Nalini Shantha Kumari

Nalini Shantha Kumari வார்த்தைகளில் கவிதை, செயல்களில் நீதி – ஒரு தமிழ்பெண்ணின் பயணம்

A.D.W. நளினி சந்தகுமாரி,
பி.காம்., பி.எட்., எம்.ஏ., எல்.எல்.பி.

(Hons.)

மாநில மகளிரணி செயலாளர் (2019–2024)
மாநில துணை பொதுச் செயலாளர் (2024–20!!)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தமமுக)

இந்த மண்ணை நேசிக்கும் மக்களே ... நாளை நம் கடலோரத்தையும் , நம் கடலோடி மக்களையும் பாதுகாக்க சிறு துவக்கத்தை  ஆரம்பிப்போம் ...
12/06/2026

இந்த மண்ணை நேசிக்கும் மக்களே ... நாளை நம் கடலோரத்தையும் , நம் கடலோடி மக்களையும் பாதுகாக்க சிறு துவக்கத்தை ஆரம்பிப்போம் ...

🚨 இயற்கையை பாதுகாப்பதும், பேரிடர் பாதிப்புகளை குறைப்பதும் உலக நாடுகள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயமாகும்.

அந்த வகையில், ஜப்பான் மேற்கொண்டுள்ள "Great Forest Wall" திட்டம் இயற்கையையும் அறிவியலையும் இணைத்து கடலோர மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சுமார் 395 கி.மீ நீளத்தில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையமும், 90 லட்சம் மரங்கள் நடப்பட்டதும், எதிர்கால சந்ததியினருக்கான பொறுப்புணர்வின் எடுத்துக்காட்டாக உள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் பேரிடர் அபாயங்களை குறைக்க முடியும் என்பதை இந்த திட்டம் உலகிற்கு உணர்த்துகிறது.

1. சட்டமன்ற உறுப்பினர் மகன்2. நாடாளுமன்ற உறுப்பினர் மகன்3. துணை மேயர் மகள்Gen Z அரசியல் காட்ட வந்தீங்களா... இல்ல வாரிசு ...
12/06/2026

1. சட்டமன்ற உறுப்பினர் மகன்

2. நாடாளுமன்ற உறுப்பினர் மகன்

3. துணை மேயர் மகள்

Gen Z அரசியல் காட்ட வந்தீங்களா... இல்ல வாரிசு அரசியலைக் காட்ட வந்தீங்களா? 😂

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்க...
12/06/2026

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!

திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!

உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!

குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!

இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..!

தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!

கடையநல்லூர் அருகே கரடி குளத்தை சேர்ந்தவர் மாரி முத்து, லாரிடிரைவர். இவரது மனைவி இசைக்கலை. இந்த தம்பதிக்கு மிதுன்ராகுல் எ...
12/06/2026

கடையநல்லூர் அருகே கரடி குளத்தை சேர்ந்தவர் மாரி முத்து, லாரிடிரைவர். இவரது மனைவி இசைக்கலை. இந்த தம்பதிக்கு மிதுன்ராகுல் என்ற மகனும், அனன்யா
என்ற மகளும் உள்ளனர். மாரிமுத்து நேற்று இரவு‌ 7 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பொய்கை பகுதிக்கு செல் செல்லும் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே கருப்பன் கோவில் வழியாக வந்தபோது அவரை ஒரு மர்மகும்பல் வழிமறித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், மாரிமுத்துவின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்தது. இதில் அவரது தலை ஒரு புறமும், உடல் ஒருபுறமும் விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே அந்த கும்பல் அங்கி ருந்து தப்பி சென்று விட்டது.

அந்த வழியாக சென்ற சிலர், மாரிமுத்து தலை துண் டாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்டி, சப்-இன்ஸ்பெக் டா சம்சுதீன், அலெக்ஸ் மற் றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் கிடந்த மாரி முத்துவின் செல்போனை கைப்பற்றினர்.

மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், "இதற்கு முன்பு கரடிகுளம்-ஆவுடையாபுரம் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறை யில்இரண்டு நபர்கள் இறந்து கிடந்தனர். அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. குற்றவா ளியை உடனடியாக கைது செய்யாமல் கொல்லப்பட்ட மாரிமுத்துவின் உடலை எடுக்கவிடமாட்டோம்" என
ஆவேசத்துடன் கூறினர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர். மாரிமுத்துவை கொடூ ரமாக கொலை செய்தது யார்? எந்த வாகனத்தில் வந்த னர்? எத்தனை பேருக்கு இதில் தொடர்புடையது? என பலகோணங்களில் விசா ரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மாரிமுத்து படுகொலை செய்யப்பட்ட பகுதிக்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

எனவே, குற்றவாளிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

12/06/2026
சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க!இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்!
11/06/2026

சும்மா வீட்ல இருக்காங்கன்னு சொல்லாதீங்க!இல்லத்தரசிகளின் உழைப்புக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு! சூப்பர்!

.பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்துக்க வந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கிட்ட வழக்கம் போல மீடியா மக்கள் மைக்க நீட்ட...
11/06/2026

.
பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்துக்க வந்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கிட்ட வழக்கம் போல மீடியா மக்கள் மைக்க நீட்ட..,"போங்கய்யா அந்த பக்கம்.,அசிங்கமா இல்லையா உங்களுக்கெல்லாம்?..ன்னு கேட்டு துப்பிட்டு போயிருக்காரு..!

காலைல நியூஸ் பாக்கிறப்போ நானும் எங்க வீட்டில் இதே விஷயத்தை டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். அது ஏன் சினிமாகாரவங்க வீட்டு நல்லது கெட்டதுல மட்டும் இந்த மீடியா மக்கள் ஓவர்டைம் பாக்குறாங்க.? துக்க வீட்டுக்கு வேதனையோட வர்றவங்களை நடுவில் நிப்பாட்டி "என்ன சொல்ல வர்றிங்க.. எப்படி ஃபீல் பண்றீங்கன்னு" கேக்கறதெல்லாம் எவ்ளோ கேவலமான உளவியல் வன்முறை?!?!

இதெல்லாம் யாருமே கேட்டு அட்ரஸ் பண்ண மாட்டேங்கறங்களேன்னு ஃபீல் பண்ணோம். டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா gave a befitting reply to those morons..!! Feel so releived to see this..!!❤️

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணக் கோட்டை (Jaffna Fort) என்பது வெறும் கற்களால் ஆன தற்காப்பு அரண் மட்டுமல்ல; அது...
11/06/2026

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணக் கோட்டை (Jaffna Fort) என்பது வெறும் கற்களால் ஆன தற்காப்பு அரண் மட்டுமல்ல; அது தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மிக முக்கிய இராணுவ ஆதிக்கத்தின் அடையாளமாக விளங்கியது.

1987-இல் தியாக தீபம் திலீபன் தனது உண்ணாநோன்புக் களத்தில் நின்றபோது, "யாழ்க் கோட்டையிலே நமது புலிக்கொடி பறக்க வேண்டும்” என்று ஒரு வரலாற்றுப் பெருங்கனவை விதைத்தார். அவர் மறைந்து சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து, 1990 செப்டம்பர் 26 அன்று, ஒரு நவீன போரியல் அதிசயத்தோடு அந்தக் கனவு எப்படி நனவானது?

1990ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அமைதிப்படை (IPKF) இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

1990 June மாதத்தில் "இரண்டாம் கட்ட ஈழப்போர்" வெடித்தது.

போர் தொடங்கிய உடனே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த பெரும்பாலான இராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் விளைவாக, யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதியில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்க் கோட்டைக்குள் இலங்கை இராணுவத்தினர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, நாற்புறமும் முற்றுகையிடப்பட்டனர்.

இலங்கை சிங்க ரெஜிமென்டின் (6th Sinha Regiment) 200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், உள்ளூர் காவல் துறையினரும் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டனர்.

கோட்டைக்குள் இருந்த வீரர்களில் மிக மூத்த அதிகாரியான கேப்டன் ஜெயந்த பெர்னாண்டோ (Lt. Jayantha Fernando)கோட்டைக்கு பொறுப்பாக இருந்தார்.

விடுதலைப் புலிகள் கோட்டையைச் சுற்றித் துப்பாக்கி மற்றும் மோர்ட்டார் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், உள்ளே இருந்த இராணுவத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் வெடிபொருட்கள் தீர்ந்துபோகும் பேராபாயம் ஏற்பட்டது.

கோட்டைக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்த முற்றுகையால் கோட்டையிலிருந்த வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் போனது.

படுகாயமடைந்த வீரர்களை வெளியேற்ற முடியாததால், அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்தது

இதற்காக இலங்கை விமானப்படை ஆபத்தான மீட்புப் பணியை 1990 ஜூலை 3 அதிகாலையில் செயல்படுத்தியது , அதன் பெயர் Operation Eagle.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மீட்பு ஹெலிகாப்டரைப் பாதுகாக்க, முதலில் 'SIAI Marchetti SF.260' ரக போர் விமானங்கள் மூலம் புலிகளின் நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

பெல் 212' (Bell 212) ரக ஹெலிகாப்டர் ஒன்று, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கோட்டையின் கங்குப் பகுதியில் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து தரையிறங்கியது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய சில நிமிடங்களில், கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் கோட்டையினுள் விரைவாக இறக்கப்பட்டன.
அதே நேரத்தில், அங்கிருந்த படுகாயமடைந்த வீரர்கள் மற்றும் சடலங்கள் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த ஆபத்தான துணிகர நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால், அது அப்போது இலங்கை இராணுவத்தினரின் மத்தியில் பெரும் பலத்தையும் மன உறுதியையும் ஏற்படுத்தியது.

