மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo

  • Home
  • Sri Lanka
  • Eravur
  • மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo

மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo ஏறாவூர் மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்

எமது Eravur Social Welfare Organization சமூக சேவை அமைப்பின் சிரேஷ்ட  ஆலோசகர் நண்பர் அன்வர் அலி அவர்களின் மகளாரின் திருமண...
26/03/2026

எமது Eravur Social Welfare Organization சமூக சேவை அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் நண்பர் அன்வர் அலி அவர்களின் மகளாரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போது...

15/02/2026
🇱🇰 78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமை...
03/02/2026

🇱🇰 78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமைய #ஏறாவூர்_சமூக_நல_அமைப்பு சுதந்திர தின நல் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

ESWO. செயற்குழுவினர் சிறு கலந்துரையாடல் ...
31/01/2026

ESWO. செயற்குழுவினர் சிறு கலந்துரையாடல் ...

ESWOஇன் சிரேஷ்ட உறுப்பினர் சகோதரர் Faizal Bro அவர்கள் எமது அமைப்புக்காக தொடராக வழங்கி வரும் பங்களிப்புக்களை பாராட்டும் வ...
23/06/2025

ESWOஇன் சிரேஷ்ட உறுப்பினர் சகோதரர் Faizal Bro அவர்கள் எமது அமைப்புக்காக தொடராக வழங்கி வரும் பங்களிப்புக்களை பாராட்டும் வகையில், சிநேகபூர்வமான சந்திப்பும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் கடந்த வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது.

ஏறாவூர் சமூகநல அமைப்பினால் (ESWO) ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு stationery வழங்கி வைப்பு..ஏறாவூரின் கல்வி & ...
31/01/2025

ஏறாவூர் சமூகநல அமைப்பினால் (ESWO) ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு stationery வழங்கி வைப்பு..

ஏறாவூரின் கல்வி & சமூக வளர்ச்சியில் முன்நின்று உழைக்கும் ஏறாவூர் சமூகநல அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஓர் அங்கமாக நேற்று(30) மட்/ ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு 15,000/- ரூபாய்கள் செலவில் போட்டோ பிரதி இயந்திரத்திற்கான Toners, A4Rim & stationeryகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

பாடாசாலையின் அதிபர் MAM.கலீல் அவர்கள் எமது அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளின்படி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் M.பழீல் அவர்களது தலைமையில் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ESWOவின் உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முன்னால் அபிவிருத்தி திட்ட அமைச்சர் செய்யித் அலிஷாஹிர் மௌலானாவுக்கு ESWOவின் சார்பில் நன்றிகள்...கௌரவ முன்னால் அபிவிருத்...
15/01/2025

முன்னால் அபிவிருத்தி திட்ட அமைச்சர் செய்யித் அலிஷாஹிர் மௌலானாவுக்கு ESWOவின் சார்பில் நன்றிகள்...

கௌரவ முன்னால் அபிவிருத்தி திட்ட அமைச்சர் செய்யித் அலிஷாஹிர் மௌலானா அவர்கள் எங்களது ஏறாவூர் சமூக நல அமைப்புக்கு தன்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 250,000/- ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தார்கள்.

இந்நிதியில் எங்களது அமைப்பின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் வகையில் அலுவலகத் தேவை கருதி Computer and furniture வசதிகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

எங்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அதற்கினங்க கடந்த வெள்ளிக்கிழமை அப்பொருட்களை உத்தியோகபூர்வமாக எங்களது அமைப்பினரின் கரங்களில் கையளித்திருந்தார்.

எங்களது கோரிக்கையினை ஏற்று இத்தகைய உதவியினை வழங்கி வைத்த முன்னால் அமைச்சருக்கும் அவரது இணைப்புச் செயற்பாட்டுக்குழுவுக்கும் ESWOவின் சார்பில் மனநிறைவான நன்றிகளைக் கூறுவதோடு, அவரது நிறைவான சேவைகளுக்கு வல்ல இறைவன் குறைவில்லாத நற் கூலிகளை வழங்குவானாக!!

ஏறாவூர் சமூக நல அமைப்பின்(ESWO)  முயற்சியினால் சீரற்ற காலநிலைகளின் காரணமாக  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமதூரைச் சேர்ந்த...
01/12/2024

ஏறாவூர் சமூக நல அமைப்பின்(ESWO) முயற்சியினால் சீரற்ற காலநிலைகளின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமதூரைச் சேர்ந்த 250க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு 30.11.2024 அன்று சமைத்த பகல் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், 01.12.2024 அன்று அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையின் கரையோர வழியாக  1500Km ஐ பேருவளையைச்சேர்ந்த  #சஹ்மி_சஹீத் Show Me The View சொந்த மண்ணில் வீர நடைபோட்டு தொடங்கி...
28/08/2024

