13/08/2026
மலையகத்தின் உண்மையான மாற்றத்தை சுமப்பவர்கள்…!
மலையகத்தின் அடையாளம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பல்வேறு விடயங்களைத் தாண்டி, மிக மிக ஆரோக்கியமானதும், பெறுமதியானதுமான பல விஷயங்கள் இன்னும் நமக்குள் உயிரோடு இருக்கின்றன.
அவற்றில் மிக முக்கியமான ஒன்று — சமூக மாற்றத்தையும், எழுச்சியையும் கனவு கண்டு, அதற்காகத் தங்களுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கும் ஒரு சுயநலமற்ற இளைஞர் படை.
அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கலாம். ஏன், ஏமாற்று அரசியல்வாதிகளின் அருகில்கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் மனதிற்குள் இருப்பது ஒன்றே ஒன்று — சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை தங்கள் சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
பதவிக்காக ஓடாமல், பணத்திற்காக வளையாமல், புகழுக்காக அரசியல் செய்யாமல்…
பல ஆண்டுகளாக செம்பு தூக்கியெனவும் கொடிகள் சுமந்தும், கூட்டங்களில் அலைந்தும், ஏராளமான அவப்பெயர்களையும் விமர்சனங்களையும் சுமந்தும், “என்றாவது ஒருநாள் மாற்றம் வரும்” என்ற மாறாத நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் ஏராளமான மலையக இளைஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
அந்த வரிசையில், பல ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஆரோக்கியமான, கேள்வி கேட்கும், புரட்சிகர அரசியல் சிந்தனையை விதைத்தவர்களில் தோழர் மோகனும் ஒருவர்.
தனக்காக எதையாவது சாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், அவரிடம் இருக்கும் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பயன்படுத்தி இந்தப் பரம்பரை அரசியலுக்கு ஒரு முட்டுக்கொடுத்திருந்தாலே போதும் — அடுத்த நாளே ஏதாவது ஒரு பதவி அவரது கையில் இருந்திருக்கும்.
ஆனால் அவர் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
அனைவரையும் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக உண்மையைப் பேசினார்.
பதவியைத் தேடுவதற்குப் பதிலாக கேள்விகளைத் தேடினார்.
அரசியல்வாதிகளைப் புகழ்வதற்குப் பதிலாக, அவர்களின் ஏமாற்று நாடகங்களைத் தோலுரித்தார்.
அதற்காக நண்பர்களை இழந்திருக்கலாம். எதிரிகளைச் சம்பாதித்திருக்கலாம். பல விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவர் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை — தன் சமூகத்தின் மீதான அக்கறையில்.
இப்படிப்பட்ட ஒருவர் மலையக சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பொறுப்பேற்பது, அவருக்கு கிடைத்த பதவி மட்டுமல்ல; அந்தப் பதவிக்கே கிடைத்த ஒரு பெருமை.
வாழ்த்துக்கள் தோழா! ❤️🔥
இனி உங்களுக்கான களம் பெரிது…
உங்கள் எழுத்துக்கும், உங்கள் பேச்சுக்கும், உங்கள் சிந்தனைக்கும் களம் இருக்கிறது.
கலக்குவாயாக…!
மலையகத்தின் மாற்றத்திற்கான குரலாக உயர்வாயாக…!
— வாழ்த்துக்களுடன்
மலையக சிறுத்தைகள்