10/10/2024
ரத்தன் டாடா மறைந்தார்... சாம்ராஜ்யம் சரிந்தது...
இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வது வயதில் மும்பை மருத்துவமனையில் வயது முதிர்வால் உடல்நலமின்றி மறைந்தார்...
1937 டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்த ஒரு வெளிச்சம் இன்று ஓய்வெடுக்க சென்று விட்டது...
உலகத்திலேயே எந்தவொரு தொழிலதிபருக்கும் கிடைக்காத பல நல்ல விடயங்கள் இவருக்கு கிடைத்தது... பல பெருமைகளும் தேடி வந்தது...
பொதுவாக ஒருவரது சுயசரிதை புத்தகத்தை அவர்களே வெளியிடுவார்கள், ஆனால் ரத்தன் டாடாவின் சுயசரிதை புத்தகத்தை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் இதற்கான காப்புரிமையை 2 கோடிக்கு பெற்றது...
டாடா செய்த மிகப்பெரிய காரியங்களில் மிக முக்கியமானது 2008 ஆம் ஆண்டில், Ford மோட்டார் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய Elite பிரிட்டிஷ் கார் பிராண்டுகளை டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் உலக அளவில் பேசப்பட்டது...
இவ்வளவு பெரிய வர்த்தகத்தை செய்த டாடா அவர்கள் அடுத்த ஆண்டு அதாவது 2009 ம் ஆண்டு மக்களின் கார் என அன்போடு அழைக்கப்பட்ட டாடா நானோ காரை அறிமுகப்படுத்தினார்...
இந்த மாதிரி பல விஷயங்களை குறிப்பிட்டு சொல்லலாம்... உண்மையிலேயே ரத்தன் டாடா மாதிரி பணம் பெற்ற தொழிலதிபர்கள் நெறையா இருக்கலாம்...இனிமேலும் வரலாம்... ஆனால் ரத்தன் டாடா மாதிரியான குணம் பெற்ற ஒருத்தர் வருவது கடினம் தான்...
ஓய்வெடுங்கள் ரத்தன் டாடா...
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..