்ப்பில் (பிராமணர்களே சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடு அர்த்தமற்றதே) இந்த வரிகள் உள்ளது
(இந்தியாவில் சாதிகள் எதிர் வெளியீடு பக்கம் 25)
ஆனால் ஆங்கில மூல நூலில் கீழ் கண்டவாறு உள்ளது
(The spread and growth of the Caste
system is too gigantic a task to be achieved by the power or cunning of an
individual or of a class. //Similar in argument is the theory that the Brahmins
created the Caste//)
சாதி முறையும் அதன் வளர்ச்சி பரவல் என்பது தனி ஒரு நபர் அல்லது ஒரு தனி வர்க்கத்தின் ( ஒரு குழுவின்) சக்தி அல்லது தந்திரத்தால் நடந்துவிடாது. //அதை போலத்தான் பார்ப்பனர்கள் சாதியை படைத்தார்கள் என்பதும்.//
அதான் ஒரு குழுவால் இது நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டார் அப்போ பார்ப்பனர்கள் சாதிய உருவாக்க வில்லை தானே என்ற கேள்வி அடுத்து வரும்.
மொத்த கட்டுரையும் ஒழுங்காக படித்து அதன் கருவை புரிந்து கொண்டால் தெளிவாக புரியும்.
இப்போது இருக்கும் சாதிய முறைமையில் மிகவும் இறுக்கமாக இருப்பது அகமணமுறை ( வேறு சாதியில் மணம் முடிக்காமல் இருப்பது) இந்த முறைமையை அழுத்தமாக கடைப்பிடித்துக்கொண்டிருந்த வர்க்கம் பார்ப்பன வர்க்கம் தான். அவர்களை பார்த்து அடுத்து இருந்தவர்கள் போலச் செய்தல் முறை படி அதை கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அடுத்தடுத்த சாதிகளின் பிறப்பாக இருந்திருக்க முடியும். என்று நிறுவுகிறார்.
மனுவும் சாதியை உருவாக்கவில்லை ஏற்க்கனவே இருந்த சாதிய முறைமைக்கு தத்துவங்களை அழுத்தமாக எழுதிவைத்த வேலை மட்டுமே மனுவினுடையது என்று கூறுகிறார்.
இதை வாசிக்கும் பொது மனு நல்லவர் என்று அம்பேத்கர் சொல்ல வருகிறார் என்றும் திரித்து பேச பெரும் கூட்டம் இங்கு உலவுகிறது.
அதே வழியில் தான் பார்ப்பனர்கள் சாதிய படைத்தனர் என்னும் கோட்பாடு அர்த்தமற்றது என்னும் வரியை பிடித்து தொங்கும் intellectualகளும்.
ஆனால் இவர்கள் ஆங்கில மூலத்தை வாசித்து இருக்க மாட்டார்கள் என்ற கருதுவதும் கூட தவறு என்றே தோன்றுகிறது. வாசித்து உண்மையே தெரிந்தாலும் அண்ணலின் மீது வன்மம் கொட்ட அல்லது அவர் கருத்து ஆய்வுகளை குப்பை என்று சொல்ல வரிந்துகட்டிகொண்டு வந்துவிடுவார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு பெரும் பிரச்சினை அண்ணலின் பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு.

ஜிப்ஸி

18/06/2022

மைக் வாங்க உதவி செய்த த. நீலவேந்தன் அவர்களுக்கு நன்றிகள்..

Address

CHNNAI
Chennai
600019

Alerts

Be the first to know and let us send you an email when Arivar Padhai Off posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arivar Padhai Off:

Share

Category