Muruga yugam Siddhar yugam Arangar yugam

  • Home
  • Muruga yugam Siddhar yugam Arangar yugam

Muruga yugam Siddhar yugam Arangar yugam ஆறுமுக அரங்கர் தலைமையில் முருக யுகம்

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 10 #நிராசத விராசத வரோதய பராபர   னிராகுல னிராமய பிரானிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி   நில...
13/09/2026

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 10
#நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்

#குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

#புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்

#தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.

🌷 #மகான்_அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

🌷 முன்னுரை : " #நிராஜத" என்று தொடங்கும் மயில் விருத்தம். #எம்பெருமான் #முருகனின் உன்னதமான கல்யாண குணங்களை அர்ச்சனைப் பூக்கள் போல் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி அவன் பாதங்களை நெஞ்சில் பதிக்கும் பாடல். எப்படி தெய்விக குணங்களை நோக்கி நம் வாழ்வும் நகர வேண்டுமெனக் காட்டத்தான் மயிலேறி வந்து, குன்றேறிக் கோயில கொண்டிருக்கிறானோ குமரன்? அவன் மந்திர மயில் எடுத்து வைக்கும் அழகிய நடையும், அந்த வனப்பான வாழ்வுக்குத்தான் இலக்கணம் வகுக்குகிறதோ! பக்தியில் உருகும் #அருணகிரியின் பாகு தமிழ் வளத்தில் மயங்குகிறோம். #முருகன் முழுவதுமாய் ஆட்கொள்கிறான். வேலோடும், மயிலோடும் இதய மேடையில் காட்சி தருகிறான்.

🌷நிராஜத விராஜத வரோதய பராபரன்
நிராகுல நிராமயன்

விளக்கம் : குணங்கள் அனைத்தும் கடந்த அரும்பொருளே முருகா. ஆனாலும் லோகம் முழுவதும் எந்த குணத்தைக் கை கொள்ளக் கூடாது, எந்த குணத்தை கை கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தெளிவைத் தருகிறான். அவற்றையே தன் உன்னத குணங்களாக காட்டுகிறான். ரஜத குணமே அற்றவன். ஏனென்றால் அந்த ரஜதகுணம் மெதுவே, மெதுவே, ஆணவத்திலும், அசுர சக்திக்கும் வழி வகுத்து விடும். தவமிருந்து தான் ஆரம்பிப்பார்கள் அசுரர்கள். வரமெல்லாம் கைக்கு வந்தவுடன் அட்டகாசங்கள் ஆரம்பிக்கும். ரஜத்துக்கு எதிரான சாத்வீக குணம் கொண்டவன் எம்பெருமான். ஏனென்றால் அந்த சாத்வீகம், தெய்வப் பண்புகளின் பக்கம் கொண்டு சேர்க்கும். வரங்களை வாரி வழங்குபவன். அந்தக் கருணைக்கு எல்லை வகுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவன் பரமேஸ்வரன். ஆகுலம் என்னும் மனக்கிலேசமும் மனக்கவலையும் அற்றவன். அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மகிழ்ச்சியாய் இருக்கச் சொல்கிறான். எந்த நோயும் அணுக முடியாப் பரிசுத்தன். அப்படித்தான் மானுடரும், நோய் நெருங்க முடியா உடலும் உள்ளமும் கொண்டிருக்க வேண்டும் என்கிறான். தலைவா, உன் வழிகாட்டல் புரிகிறது.

🌷நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி
நிலாவிய உலாச இதயன்

விளக்கம் : நெறியில்லாத, அறவழி நடக்காத கீழோர் இவனை அணுகும் தூரத்தில் இல்லை. அதனால் ஆனந்தமயமாய் இருக்கிறான். உலகத்தோரும், தீயதை விலக்கிக் கொண்டே வந்தால், இதயம் சமன்பட்டு இன்பம் துளிர்க்கும் என்கிறான்.

🌷குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்
குரா நிழல் பராவு தணிகை

விளக்கம் : செழித்து அடர்ந்து வேர்பிடித்த குரா மரங்களின் கூட்டம் இருக்கும் திருத்தலங்களில் இவன் சானித்தியம் கொண்டிருக்கிறான். இவன் இருக்கும் #திருவலஞ்சுழி போன்ற பக்தி ஸ்தலங்கள் ஓர் உதாரணம். குரா மர நிழல் பரவி நின்று இதம் தரும் ஒளிமயமான #தணிகை மலையை இருப்பிடம் கொண்டான்.

🌷குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய
குலாவிய கலாப மயிலாம்

விளக்கம் : அந்தத் தணிகை மலைக்கு இணையான சிறந்த குன்றுகள் தோறும் குமரன் கோயில் கொண்டிருப்பதால் அவன் மயிலுக்கு ஒரே கொண்டாட்டம். அங்கெல்லாம் அது அழகு நடை பயின்று, ஆனந்த நடனம் புரியும். இன்ப உலா. குமரனுடன் கொஞ்சி நிற்கும் மயிலே சரணம்.

