16/05/2026
இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நெல்லண்டை அம்மன் அறநெறிப்பாடசாலை, வாணிகல்விநிலைய மாணவர்களுக்கான சமயப்பணியின் அவசியம் கருதி திருநாவுக்கரசர நாயனார் குருபூஜை மற்றும் கல்வி ஊக்குவிப்பு பணி நிகழ்வு நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இனிதே இடம் பெற்றது. இலங்கை சைவநெறிக் கழகப் பணிகள் அவர்களுடைய வழிகாட்டலில் இலங்கை ஆரூரர் சைவப் பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வாணி கல்வி நிலையம் ஆசிரியர்கள் நெல்லண்டை அம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் , ஆரூரர் சைவப் பணி மன்றத்தின் உடைய நலன் விரும்பிகள் அனைவருடைய பங்களிப்போடு இனிதே மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் மற்றும் மாணவர்களுக்கான கந்தபுராண நூல் வழங்கல் வைபவம், சிறுவர்களுக்கான அரங்கம் இவற்றோடு இச்சமயப்பணி ஆரூர் பெருமானுடைய திருவருளால் இனிதே இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரை விருந்தினராக மதிப்பார்ந்த சிவஸ்ரீ . ரிஷாங்க குருக்கள் Rishi Kugathas அவர்கள் கலந்து சிறப்பித்து இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்றார் போல் அப்பர் சுவாமியினுடைய பணி பற்றியும் இக்கால சமய சமூகப் பணியினுடைய அவசியம் பற்றியும் பேசி இந்நிகழ்வைச்சிறப்பித்தார்கள்.
திருவருளேயாம் சிவாய நம 🙏 ஆரூரா தியாகேசா 🙏♥️