இலங்கையின் கரையோர வழியாக 1500Km ஐ பேருவளையைச்சேர்ந்த #சஹ்மி_சஹீத் Show Me The View சொந்த மண்ணில் வீர நடைபோட்டு தொடங்கி சொந்த மண்ணிலே 45 நாட்களில் பயணத்தை முடித்துக்கொண்டார்.
சஹ்மி பயணத்தில் மக்களின் உள்ளத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
அந்த வகையில் நமது ஊர் சார்பாக "ஏறாவூர் சமூக நல அமைப்பு" தங்களுக்கு நல் வாழ்துக்களை தெரிவித்து எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ் திட்டமிட்டபடி ESWOவின் ஒன்றுகூடல் சிறப்பாக நடந்து  முடிந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தி...
26/06/2024

அல்ஹம்துலில்லாஹ் திட்டமிட்டபடி ESWOவின் ஒன்றுகூடல் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருக்கின்ற எங்களது அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களினதும், புது முகங்களாக அறிமுகமாகி எங்களோடு கைகோர்த்திருக்கும் எமதூரின் பட்டதாரி மாணவர்களது பங்குபற்றுதலோடு ஒன்றுகூடல் சூராவோடு ஆரம்பமாகியது.

இதில் எமது அமைப்பின் தோற்றப் பின்னணி மற்றும் இலக்குகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தொடரின் தலைமை சிரேஷ்ட ஆலோசகர் சகோதரர் Faizal அவர்களால் எத்தி வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தூரநோக்குடன் கூடிய வேலைத்திட்டங்கள் செயற்பாடுகள் தொடர்பாக பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு அதில் காணப்பட்ட நன்மைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டது.

அடுத்து இனிவருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பல உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டிருந்ததோடு, அவற்றில் இருந்து குறித்த காலப்பகுதிக்குள் செயற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில்

1. மட்/ ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தினால் எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி தரம்05 மாணவர்களுக்கான மேலதிகப் பரீட்சைக்குத் தேவையான வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கான தாள்களுக்கான நிதியை வழங்கல்

2. அல் - அஷ்ரப் வித்தியாலயத்தில் அடையாளங் காணப்பட்ட விஷேட தேவையுள்ள மாணவனுக்கான உதவியை வழங்குவதற்கான நேரடிப் பரிசீலனையை மேற்கொள்ளல்.

3. ஊரின் பிரதான பள்ளிவாயல்களை மையமாகக் கொண்டு ஜம்மியாவின் பங்களிப்புடன் பாவித்த நிலையில் உள்ள ஆடைகளை சேகரித்து, Wash செய்து பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான ஆரம்ப செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

4. பட்டதாரி மாணவர்களோடு இணைந்து ஊரில் உள்ள பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலையில் கற்கின்ற மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதற்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

5. பட்டதாரி மாணவர்களின் துணையோடு பாடசாலை மாணவர்களுக்கு திறன் விருத்திச் செயற்பாடுகள், உளவியல் ஆலோசனைகள் மற்றும் Toastmaster வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்

போன்ற வேலைத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,இவ் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள சவாலான சூழல்கள் மற்றும் அனுபவக் கருத்துக்களை சகோதரர் Rikkaz(engineer) வழங்கி இருந்ததுடன், எதிர்காலத்தில் கல்விப்புலத்தில் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக பட்டதாரி மாணவன் Sakeerசில கருத்துக்களை வழங்கியிருந்தார்.

இறுதியாக அமைப்பின் தற்போதைய தலைவர் Sameem அவர்கள் தனதுரையில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான உறுதிமொழியை வழங்கியதோடு, செயலாளர் Razeem அவர்கள் ESWOவில் இணைந்ததில் இருந்து இன்று வரைக்கும் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் நிலைபேற்றுத் தன்மையை எடுத்துக்கூறியதோடு, இவ் அமைப்பில் தான் இணைந்ததால் தனக்கு கிடைத்த அனுபவங்கள், திறன் விருத்தியை புதிதாக இணைந்து கொண்ட பட்டதாரி மாணவர்களுக்கு கூறினார். இன்னும் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களான Anver ali, Ahamed போன்றோர் தங்களது கருத்துக்களையும் வழங்கியதோடு, புதிதாக இணைந்து கொண்ட பட்டதாரி மாணவன் Ahsan அவர்கள் இவ் ஒன்று கூடல் தொடர்பான தனது அபிப்பிராயத்தையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் சகோதரர் Shibly அவர்களது நன்றியுரையுடன் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.

இன்றைய தினம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் வெளிநாடு வாழ் உறவுகள் அனைவருக்கும்பெருநாள் நல் வாழ்த்துக்களை ஏரூர் மண்ணில் இருந...
16/06/2024

இன்றைய தினம்
ஹஜ்ஜூப் பெருநாளை
கொண்டாடும் வெளிநாடு
வாழ் உறவுகள் அனைவருக்கும்
பெருநாள் நல் வாழ்த்துக்களை ஏரூர் மண்ணில் இருந்து தெரிவித்துக்கொள்கிறோம்.
EID MUBARAK

Address

Maccamady Road/Eravur
Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo:

Share

Category