05/05/2026
கே சி கே எனும் மந்திரம் ... பவானியில் எங்கும் ஒலித்திருக்கிறது... எளிதாக அணுகலாம் உரிமையுடன் பேசலாம்.. இதுவே இவரின் வெற்றிக்கு முதல் படி .. அரசியலில் மிகப்பெரிய சாணக்கியத்தன்மையை திரு கருப்பணன் அவர்கள் அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது.. மற்றும் ஆகச்சிறந்த அரசியல்வாதியும் ஆகிவிட்டார்...
ஏனென்றால் எனக்கு விவரம் தெரிந்து பவானி அதிமுகவின் கோட்டையாக தான் இருக்கிறது.. ஆனால் இவருக்கு முன் பவானி என்பது பெரிய அளவில் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக இல்லை ஏன் ஆற்றுக்கு அந்தப்புறம் இருக்கும் குமாரபாளையம் கூட நட்சத்திர அந்தஸ்துடன் தங்கமணி என்ற ஆஸ்தான அமைச்சர் வலம் வந்து கொண்டிருந்தார் ஆனால் பவானி எம் எல் ஏ என்ற ஒரு அளவில்தான் இருந்தது ..
2016ல் இரண்டாவது முறையாக செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த பொழுது தமிழக அமைச்சரவையில் பவானியும் ஜொலிக்க ஆரம்பித்தது ஆம் கே சி கருப்பணன் அவர்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்..
அதன் பிறகு பவானி என்பது வெளியில் பலருக்கும் தெரிய ஆரம்பித்தது .. ஆற்றுக்கு அந்த பக்கம் தங்கமணி அவர்களும் இந்த பக்கம் கருப்பணன் அவர்களும் பெரும் பலமாகவே அதிமுகவுக்கு மாற ஆரம்பித்தார்கள்...
பின் 2021 தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்த போதும் கே சி கருப்பண்ணன் அவர்கள் பவானி தொகுதியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தார் .. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரானார் பின் எதிர்க்கட்சியாக அமர்ந்து எடப்பாடி அவர்களின் அனைத்து கட்சிக் கூட்டங்களிலும் முக்கிய நபராகவே திகழ ஆரம்பித்தார்..
இப்பொழுது மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க ஆரம்பித்தபோது விஜய் என்ற மாபெரும் அலை மொத்த தமிழ்நாட்டில் 107 வாரி சுருட்டி சென்றது .. இதில் ஆஸ்த்தான அமைச்சராக இருந்த திரு தங்கமணி அவர்களின் குமாரபாளையம் தொகுதியும் தான் ..
ஆனால் பவானியில் மீண்டும் தனது பெரும்பான்மையுடன் 8000க்கு மேற்பட்ட வாக்குகளுடன் நான்காவது முறையாக அதாவது தொடர்ந்து மூன்றாவது முறையான ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்கிறார் திரு கே சி கருப்பணன் அவர்கள்.. இங்கு கே சி கே அவர்களுக்கும் அதிமுகவிற்கும் தனி செல்வாக்கு உண்டு அதேபோல இவருக்காக பாமக உழைக்கும் உழைப்பும் அபரிவிதமானது பல இடங்களில் வன்னியர் வாக்குகள் இங்கும் சிதறாமல் இவரை காத்துள்ளது ... காரணம் 10.5 மற்றும் அன்புமணியின் மக்கள் படை அத்தோடு இவரின் மீது இருந்த தனிப்பட்ட மதிப்பு.. இவை அனைத்தும் சேர்ந்து இவரை இந்த அலையில் இருந்து காத்துக் கொண்டு போய் உயரத்தில் ஏற்றிவிட்டது..
அதுமட்டுமின்றி இவர் சார்ந்த சமூக வாக்குகளும் இங்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது.. இவர் கோயில்களுக்கு செய்யும் பல உதவிகளும் அன்னதானங்களும் ஆன்மீக ரீதியாகவும் இவருக்கு கை கொடுத்துள்ளன...
ஹாட்ரிக் வெற்றியையும் படைத்து நான்காவது முறையாக எம்எல்ஏவாகவும் ஆகும் திரு. K.C Karuppanan அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் வன்னியர் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ..
வாழ்த்துக்கள் தலைவரே..
Copy ஸ்ரீதர் வரதராசன்