DYFI Villupuram

DYFI Villupuram அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் வேலை

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வரும் இரண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஜீன் 12ம் தேதி...
04/06/2026

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வரும் இரண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி

ஜீன் 12ம் தேதி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

மாபெரும் கையெழுத்து இயக்கம்

பங்கேற்பு
தோழர் A.கோதண்டம் B.A.,B.L.,
மூத்த வழக்கறிஞர்,திண்டிவனம்

மாலை 3.00 மணி

செஞ்சி பேருந்து நிறுத்தம்,திண்டிவனம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI திண்டிவனம் வட்டக்குழு

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வரும் இரண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஜீன் 12ம் தேதி...
02/06/2026

திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வரும் இரண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி

ஜீன் 12ம் தேதி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

மாபெரும் கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டிவனம் பகுதிக்குழு கூட்டம் 31.05.2026 இன்று பகுதி தலைவர் ஏ.ம.சத்தீஷ்குமார் தலைமையில...
31/05/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டிவனம் பகுதிக்குழு கூட்டம் 31.05.2026 இன்று பகுதி தலைவர் ஏ.ம.சத்தீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வரும் இரண்டு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கனவே சார்ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வலியுறுத்திபட்டது‌.
மேலும் 2024 ஆம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இவ்விரு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைப்பெற்றது. இந்நிலையில் புதிதாக பொறுப்பெற்றுள்ள தமிழக அரசு அட்பசனைக்குரிய இடங்களில் உள்ள 700 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து உள்ளது. திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இயங்கி வருகின்றன இந்த இரண்டு மதுக்கடைகள் இந்த பட்டியலில் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்விரு மதுக்கடைகளால் அப்பகுதி மக்கள் நாளுக்கு நாள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே இவ்விரு மதுக்கடைகளையும் உடனடியாக மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜீன் 12ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் திண்டிவனம் பகுதி செயலாளர் எஸ்‌.பார்த்திபன், மாவட்ட பொருளாளர் கா.ரவிசந்திரன், துணை தலைவர்கள் மு.செம்மலர், எம்.திருமுருகன், துணை செயலாளர் கே.சிவக்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் வெ.லெனின்பிரதாப், ஐ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்...

ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் எம். கோபாலகிருஷ்ணன் – 15ஆம் ஆண்டு நினைவு நாள்தோழர் கோ...
31/05/2026

ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் எம். கோபாலகிருஷ்ணன் – 15ஆம் ஆண்டு நினைவு நாள்

தோழர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் திண்டிவனம் தாலுக்கா, மயிலம் ஒன்றியம், பெரியண்டப்பட்டு கிராமத்தில் ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையை இழந்த நிலையிலும், முதுமையடைந்த தாயாரின் பொறுப்புகளுக்கு மத்தியிலும், தன்னை முழுமையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) இயக்கப் பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டார்.

தனது சொந்த கிராமத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகப் போராடத் தொடங்கிய அவர், பின்னர் மயிலம் ஒன்றியம் முழுவதும் செயல்பட்டு, காலடிப்படாத கிராமங்கள் இல்லாத அளவுக்கு மக்களோடு இணைந்து பணியாற்றினார்.

திண்டிவனம் தாலுக்கா முழுவதும் சுற்றித் திரிந்து, வாலிபர் சங்கத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மயிலம் ஒன்றிய செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், அன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

குறிப்பாக உறுப்பினர் சேர்க்கைப் பணியில் சிறப்பாக செயல்பட்டு, மயிலம் ஒன்றியத்தில் 8,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை DYFI-யில் இணைத்த பெருமைக்குரியவர்.

தனது குடும்பம் கடுமையான வறுமையில் வாடியபோதும், மூன்று பிள்ளைகள் பசியால் தவித்தபோதும், இயக்கப் பணிக்கே முன்னுரிமை அளித்த அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

அவரது உழைப்பையும் இயக்கப் பற்றையும் மதித்து, 2010ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அவர் விழுப்புரம் மாவட்ட DYFI மாவட்ட பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திருக்கோவிலூர் பகுதி பொறுப்பாளராகவும் திறம்பட செயல்பட்டார்.

2012ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முடித்துவிட்டு, திருக்கோவிலூரிலிருந்து தனது சொந்த ஊரான பெரியண்டப்பட்டு கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தோழர் கோபாலகிருஷ்ணனின் மறைவு, ஒரு மகத்தான தலைவரையும், துடிப்புமிக்க போராளியையும், அர்ப்பணிப்பு மிக்க இயக்கத் தோழரையும் வாலிபர் சங்கம் இழந்த துயரமான நிகழ்வாகும்.

அவரது தியாகமும் போராட்டப் பயணமும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்!

