02/11/2024
அன்புடையீர்,
எங்கள் அம்மாவின் மறைவுக்குப் பிறகு இந்த இக்கட்டான நேரத்தில் எம்மை அணுகி இரங்கலைப் பகிர்ந்து கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக தமது வேலைப் பழுவுக்கு மத்தியிலும் வருகை தந்த கௌரவ நீதிபதிகள் சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகளுக்கும் எமது நன்றி.
தேர்தல் பிரச்சார காலம் ஆயினும், நேரம் ஒதுக்கி வருகைதந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் பா. ம. உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர், முன்னாள் அரசாங்க அதிபர் உட்பட பல கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் தற்போதைய வேட்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
மேலும், பிஸியான உலகில் சமூகவலைத்தளங்களினூடாக தங்கள் அன்பான வார்த்தைகள், அனுதாப செய்திகள் தெரிவித்தோர்
நேரில்வந்து பூமாலைகள், பூசெண்டுகள், மலர்வளையங்கள் அணிவித்தோர்/ அனுப்பிவைத்தோர் அனைவருக்கும் எமது பணிவான நன்றிகள்.
இதற்கும் மேலாக 24/10/2024 தொடக்கம் நேற்று வரை எங்கள் வீட்டில் அடுப்பெரிய விடாது தொடர்ந்து சமைத்த உணவுகளைப் பரிமாறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
மனமார்ந்த நன்றியுடன்,
நல்லம்மாவின் பிள்ளைகள்
Kumarasamy Manikkapoody
Manikkapody Rajathurai
Sri Shan
Sulojana Yogarajah
M Mangala Shanker