29/12/2025
PSO 546 - கிராம அலுவலர்களை தண்டிப்பதற்கு அறிக்கை அளித்தல்
Reporting Village Officers for punishment :
1. தங்கள் கடமைகளில் தவறும் கிராம அலுவலர்கள், பணியாளர்கள் இவர்களைப் பற்றி, அவர்களது குற்றத் தன்மைக்கு ஏற்றவாறு, வட்டாட்சியருக்கு / கோட்ட ஆட்சியருக்கு அறிவிக்க வேண்டும்
PSO 560 - முதல் தகவல் அறிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்
Instructions regarding first information reports...
1. முதல் தகவல் அறிக்கைப் புத்தகத்தில், பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு ஒரு தொடர்ச்சியான எண்ணைக் கொடுக்க வேண்டும்; இந்த எண் துணைப் பகுதிகளில் பதிவதற்குக் குற்ற எண்ணாக எடுத்துக் கொள்ளப்படும்.
2. எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமே, சாதாரணமாக, தகவலாளரின் பெருவிரல் அடையாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், முறையீட்டாளர் / தகவலாளரிடம் உரிய முறையான ஒப்புகை பெற்று, யாதொரு கட்டணம் இன்றி, முதல் தகவல் அறிக்கை நகல் கொடுத்திட வேண்டும்.
PSO - 559 - குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு, அதிகார வரம்புடைய காவல் நிலையம் எது என்பது குறித்து, ஐயம் ஏற்படுகையில் வழக்குகளைப் பதிவு செய்தல்
Registry of cases when station limits of occurence are doubtful...
1. இரண்டு காவல் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு எல்லைக்கு அருகில் ஒரு குற்றம் செய்யப்பட்டு, அது எந்த காவல் நிலைய வரம்புக்குள் நிக்ழந்தது என்னும் ஐயம் ஏற்படுகையில், அது முதலில் அறிவிக்கப்பட்ட காவலர், வழக்கைப் பதிவு செய்து, புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்; அதை வைத்துக் கொள்ள வேண்டிய காவல் நிலையத்தைப் பிற்பாடு நிர்ணயிக்க வேண்டும்.
2. ரயில் காவல் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்ட ஒரு குற்றமானது, அந்த ரயில் பாதை வழியில் உள்ள ஒரு மாவட்டக் காவல் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டால், இரண்டாவதாக சொல்லப்பட்ட காவல் நிலையம் சம்பந்தப்பட்ட ரயில் காவல் நிலையத்திற்கு உடனடியாக அதனைத் தந்தி செய்தி மூலம் அறிவிக்க வேண்டும்; அத்தந்திச் செய்தியைத் தொடர்ந்து, மேற்படி வழக்கை மாற்றும் வகையில், முதல் தகவல் அறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அதிகார வரம்புள்ள ரயில் காவல் நிலையத்துக்கு அவ்-வழக்கை மாற்றும் முதல் தகவல் அறிக்கையை மிக மிக விரைவான செய்தி அறிவிப்பாகவும் ரயில் காவலர், பயணச் சிப்பந்தி மூலமாகவும் உடனடியாக அனுப்ப வேண்டும்
PSO 664 - அரசு பணியாளர்கள் மீது வழக்குத் தொடர்பு :
Prosecution to Government Servants:
1. எந்த அரசு பணியாளர் எவரேனும் தனது பதவிக்கு உரிய அலுவல் வழிக் கடமைகளை நிறைவேற்றுகையில் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களுக்காக, அவரை, குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக, காவலர் தலைநகர் அல்லாதா புறப்பகுதியில், ஆட்சியரிடமிருந்தும், சென்னை மாநகரில், அரசுப் பணியாளர்களுக்கு உரிய துறையின் தலைவரிடமிருந்தும் முன் சம்மதத்தைப் பெற வேண்டும்.
2. ஆட்சியர்களும், சென்னை மாநகரில் துறைத் தலைவர்களும் காவலரிமிருந்து, அத்தகைய தேவைக் கோரிக்கையைப் பெற்ற பத்து நாட்களுக்குள்ளாக, காவலருக்கு பதில்களை அனுப்பிவிட வேண்டும். காவலருக்கும் ஆட்சியருக்கும் / சென்னை மாநகரத்தில் ஒரு துறைத் தலைவருக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்தால், அது விசயத்தில், காவல் அரசாங்கத்தாரின் உத்தரவைப் பெற வேண்டும்.
3. இவ்-ஆணை ஆனது, சென்னை மாவட்டக் காவல் சட்டம் 1859 (1859-ன் XXIV)-ன் கீழ், குற்றஞ்சாட்டப்பட்டக் காவல் சார்நிலைப் பணியாளர் நேர்வுகளிலும், மாநில அரசினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இல்லாத, அரசாங்கப் பணியாளரைக் குற்றச்சாட்டுவதற்கு பொருந்தாது.
குறிப்பு : அறிக்கை அனுப்பபட வேண்டிய ஆட்சியர், குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட வேண்டிய, மாவட்டத்தின் ஆட்சியராகும்.
PSO 5
மாவட்ட ஆட்சியர் அவரது சார்நிலைப் பணியாளர்கள் உள்ள வருவாய் துறையின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கிராம காவல், காவல்துறைக்கு உதவிபுரிகிறது