🌷புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்

விளக்கம் : திரிபுர சம்ஹாரியின் திருப்புதல்வன் #சிவகுருநாதன், நித்திய யெளவனன்-- என்று உளம் உருகும் அடியாருக்காக, இரக்கத்தால் கசிந்து, வேண்டுகின்ற வரம் அளிப்பவன். மும்மூர்த்திகளில் முரன் என்னும் அசுரனை வதைத்துக் காக்கும் கடவுளாய் பெருமை கொண்டிருக்கும் #திருமால் மருகன்.

🌷பலாசன புலோமசை சலாமிடு
வலாரி புகலாகும் அயிலாயுதன்

விளக்கம் : இனிய கனிகளைப் புசித்துப் பசியாறும் அழகிய இந்திராணி போற்றி வணங்கும் முருகன்; இந்திரன் சரணாகதி செய்த வேலாயுதக் கடவுள்;

🌷தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல
சாதனன் விநோத சமரன்

விளக்கம் : நீண்ட மலைத்தொடர்களை வாசஸ்தலமாகக் கொண்ட வேடுவர்களின் கடவுளாய், அவர்கள் மாப்பிள்ளையும் ஆகி விட்ட அழகன், வள்ளி மணாளான். தினைப்புனத்தில் வேடன், வேலன், விருத்தன் என்ற திருவிளையாடல்கள் நிகழ்த்தியவன்.

🌷தடாரி விகடாசுரன் குடாரி இதபடா திகழ்
ஷடாநநன் நடாவு மயிலே

விளக்கம் : அப்படி அன்பர்களுடனும், அடியார்களுடனும், விளையாடுபவன் தான் அன்று, க்ரௌஞ்சம் தூள் தூளாக்கியவன், சூரபன்மன் குடலைக் கோடரி போல் பிளந்தவன். பக்தர்களுக்கு பன்னிரு கையனாய், பன்னிரு விழி அழகனாய் கருணை புரிபவன். அவன் நடத்துகின்ற ஏறுமயிலே! அவன் சங்கல்பத்துக்கு ஏற்ப அருள் மயமாய், ஆனந்த மயமாய், உலவுகின்ற உன்னதமான மயிலே! சரணம் சரணம்.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

12/09/2026

ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் ஆறுமுக அரங்க மகா ஜோதியே நம

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 9 #சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல   கிரியெனவும் ஆயிரமுகத்தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டு...
12/09/2026

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 9
#சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா

#நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்

#அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே

#மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே.

🌷 #மகான் #அருணகிரிநாதர்

பதவுரை

தமனிய சிகர ... பொன் நிறமான சிகரங்களை உடைய,

மேருகிரி ... மேரு மலை என்று சொல்லும்படியாகவும்,

ரசதகிரி ... கைலாய மலை எனும்படியாகவும்,

நீலகிரி ... நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும்
(இவ்வாறு பல நிறங்களைப் பெற்று)

ஆயிரமுக தெய்வ நதி ... ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை,

காளிந்தி என ... யமுனை நதி போல,

நீழல் இட்டு ... ஒளி வீசும்,

வெண்திங்கள் சங்கு எனவும் ... வெண்நிலா போன்ற சங்கின்
நிறத்தைப் போலவும்,

ப்ரபா நிகர் எனவும் ... தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும்
திருவாச்சி போலவும்,

எழுதரிய நேமி என ... எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான
சக்ரம் போலவும்,

உலகடைய நின்ற மாமுகில் என்னவே ... உலகம் முழுவதும்
பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும்,

நெடிய முது ககன முகடு ... நீண்ட பழமையான அண்டத்தின்
உச்சி வரையிலும்,

வீசி நிமிரும் ... தோகையை வீசி நிமிர்ந்திருக்கும்,

ஒரு ... ஒப்பற்ற,

நீல கலாப மயிலாம் ... நீல நிறத் தோகையைக் கொண்ட மயில்

(அது யாருடையது என வினாவினால்)

அகரு மரு மணம் வீசு ... அகில் மருக் கொழுந்து மணம் வீசும்,

தணிகை அபிராம வேள் ... திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன்,

அடியவர்கள் மிடி அகலவே ... தன்னுடைய பக்தர்களின் வறுமை
நீங்கும்படி,

அடல் வேல் கரத்தசைய ... திருக் கரத்தில் வலிமை வாய்ந்த
வேலாயுதம் விளங்கி நிற்கவும்,

ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே ... பன்னிருத்
திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட
மாலைகள் அசையவும்,

