17/12/2023
புதுமடத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத வீடு இல்லை! ஊராட்சியின் மெத்தன போக்கால் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! டெங்குவை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை வைப்பதோடு, டெங்குவை தடுக்க எந்த முன்னெடுப்புகள் செய்யாத ஊராட்சி மன்ற தலைவரை SDPI சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்!
புதுமடத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளும், நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் செய்தியும் மிக கவலையை ஏற்படுத்துகிறது. இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற வெள்ளை அறிக்கையை ஊராட்சி மன்றம் வெளியிட வேன்டும்.
மழை காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் செய்திருக்க வேன்டும். ஆனால் அவரின் மெத்தன போக்கால் அவர் செய்யாமல் போனதின் விளைவால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது வரை கூட டெங்குவை கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் ஊராட்சி மன்ற தலைவர் எடுக்க வில்லை என்பதால் அவரை கடுமையாக SDPI சார்பாக கண்டிக்கின்றோம்.
இந்த ஊராட்சி மன்ற தலைவரின் பதவி காலத்தில் சுகாதாரத்துறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு படு மோசமாக செயல்பட்டு கொன்டு இருக்கின்றது. எனவே ஊராட்சி மன்றமும், சுகாதார துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென SDPI சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கொசுவை ஒழிக்க பூட்டி கிடக்கும் வீடுகளின் மொட்டை மாடியில் தண்ணீரை அகற்றல், பொது மக்களுக்கு டெங்குவை ஒழிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தல், கிருமி நாசினி தெளித்தல், புகை மருந்து எல்லா இடத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை தொடர்ந்து அடித்தல், அரசு மற்றும் தனியார் இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முழுவீச்சில் அரசு செயல்பட வேன்டும்.
பொதுமக்களும் தண்ணீர் தேங்கிய இடங்களை அகற்றி கொசு உருவாகாத வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர் கொஞ்சமேனும் மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். சம்பிரதாயம் மற்றும் கண் துடைப்பிற்கு வேலை செய்யாமல் உண்மையில் இருக்கின்ற பதவிக்கு உண்மையாக வேலை செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.
டெங்கு காய்ச்சலால் ஒரு பக்கம் மக்கள் உடலால் கடும் அவதிக்கு உள்ளாகுவதோடு, பொருளாதாரம் இழப்பிற்கும் ஆளாகி வருகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் என அஞ்சி அஞ்சி அன்றாட வாழ்க்கையை கழிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் டெங்குவை கட்டுப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசை வேலை செய்ய வைக்கும் முழு பொறுப்பையும் பொது மக்கள் சார்பாக SDPI முன்னெடுத்து செய்யும்.
மேலும் SDPI சார்பாக பொது மக்களுக்கு கசாயம் வழங்குதல், விழிப்புணர்வு பிரசங்கம் செய்தல், அரசுக்கு எழுத்து பூர்வமான கோரிக்கை வைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாளில் SDPI செய்யும்.
இரண்டு வார காலத்தில் டெங்குவை கட்டுபடுத்தாவிட்டால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து ஊராட்சி மன்றதிற்கு பூட்டு போடும் போராட்டம் 31/12/23 நடத்தப்படும் என SDPI எச்சரிக்கை செய்கிறது.
இவன்
செய்யது இப்ராகிம்,
SDPI கட்சி - கிளை தலைவர்,
புதுமடம் கிளை,
இராமநாதபுரம் சட்டமன்ற கிழக்கு தொகுதி.