செவ்வணக்கம் தோழரே! 🚩

DYFI போராட்டம் வெற்றி..திண்டிவனம் நல்லிக்கோடன் நகரில் பாலம் அமைத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி ...
29/05/2026

DYFI போராட்டம் வெற்றி..

திண்டிவனம் நல்லிக்கோடன் நகரில் பாலம் அமைத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.
தற்போது நல்லியக்கோடன் நகர் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI
திண்டிவனம் வட்டக்குழு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு.. 11 நாட்களில் 5வது முறையாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வுபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து
26/05/2026

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு.. 11 நாட்களில் 5வது முறையாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து

24/05/2026

விழுப்புரத்தில் வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணிகள் என்று கிண்டல் செய்து கொச்சைப்படுத்திய, தலைமை நீதிபதி. ஒன்றிய பாஜக அரசை கேள்வி கேட்க துணிவு இல்லாத தலைமை நீதிபதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு நீதிபதியின் இத்தகைய செயலை கண்டித்து பேசி, எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மூ.ஜீவானந்தம், வாலிபர் சங்க வட்ட செயலாளர் உ.மதன்ராஜ், நிர்வாகிகள் மாதவன், முத்துக்கிருஷ்ணன், ஸ்டாலின், கணேசன், ஜான்சன்,அஜய், சுமித்ரா தேவி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்த சிறுவாக்கூர் கிராமத்தை சேர்ந்த 3- வயது சிறுவன் சுகதேவ் என்பவர் திடீரென எழுதுகோளை வாங்கி அதில் கையெழுத்திட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கையில் ஒரு வாலிபர் சங்கத்தின் கொடியை கொடுத்து வாலிபர் சங்கத்தினர் அவரை சந்தோஷம் அடைய வைத்தனர்.

சமூகநீதி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தோழர் வன்னியரசு அவர்களுக்கு வாழ்...
23/05/2026

சமூகநீதி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தோழர் வன்னியரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.

திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் கிராமத்தில் மேட்டுகாலனி எனும் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் மூன்று தலைமுறை காலமாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு இதுநாள் வரை சாலை வசதி இல்லை. இப்பகுதியில் உள்ள 4 குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தான் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தும் கூட இது நாள் வரை அரசு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மருத்துவமனை செல்லும் நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவருமே சவுக்கு தோப்பின் நடுவே உள்ள ஒத்தையடி வயல் வரப்பில் தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் சவுக்கு தோப்பின் இடையே உள்ளே வரப்பில் நடந்து செல்லும் இவர்கள் ஒவ்வொரு நாளும் பாம்பு தீண்டுமோ? காட்டுப்பன்றி தாக்குமோ? என்ற அச்சத்தோடு தான் சென்று வருகின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக இப்பகுதியில் எவரேனும் இறந்து விட்டாலும் கூட சடலத்தை சவுக்கு தோப்பின் நடுவே உள்ள ஒத்தையடி வயல் வரப்பில் தான் தூக்கி செல்கின்றனர். இக்கொடுமைகள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு பலமுறை இப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாலை வசதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் மிகுந்த இன்னல்பட்டு வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுபடுத்தி தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என ஏப்பாக்கம் கிராம பட்டியிலின மக்களுக்கு சாலை கேட்டு பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லைததால் கடந்த ஆண்டு ஏப்பாக்கம் கிராம மக்களோடு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்துறை அதிகாரிகள் சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஒரு ஆண்டு காலம் முடிந்தும் இன்னும் சாலை அமைக்கும் பணிகள் துவங்கவில்லை.

எனவே புதிதாக பொறுப்புள்ள மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையீட்டு ஏப்பாக்கம் மேட்டு காலனி பகுதியில் வசிக்கும் பட்டியிலின மக்களுக்கு சாலை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
திண்டிவனம் பகுதி
Chief Minister of Tamil Nadu

ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து வருகின்ற 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி திடல்,...
18/05/2026

ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து வருகின்ற 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி திடல், விழுப்புரம் இல் SFI-DYFI-AISF-AIYF கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.



நீட் தேர்வை ஒழிப்பதற்கு அணிதிரள்வீர்.....

வழிபாட்டு தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்..தி...
12/05/2026

வழிபாட்டு தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்..

திண்டிவனம் நகரத்தில் செஞ்சி ரோட்டில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள இரண்டு மதுக்கடைகளை மூட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசு அறிவித்த 717 மதுக்கடைகளில் இவ்விரு மதுக்கடைகளும் உள்ளதா?

இல்லை என்றால் 717 மதுக்கடைகளோடு சேர்த்து இவ்விரு மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - DYFI திண்டிவனம் பகுதிக்குழு
Chief Minister of Tamil Nadu

Address

Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share