மகர கன ... மீன் வடிவமுள்ள பொன்நிறமான,

கோமள குண்டலம் பல அசைய ... அழகிய காதில் குண்டலங்கள்
அசையவும்,

வல் அவுணர் மனம் அசைய ... கொடிய அரக்கர்களின் மனம்
சஞ்சலப் படவும்,

மால் வரை அசைய ... மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும்,

உரகபிலம் அசைய ... பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும்,

எண் திசை அசைய ... எட்டுத் திக்குகளும் அசைவுறவும்,

வையாளி ஏறும் மயிலே ... பவனிக்காக சவாரிக்கு புறப்படும்
மயிலே தான் அது.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

11/09/2026

மகான்கள் திருமூலர் , இராமதேவர் , அகத்தியர் ,கொங்கணர் , கமலமுனிவர் , சட்டைநாதர் , கருவூரார், சுந்தரானந்தர் , வான்மீகர் , நந்தீசர் , பாம்பாட்டிசித்தர் , போகர் , மச்சமுனி , கோரக்கர் , பதஞ்சலியார் , தன்வந்திரி , இடைக்காடர் , குதம்பைசித்தர்
மகான்கள் திருவடிகள் போற்றி போற்றி

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 8 #செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை   சிந்தப் புராரி யமிர்தந்திரும்பப் பிறந்ததென ஆயிரம் ப...
11/09/2026

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 8
#செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்

#சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்

#விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்

#துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷பதவுரை

ராசி நிரை ... (வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின்
கூட்டம்,

செக்கர் அளகேச ... சிவந்த நிறமுள்ள குபேரனின் செல்வத்தைப்
போன்ற,

புரி சிகர ரத்ன ... விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை,

சிந்த ... சிதற,

புராரி அமிர்தம் ... திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம்,

திரும்பப் பிறந்தது என ... மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச,

ஆயிரம் பகு வாய்கள் ... பிளவு பட்ட ஆயிரம் வாய்களும்,

தீ விஷம் கொப்புளிப்ப ... நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக்கக்க,

சக்ர கிரி சூழ வரு மண்டலங்கள் ... சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும்,

சகல சங்கார ... ஒரே மூச்சில் அழிக்க வல்ல,

கோர நயன ... கொடூரமான பார்வையை உடைய,

தறுகண் வாசுகி ... வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின்,

பணாமுடி எடுத்து உதறும் ... படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற,

சண்டப் பிரசண்ட மயிலாம் ... உக்ரமும் வேகமும் கொண்ட மயில்
(அது யாருடையது என வினாவினால்)

விக்ரம கிராதகுலி ... வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த,

புன மீது உலாவிய ... வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த,

விருத்தன் ... கிழ ரூபம் எடுத்த மேலோன்,

திருத்தணிகை வாழ் வேலாயுதன் ... சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணித் தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள்,

பழ வினை துயர் அறுத்து ... என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள்,துன்பத்தை ஒழித்து,

எனை வெளிப்பட உணர்த்தி அருளி ... நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி,

துக்க சுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி ... இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி,

வாகனமானது ... வாகனமாக திகழும்,
ஓர் ... ஒப்பற்ற,

துரக ரத கஜ கடக ... குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட,

விகட தட ... பெருமை உள்ளதும் அகன்றதுமான,

நிருதர் குல துஷ்டர் ... அசுரர்குல தீயோர்களை

நிஷ்டூர மயிலே ... கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

 #ஓங்காரக்குடிலாசான்  #குருநாதர்  #ஆறுமுக_அரங்கர்_பெருமானின்  #குருவார  #அருளாசி_நூல் -  #ஓலைச்சுவடி 10.09.2026 வியாழன்M...
10/09/2026

#ஓங்காரக்குடிலாசான் #குருநாதர் #ஆறுமுக_அரங்கர்_பெருமானின் #குருவார #அருளாசி_நூல் - #ஓலைச்சுவடி 10.09.2026 வியாழன்
Muruga yugam Siddhar yugam Arangar yugam

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 7 #தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்   செகதலமு நின்று சுழலத்திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ...
10/09/2026

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 7
#தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்

#பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்

#ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்

#கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.

🌷 #மகான்_அருணகிரிநாதர் அருளிய #முருகப்பெருமான் #புகழ்மாலை

🌷 #பதவுரை

தீர ... மிகவும் நன்றாக,

பயோததி ... சமுத்திரங்களும்,

திக்கும் ... எட்டுத் திசைகளும்,

ஆகாயமும் ... மேல் வானமும்,

செக தலமும் ... பூவுலகும்,

நின்று சுழல ... நின்ற நிலையில் சுழற்சி அடையவும்,

திகழ்கின்ற ... விளங்குகின்ற,

முடி மவுலி ... ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும்,

வெம் சிகை தீக் கொப்புளிக்க ... கொடிய உச்சியின் மேல் உள்ள
படங்கள் நெருப்பைக் கக்கவும்,

