24/03/2026
#மீண்டும் களத்தில் PAC 🔥✌️
உளவியல் ஆலோசனை மய்யமானது (PAC) கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளில் தேவையுடைய மக்களின் உளவள விருத்திக்காக பல்வேறு செயற்திட்டங்களை நேரடியாகவும், இணையவழி மூலமாகவும் நாடாத்தி அதில் சிறந்த பெறுபேற்றினையும் கண்டுவந்துள்ளது.
தனிநபர் வேலைப்பளு காரணமாக சிறிது காலம் இணையவழி செயற்பாடுகளை மட்டுமே நடாத்தி வந்த நாம் மீண்டும் நமது சமூகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கசப்பான விடயங்களை தடுக்கும் முகமாக மீண்டும் களத்தில் செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளோம்.
அந்த வகையில் கடந்த 21/03/2026 (சனிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஶ்ரீ விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான உளநல, தலைமைத்துவ மற்றும் சமூகவலைத்தள பாவனை தொடர்பான செயற்திட்டம் நடைபெற்றது.
உளவியல் ஆலோசனை மய்யத்தின் (PAC) ஏற்பாட்டிலும் ஒருங்கிணைப்பிலும், அரிமாக கழகத்தின் (Lions Club of Batticaloa Supreme) அனுசரணையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. E தவராஜா, அரிமா கழகத்தின் தலைவர் திரு I காண்டீபா, உளவியல் ஆலோசனை மய்ய செயலாளர் திரு T ரணீஷியன் பார்த்லட், உளவியல் ஆலோசனை மய்ய நிர்வாக உறுப்பினர்களான திரு சிரஞ்சீவி, திரு திவாகர், திரு கிருஷாந், திரு கோபி, செல்வி பிரஷா மற்றும் அரிமா கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சமகாலத்தில் எமது சமூகத்தின் குறிப்பாக பாடாசலை மாணவர்களுக்கு தடையின்றி தெரிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டிய பல விடயங்கள் எமது வளவாளர்களால் இலகுமுறையில் சேர்க்கப்படலே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
குறித்த செயற்திட்டத்தின் வளவாளர்களாக செல்வி C பிரஷா, திரு P தினேஷ், திரு N சபேஷன், திரு T ரணீஷியன் பார்த்லட் மற்றும் திரு கோபி அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த செயற்திட்டத்திற்கான அனுமதியை வழங்கிவைத்த வலயக்கல்விப்பணிப்பாளர், அனுசரணையை வழங்கி வைத்த அரிமா கழகம் (Lions Club of Batticaloa Supreme), தமது நேரத்தை மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கிய வளவாளர்கள், ஒத்துழைப்பை நல்கிய பாடசாலை அதிபர், கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் உளவியல் ஆலோசனை மய்யம் சார்பாக மனநிறைவான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
உளவியல் ஆலோசனை மய்யம்
ஊடகப்பிரிவு - PAC