26/06/2024
அல்ஹம்துலில்லாஹ் திட்டமிட்டபடி ESWOவின் ஒன்றுகூடல் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருக்கின்ற எங்களது அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களினதும், புது முகங்களாக அறிமுகமாகி எங்களோடு கைகோர்த்திருக்கும் எமதூரின் பட்டதாரி மாணவர்களது பங்குபற்றுதலோடு ஒன்றுகூடல் சூராவோடு ஆரம்பமாகியது.
இதில் எமது அமைப்பின் தோற்றப் பின்னணி மற்றும் இலக்குகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தொடரின் தலைமை சிரேஷ்ட ஆலோசகர் சகோதரர் Faizal அவர்களால் எத்தி வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தூரநோக்குடன் கூடிய வேலைத்திட்டங்கள் செயற்பாடுகள் தொடர்பாக பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு அதில் காணப்பட்ட நன்மைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டது.
அடுத்து இனிவருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பல உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டிருந்ததோடு, அவற்றில் இருந்து குறித்த காலப்பகுதிக்குள் செயற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில்
1. மட்/ ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தினால் எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி தரம்05 மாணவர்களுக்கான மேலதிகப் பரீட்சைக்குத் தேவையான வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கான தாள்களுக்கான நிதியை வழங்கல்
2. அல் - அஷ்ரப் வித்தியாலயத்தில் அடையாளங் காணப்பட்ட விஷேட தேவையுள்ள மாணவனுக்கான உதவியை வழங்குவதற்கான நேரடிப் பரிசீலனையை மேற்கொள்ளல்.
3. ஊரின் பிரதான பள்ளிவாயல்களை மையமாகக் கொண்டு ஜம்மியாவின் பங்களிப்புடன் பாவித்த நிலையில் உள்ள ஆடைகளை சேகரித்து, Wash செய்து பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான ஆரம்ப செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
4. பட்டதாரி மாணவர்களோடு இணைந்து ஊரில் உள்ள பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலையில் கற்கின்ற மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதற்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
5. பட்டதாரி மாணவர்களின் துணையோடு பாடசாலை மாணவர்களுக்கு திறன் விருத்திச் செயற்பாடுகள், உளவியல் ஆலோசனைகள் மற்றும் Toastmaster வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
போன்ற வேலைத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்,இவ் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள சவாலான சூழல்கள் மற்றும் அனுபவக் கருத்துக்களை சகோதரர் Rikkaz(engineer) வழங்கி இருந்ததுடன், எதிர்காலத்தில் கல்விப்புலத்தில் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக பட்டதாரி மாணவன் Sakeerசில கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இறுதியாக அமைப்பின் தற்போதைய தலைவர் Sameem அவர்கள் தனதுரையில் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான உறுதிமொழியை வழங்கியதோடு, செயலாளர் Razeem அவர்கள் ESWOவில் இணைந்ததில் இருந்து இன்று வரைக்கும் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் நிலைபேற்றுத் தன்மையை எடுத்துக்கூறியதோடு, இவ் அமைப்பில் தான் இணைந்ததால் தனக்கு கிடைத்த அனுபவங்கள், திறன் விருத்தியை புதிதாக இணைந்து கொண்ட பட்டதாரி மாணவர்களுக்கு கூறினார். இன்னும் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களான Anver ali, Ahamed போன்றோர் தங்களது கருத்துக்களையும் வழங்கியதோடு, புதிதாக இணைந்து கொண்ட பட்டதாரி மாணவன் Ahsan அவர்கள் இவ் ஒன்று கூடல் தொடர்பான தனது அபிப்பிராயத்தையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் சகோதரர் Shibly அவர்களது நன்றியுரையுடன் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.