வெருளும் ... பயத்தை அடைந்த,

பாரப் பணாமுடி ... கனத்தப் படக் கூட்டங்களை உடைய,

அநந்தன் முதல் அரவெலாம் ... ஆதிசேடன் முதலான சர்ப்பக்
கூட்டங்கள்,

பதை பதைத்து நடுங்க ... பட படவென்று அச்சமுற்று நடுங்கவும்,

படர் சக்ரவாளகிரி ... எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி,

துகள் பட ... தூள் தூளாகப் போகவும்,

வையாளி வரு ... பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும்,

பச்சைப் பிரவாள மயிலாம் ... பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும்

உடைய தோகைகளைக் கொண்ட மயில்
(அது யாருடையது என வினாவினால்)

ஆர ... மிக்க கீர்த்தி உடையதாய்,

புளகித ... புளகாங்கிதம் கொண்டதாய்

மதன ... ஒளி மிகுந்ததாய்,

பாடீர ... சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய்,

அமிர்த கலச கொங்கையாள் ... அமிர்தம் நிறைந்த குடத்தைப்
போன்ற தன பாரங்களைக் கொண்டவள்,

ஆடு மயில் நிகர் வல்லி ... தோகையை விரித்து ஆடும் மயிலைப்
போன்றவள்,

அபிராம வல்லி ... பேரழகு உடையவள்,

பரமானந்த வல்லி ... பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள்,

சிறுவன் ... இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன்,

கோர த்ரிசூல ... கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும்,

த்ரியம்பக ... முக்கண்ணரும்

ஜடாதார ... நிமிர் சடையானும்,

குரு ... லோக குருவாகிய சிவபெருமான்,

தரு ... தந்தருளிய,

திருத்தணிகை வேள் ... தணிகேசன்,

கொடிய நிசிசரர் உதிரம் எரி புகுத ... கொடிய செயல்களையே
செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும்,

விபுதர் பதி குடி புகுத ... தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும்,

நடவு மயிலே ... செலுத்திய மயிலே தான் அது.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணசோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்ரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 6 #சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்   சகல லோகமு நடுங்கச்சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அம...
09/09/2026

🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 6
#சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்

#கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

#சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்

#கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 பதவுரை .........
சங்கார காலமென ... நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம்
அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று,

அரி பிரமர் வெருவுற ... திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும்,

சகல லோகமும் நடுங்க ... எல்லா உலகங்களும் அச்சப்படவும்,

சந்திர சூரியர் ஒளித்து ... சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து
கொள்ளவும்

இந்திராதி அமரரும் சஞ்சலப்பட ... இந்தராதி அமரர்கள்
குழப்பமடையவும்,

உமையுடன் கங்காளர் ... உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த
சிவனார்,

தனி நாடகம் செய்த போது ... ஒப்பற்ற சர்வ சங்கார நடனம்
செய்த சமயம்,

அந்தகாரம் பிறந்திட ... பிரளய இருள் மூடி இருந்தது போல்,

நெடுங் ககன கூடமும் ... விரிந்த மேல் உலகத்தின் உச்சியும்,

மேலை முகடும் ... வானத்தின் உச்சியும்,

மூடிய ... மறையும்படி செய்த

பசுங்கற்றை கலாப மயிலாம் ... பசிய தோகையை உடைய மயில்
(அது யாருடையது என வினாவினால்)

சிங்கார ... பேரழகுடைய,

குங்கும் படீர ... குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும்,

ம்ருக மத ... கஸ்தூரியையும் புனைந்த,

யுகள சித்ர பயோதர கிரி ... இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய
மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட,

தெய்வ வாரண வனிதை ... தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால்
வளர்க்கப்பட்ட தேவயானையின்,

புனிதன் ... மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான,

குமரன் ... குமரக் கடவுள்,

திருத்தணி மகீதரன் ... திருத்தணி மலையில் வாழ்பவன்,

இரும் கங்காதரன் ... பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக
ஏந்தப்பட்டவன்,

கீதம் ஆகிய சுராலயன் ... இசைக்கு ஆதாரமான ஏழு
சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன்,

கிருபாகரன் ... கருணைக் கடல்,

கார்த்திகேயன் ... கிருத்திகை மாதர்களின் புதல்வன்,

கீர்த்தி மா அசுரர்கள் மடிய ... வலிமை மிக்க சூரபத்மாதிகள்
மடியவும்,

க்ரவுஞ்ச கிரி கிழிபட ... கிரவுஞ்ச மலை பிளவுபடவும்,

நடாவு மயிலே ... போர்க்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த
மயிலே தான் அது.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muruga yugam Siddhar yugam Arangar yugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muruga yugam Siddhar yugam Arangar yugam:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share