Naam Tamilar Katchi Palayampatti

Naam Tamilar Katchi Palayampatti நாம் தமிழர் கட்சி அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

28/03/2026

கல்வி, மருத்துவம் போன்ற அரசு நடத்த வேண்டிய துறைகளை எல்லாம் தனியாரிடம் கொடுத்துவிட்டு,
உயிரைக் கொல்லும் சாராய ஆலைகளையும் மதுபான கடைகளையும் அரசு நடத்துகிறது.

18/03/2026

பழையச்சோற்றை வெறுத்தாய்.

நீர் ஆதாரத்தை வெறுத்தாய்.

உலகநாடுகள் இப்போ அதை சந்தைப்படுத்துகிறது.

18/03/2026

வேளாண்மை படிக்காதவன் செய்யும் தொழில் என்று கற்பித்தவன் எவன்?

நாம் தமிழர் கட்சி அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள்ஆறுகளில், நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமா...
15/03/2026

நாம் தமிழர் கட்சி அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள்

ஆறுகளில், நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

ஆறுகளுக்கான நீர்வழிப் பாதைகளை ஒழுங்கமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித் தடங்கள் சீர்படுத்தப்படும்.

நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு மீட்டெடுக்கப்படும்.

ஏரி.குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும்.

நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள்

ஆறு, ஏரி, கண்மாய், கரணை, ஏந்தல், குளம், குட்டை கரைகளைச் கற்றி வேப்பமரம், புங்கைமரம், பணிக்கொன்றைமரம், நாவல்மரம், கவிக்கொன்றைமரம், ஆலமரம், பூவரசுமரம், மருதமரம், அரசமரம், தேக்குமரம், கோங்குமரம் மற்றும் பனைமரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்றாற் போல் நீர் நிலைகள் மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படும்.

நீர் நிலைகளின் கரைகளைச் சுற்றி நடப்படும் பனைமரங்கள் நிலத்தடிக்குக் கீழே ஆயிரம் அடிவரை சென்று நீரைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். அது வேளாண்மைக்குப் (விவசாயத்திற்குப்) பயன்படும். தவிரப் பனையரத்தில் வௌவால்கள் சென்று அடைந்து தங்கும். அந்தப் பகுதி விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும், வேளாண் தொழிலுக்கு நண்பனாக இருக்கும். அதனால் நீர்நிலைகளைக் காத்து உழவுக்கு உதவியாக நிற்கும் பனை மரங்கள் வளர்க்கப்படும்.

அனைத்து நீர்நிலைகளும் முன்வேலி அமைக்கப்பட்டு,மின் விளக்குகள் பொருத்தப்பட்டுச் சிறப்புக் காவல்படையினரைக் கொண்டு பாதுகாக்கப்படும்.

ஏரி குளங்களுக்கான நீர்வரவுத் தடங்களில் இருக்கிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்படும்.

நீர்த் தேவை அதிகமாகத் தேவைப்படும் இடங்களில் புதிய நீர்வரவுத் தாரைகள் உருவாக்கப்படும்.

ஆழ்துளைக் குழாய்களின் மூலம் நீரை எடுப்பது படிப்படியாகக் குறைக்கப்படும். ஏரி கண்மாய், குளம் குட்டைகளில் நீரைச் சேமித்தால் ஆழ்துளைக் குழாய் நீர் தேவையிருக்காது இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.

“நீர் நிலைகளின் கரைகளைச் சுற்றி நடப்படும் பனைமரங்கள் நிலத்தடிக்குக் கீழே ஆயிரம் அடிவரை சென்று நீரைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். பனைமரத்தில் வௌவால்கள் சென்று அடைந்து தங்கும். அந்தப் பகுதி உழவு நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும் வேளாண் தொழிலுக்கு நண்பனாக இருக்கும்"

அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் முதற்கட்ட பரப்புரை மேற்கொள்ளப்பட்டது . தொகுதி வேட்பாளர் "க.மணிமாறன்" அவர்களுடன் நமது...
09/03/2026

அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் முதற்கட்ட பரப்புரை மேற்கொள்ளப்பட்டது . தொகுதி வேட்பாளர் "க.மணிமாறன்" அவர்களுடன் நமது உறவுகளும் கலந்து கொண்டு வாக்குறுதிகள் அடங்கிய துண்டறிக்கைகளை மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

#அருப்புக்கோட்டை

07/03/2026

கட்சத்தீவில் பறக்கும் புலிக்கொடி! 🔥

சொல் அல்ல மாற்றம் !  செயலே மாற்றம் !  மாற்றத்தை விரும்பும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களின் வேட்பாளர் "க.மணிமா...
07/03/2026

சொல் அல்ல மாற்றம் ! செயலே மாற்றம் ! மாற்றத்தை விரும்பும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களின் வேட்பாளர் "க.மணிமாறன்" அவர்களை தொகுதி முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இன்று முத்துசாமிபுரம் கிளை சார்பாக முத்துசாமிபுரம் முதல் பந்தல்குடி வரை சுவரொட்டி ஓட்டப்பட்டது.

#அருப்புக்கோட்டை

03/03/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
மணிமாறன் >Dip.Tool study and Manufacturing (NTTF-CBE) >Generic Manufacturing Skills (NTUC Learning Hub-Singapore) >Project Management Profesional(PMP)

26/02/2026

பொதுவுடைமை போராளி இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு ஐயாவுக்கு செவ்வணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.

25/02/2026

கண்ணீர் வணக்கம்!

நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!

பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!

வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..!

விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..!

வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..!

சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!

தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..!

ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..!

பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது.

பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நாம் தமிழர் கட்சியின்  #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணிமாறன்.
24/02/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நாம் தமிழர் கட்சியின் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணிமாறன்.

23/02/2026

"தேவாரம், திருவாசகம், சங்க இலக்கியங்கள் எனப் பெருமைமிக்க நம் தமிழ் மொழி சிதைந்து வருவதைச் சுட்டிக்காட்டி, தன் தம்பி-தங்கைகளிடம் இது வெறும் 'ரசிகர் கூட்டம்' அல்ல, தமிழின மீட்சிக்கான 'லட்சியக் கூட்டம்' என்று மக்களின் மாநாட்டில் ஆவேசமாக உரையாற்றினர் அண்ணன் செந்தமிழன் சீமான்

Address

Aruppukkottai
626101

Alerts

Be the first to know and let us send you an email when Naam Tamilar Katchi Palayampatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share