08/01/2026
1953-ல ராஜாஜி குலக்கல்வி திட்டத்த கொண்டு வர்றார். அதன் எதிர்ப்புல பதவி விலகுறார். அப்ப காமராஜர முதல்வராக்க முடிவு பண்றாங்க. ஆனா அவர் MP, முதல்வராக MLA-வா இருக்கனும்னு பெரியார் அவர குடியாத்தம் இடைத்தேர்தல்ல நிக்க சொல்றார். காமராஜர் தயங்கி நான் தென்மாவட்டம் வடக்க எப்டி ஜெயிக்கனு கேட்கறார். நீ நில்லு நான் ஜெயிச்சு குடுக்குறேனு "காமராஜர் பார்ப்பனரல்லாத சாமானியத் தமிழன். அவர் ஜெயிச்சா தமிழ்நாடு ஜெயிச்ச மாதிரி"-னு பெரியாரே பிரச்சாரம் பண்றார். பெரியார ஆதரிச்சு காமராஜர எதிர்த்து திமுக போட்டி போடாம ஒதுங்கிருச்சு. 1963-ல முதல்வர் பதவியிலிருந்து விலகி தேசியக்கட்சி பணியத் தொடர்றார் காமராஜர்.
காமராஜர் மேற்பார்வையில பக்தவத்சலம் முதல்வராகுறார்.
1963 - 1965-ல இந்திய மட்டும் ஆட்சிமொழியாக்கவும், ஆங்கிலத்த தேவைபட்டால் பயன்படுத்தலாம்னு சட்டம் வருது. தமிழ்நாடெங்க்கும் மாணவர் போராட்டம் பத்திக்கிது. திமுக முன்னனிலருந்து போராட்டத்த இயக்குது. ராஜ்யசபாவுல திமுகவின் ஒரே உறுப்பினராக அண்ணா "இந்தி எண்ணிக்கையில் அதிகம் என்பதால் தேசிய மொழியாக்கினால், தேசிய பறவை மயிலுக்கு பதிலாக காகம் தேர்ந்தெடுக்கப்படும்"-ன்றார்.
1965 குடியரசு தினத்த, துக்க நாளா அறிவிச்சு ஜனவரி 25
Constitution எ*ரி*ச்சு கைதாகுறாங்க அண்ணாவும் கலைஞரும். மதுரை, சிதம்பரம்,கோவைன்னு மாநிலமெங்கும் மாணவர் போராட்டம் பெருகுது. சின்னசாமி, அரங்கநாதன்னு பல மொழிப்போர் தியாகிகள் உயி*ரை நீ*த்*துகிறாங்க. கோடம்பாக்கத்துல ஒன்றிய அரசோட ரயில மறிக்க மாணவர் கூட்டமா போக அங்க போலீஸ் துப்க்கி சூடு நடத்துது.
அதுல ராஜேந்திரன்-ற மாணவர் இறக்க மாநிலம் முழுக்க கல்லூரிகள மூடி மாணவர்கள் போராட்டம் பண்ண வர்றாங்க. சுமார் 10000 பேர் அரசால் கைது செய்யபட்டு சிறை நிரம்பி வழியிறத பார்த்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆங்கிலம் இணைப்பு மொழியா தொடரும்னு சட்ட திருத்தம் செய்றார். சுமார் 70 பேர் இறப்பின் முடிவுல போராட்டம் முடிவுக்கு வருது. விளைவு: 1967-ல காங்கிரஸ் சகாப்தத்த முடிச்சு திமுக ஆட்சிக்கு வருது. எந்த மாணவர்கள போலீஸ் சுட்டு கொன்னுதோ அதே மாணவர் யூனியன் லீடர் சீனிவாசன காமராஜருக்கு எதிரா நிறுத்தி தோக்கடிக்குது திமுக.
"காமராஜரையே தோக்கடிச்ச ஊரு சார். காமராஜரையே தோக்கடிச்ச ஊரு சார்"-ன்னா காமராஜர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் சும்மா ஒன்னும் சுலபமா தோக்கடிக்கப்படல. அன்னைக்கு தலைவர்கள விட ஏந்தி நிற்கக்கூடிய கொள்கைகள் பெருசா இருந்துச்சு. எது இந்த மண்ணுக்கான அரசியலோ, அத யாரு தாங்கிப்பிடிக்கறாங்களோ அவங்கள இந்த மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. 1967-ல காமராஜர் மட்டுமில்ல காங்கிரஸே தோத்து அண்ணா தலைமையில திமுக அரியணை ஏறுனதுக்கு அரிசி தட்டுப்பாடு, ராஜாஜியோட கூட்டணி, எம்.ஜி.ஆர் சு*ட*ப்பட்டதால விழுந்த அனுதாப ஓட்டுகள்ன்னு பல காரணிகள் இருந்தாலும் இந்தி எதிர்ப்ப திமுக கையில எடுத்து அதுல வெற்றியும் பெற்றது தான் முதன்மைக் காரணமா இருக்க முடியும்.
"அண்ணாதுரை கொண்டு வந்தவற்றையெல்லாம் மாற்ற நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சம் இருக்கிற வரையில் இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆள்வதாக பொருள்" 🔥🖤❤