Cultural Affairs Unit of Northern Province

Cultural Affairs Unit of Northern Province Cultural Affairs, Northern Province

26/03/2026

Books Published By Cultural Affairs Unit of Northern Province in 2026

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண...
23/03/2026

வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 2026.03.16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ சரத்சந்திர அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமத தலைவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா பிரதேச மௌலவிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலை முன்றலில் இருந்து இஸ்லாமிய கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கிராஅத் ஓதப்பட்டது. பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி.நி.தர்சினி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜம்மியத்துல் உலாமா, தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ அப்துல் சமட் மௌலவி அவர்களின் நோன்பு ஆசியுரையுடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களதும் பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரைகள் என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன.

நிகழ்வில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்னார் அல்மதீனா வித்தியாலய மாணவர்களின் றபான் நடனம், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஹசீதா, நோன்பு திறத்தல் நிறைவுற்றதன் பின்னர், வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் கோலாட்டம், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளின் களிகம்பு, ஹசீதா, றம்ழான் நடனம், வவுனியா அல்அக்சா வித்தியாலய மாணவிகளின் ஹசீதா வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய கீதங்கள் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன. துஆப் பிரார்த்தனையுடன் இப்தார் நிகழ்வுகள் நிறைவுற்றன. வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

21/03/2026
முதலாம் காலாண்டிற்கான கலை  ஆலோசனைக்குழு கூட்டம் - 2026வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பண்பாட்டு ஆலோசனைக் கூட்டமானது...
06/03/2026

முதலாம் காலாண்டிற்கான கலை ஆலோசனைக்குழு கூட்டம் - 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பண்பாட்டு ஆலோசனைக் கூட்டமானது 2026-03-03ஆம் திகதி பிற்பகல் 2.00மணிக்கு பண்பாட்டு ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு சிவகுமாரன் தலைமையில் கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது பங்குபற்றலுடன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்தோரை கல்வி அமைச்சின் செயலாளர் வரவேற்றதோடு கூட்டத்தின் முக்கிய நோக்கத்தினை எடுத்துரைத்ததை தொடர்ந்து தலைவரின் உரை இடம்பெற்றது. தொடர்ந்து உறுப்பினர்களுடன் வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் 2026ஆம் ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள நூல் அச்சிடல் மற்றும் விருதுகள் தொடர்பான தெரிவுகளுக்குரிய நடுவர் குழாத்தினரை தெரிவு செய்வதற்கான நடுவர்குழுக்கள் தெரிவும் இடம்பெற்றது.

76 வது நூல் வெளியீடு - 2026ஐவகை ஆவணத்தொகுப்புக்களின் வெளியீட்டு விழா – 2026.03.03வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், வ...
06/03/2026

76 வது நூல் வெளியீடு - 2026
ஐவகை ஆவணத்தொகுப்புக்களின் வெளியீட்டு விழா – 2026.03.03

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஐவகை ஆவணத்தொகுப்புகளின் வெளியீட்டுவிழா 2026.03.03ஆம் நாள் செய்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப் பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களது தலைமையில் சிறபபாக நடைபெற்றது.

இவ்விழாவில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். விருந்தினர்களது மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தலைமையுரை, பிரதமவிருந்தினர் உரை ஆகியவற்றினைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்திச் சிறப்பிக்க 2025ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடைநிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஈழத்துக்கும்மிப் பாடல்கள், சொற்பிறப்பு அகராதி, தெணியான் நாவல்கள், மடுப்பிரதேச நாட்டுக்கூத்துக்கள், நெடுந்தீவின் பாரம்பரிய வாழ்வியல் இறுவெட்டு ஆகிய ஐந்து வகையான ஆவணத் தொகுப் புகளின் முதற்பிரதிகள் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாள ரும் விழாவின் தலைவருமான திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களால் கல்வி அமைச்சின் செயலாளரும் விழாவின் பிரதம விருந்தினருமாகிய உயர்திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களுக்கு வழங்கி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரமத விருந்தனரால் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வாழ்நாட்பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ் அவர்கள் ஈழத்து கும்மிப்பாடல்களினதும், அருட்தந்தை செ.அன்புராசா அடிகளார் மடுப்பிரதேச நாட்டுக்கூத்துக்கள் நூலிற்கானதும், வாழ்நாட்பேராசிரியர் கலாநிதி சுபதினி றமேஸ் அவர்கள் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி நூலினது விரிவுரையாளர் த.அஜந்தகுமார் அவர்களது தெணியான் நாவல்கள் நூலினது, கலாநிதி க.ரதிதரன் அவர்கள் நெடுந்தீவின் பாரம்பரிய வாழ்வியல் இறுவட்டுக்கானதுமான மதிப்பீட்டுரை களை வழங்கி ஆவணத்தொகுப்புகளின் சிறப்புகளை எடுத்தரைத்தனர்.

