16/03/2026
வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம் - சமூக உற்பத்தித்திறன் தேசிய பணி
-----------------------------------------
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்
முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி
கிராமத் திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாளிகைக்காடு மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாளிகைக்காடு மேற்கு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி. ஜி. அருணன் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பிரத்தியேகச் செயலாளர் S. இம்தியாஸ் உட்பட Clean Sri Lanka வேலைத்திட்ட காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர் K. செல்வராணி, உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MI. Raihana, FZ. Sifani, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், காரைதீவு பிரதேச செயலகத்தின் மாளிகைக்காடு மேற்கு கிராமத்தின் அடையாளம் காணப்பட்ட மற்றும் எதிர்கால சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தித் திட்டத்தின் அறிக்கையை அதிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் திட்ட நிகழ்வின் மாதிரி பெயர்ப்பலகையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய
வேலைத்திட்டத்தின் சுருக்கத்தை இந்தக் காணொளியின் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம வேலைத்திட்டம்:
முழுமையான தமிழ் மொழி மூலக் காணொளி: https://drive.google.com/file/d/15UsqxgNRHJLrEP7W8EZeEtzxvsOuzjvP/view?usp=sharing
முழுமையான சிங்கள மொழி மூலக் காணொளி: https://drive.google.com/file/d/1Sy7TkXvKgEAFua3EAr7Gz53pzgwM18Qe/view?usp=sharing
ஒன்றிணைவோம்.! சமூக உற்பத்தித்திறன் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்!