நூலின் தொகுப்பாசரியர்கள் சார்பாக கலாசார உத்தியோகத்தரகளான இ.நித்தியானந்தன், அ.சிவஞானசீலன், இ.ஜோன்சன், கு.றஜீபன், மற்றும் க.பரணீதரன் ஆகியோர் ஏற்புரைகளை வழங்கினர். பண்பாட்டலுவல்கள் அலகின் தலைமைப்பீட கலாசார உத்தியோகத்தர் மா.அருள்சந்திரன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழாவில் எழுத்தாளர்கள், ஆய்வுத்துறை சார்ந்தோர், பல்கலைக்கழக துறைசார்ந்த பிரதிநிதிகள், தமிழ்த்துறை சார்ந்தோர், நூல்நிலையப் பிரதிநிதிகள், மரபுரிமை செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இவர்களுக்கான சிறப்புப்பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாலினி விஜயரட்ணம் அவர்களது நன்றியுரையுடன் வெளியீட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

27/02/2026

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026

வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் 2026 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது.  Application...
24/02/2026

வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரிவின் 2026 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

Application Called for Competitions /Award - 2026 conducted by Dept. of Cultural Affairs, Northern Province.

Closing Date : 31.03.2026

Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, Northern Province

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்ச...
23/02/2026

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையோடு இணைந்து நடத்திய வடக்கு மாகாண சிவராத்திரி தினமானது 2026.02.15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30மணிக்கு முதலாம் சாமப்பூசைக்குரிய அபிசேகத்துடன் ஆரம்பமாகி இரவு 7.00 மணிவரை நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் மேடைநிகழ்வகள் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலைத்தெடர்ந்து தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக் குருக்களது ஆசியுரை, பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களது வரவேற்புரை, வவுனியா பரத நர்த்தன கலாலயா மாணவர்களது வரவேற்பு நடனம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையுரையுடன் கலைநிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த கலைமன்றங்கள் மற்றும் கலைஞர்களது பக்திபூர்வமான கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. முள்ளியவளை ஐயனார் நாடக கலாமன்றம், துணுக்காய் ஆரணி நர்த்தனாலய, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கலாலய, அளம்பில் விரலிசை மன்றம் முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி, மாங்குளம் முத்தமிழ் கலாமன்றம், மாந்தை கலையருவி கலாமன்றம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அறநெறிப்பாடசாலை, கல்யாண வேலவர் அறநெறிப்பாடசாலை, மல்லாவி ஆரணி நர்த்தனாலய போன்ற மன்றங்களில் இருந்து
விநாயகர் ஸ்துதி, சிவவர்ணம், அக்னி லிங்கஸ்துதி, விரலிசைநாதம். குழுஇசை, கீர்த்தனை நடனம், காவடி நடனம்;. வில்லுப்பாட்டு திருமதி சாந்தா தர்சன் ஆசிரியரது மாணவர்களது நடன ஆற்றுகைகள் என்பனவும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன

சிவராத்திரி தினத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் அவற்றினை நெறியாளுகை செய்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களுடன் அன்பளிப்புப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களின் நன்றியுரையுடன் அதிகாலை 5.00 மணிக்கு சிவராத்திரி தின மேடை நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

Address

Chemmany Road
Nallur
40000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when Cultural Affairs Unit of Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share