எனினும் முற்றுகைக்குள்ளான தமது வீரர்கள் முற்றிலுமாக அழியும் நிலையில் இருப்பதை உணர்ந்த இலங்கை அரசு, அவர்களை மீட்கவும் யாழ் நகரைக் கைப்பற்றவும் இரு முக்கிய கூட்டு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.

இந்த ஒட்டுமொத்தப் பணிகளையும் வடக்கு பிராந்திய தளபதியான மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ முன்னின்று வழிநடத்தினார்.

கோட்டை முற்றுகையை உடைக்க தரை, கடல், வான் என முப்படைகளையும் இணைத்து "ஆபரேஷன் திரிவித பலய" (Operation Thrividha Balaya) தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் தரைவழித் தாக்குதலை வழிநடத்த இலங்கை இராணுவத்தின் இரு முக்கியப் படைப்பிரிவுகள் களமிறக்கப்பட்டன:

இந்த இரு படைப்பிரிவுகளை வழிநடாத்நியவர்கள் வேறு யாருமல்ல, லெப்டினன்ட் கேணல் கோத்தபாய ராஜபக்ச -காஜபா ரெஜிமென்ட் (1st Gajaba Regiment) மற்றும் லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா -சின்கா ரெஜிமென்ட் (1st Sri Lanka Sinha Regiment).

கோட்டைக்கு வெளியிலிருந்து கோத்தபாயவும், சரத் பொன்சேகாவும் எத்தனையோ நவீன ஆயுதங்களோடு முற்றுகையை உடைக்க முயன்றனர்;

கோட்டைக்குள்ளே இருந்த ஜெயந்த பெர்னாண்டோவின் படைகளும் தங்களால் இயன்றவரை எதிர்த்து நின்றன.

"இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் முற்றுகையை உடைத்துவிடுவோம்" என்ற நம்பிக்கையோடு இலங்கை இராணுவம் நகர்ந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில்தான், போர்க்களத்தின் திசையையே மாற்றிய அந்த அதிர்ச்சி அரங்கேறியது.

கோட்டையை நோக்கிப் பாய்ந்து வந்தன சில விசித்திரமான எறிகணைகள்!

அவை சாதாரண ஆயுதங்கள் அல்ல; தமிழ் மக்களின் சொந்தக் கண்டுபிடிப்பான கொடிய பிரம்மாண்ட எறிகணை.

விடுதலைப் புலிகளின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவின் சொந்தப் பொறியியல் அறிவைக் கொண்டு, உள்நாட்டிலேயே இந்த அதிரடி எறிகணையை வடிவமைத்திருந்தார்கள்.

அதன் வெடிப்புத் திறனும், அது ஏற்படுத்திய பேரழிவும் இலங்கை இராணுவம் அதுவரை போர்க்களத்தில் கண்டிராத ஒன்று!

கோட்டையின் தடிமனான சுவர்களையும், இராணுவத்தின் தற்காப்பு அரண்களையும் துண்டு துண்டாக உடைத்தெறிந்தது அந்த மோட்டரின் தாக்குதல்.

உக்கிரத்தைத் தாங்க முடியாமல், கோட்டைக்குள் இருந்த இராணுவத்தினரின் மன உறுதி முற்றிலும் துகள்களாக நொருங்கிப் போனது.

அங்கே என்ன நடக்கிறது? அங்கே தாக்குவது யார்? என்ன ஆயுதம் அது?" என்று மண்டைதீவில் பதற்றத்தோடு காத்திருந்த சரத் பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சாவும் உளவுத் தகவல்களைத் திரட்டியபோது அவர்களுக்குக் கிடைத்த ஒரே பதில்: "அங்கே தாக்குவது பசிலன்!"

சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த முற்றுகை அதிரடித் தாக்குதலால் இலங்கை இராணுவம் வரலாறு காணாத உயிர்ச் சேதங்களைச் சந்தித்தது. மேலும் கோட்டையைத் தக்கவைப்பது சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கோட்டையிலிருந்து படைகளைப் பின்வாங்க அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.

"பசிலன்" என்ற ஒற்றைப் பெயரைக் கேட்டதுமே, இனியும் கோட்டைக்குள் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்த இராணுவத்தினர், தங்களின் தளபதிகளான கோத்தபாயவும் சரத் பொன்சேகாவும் மண்டைதீவில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தலைதெறிக்க மண்டை தீவை நோக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.

நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி, "பசிலன்" என்ற ஒற்றைப் புலிப் போராளியின் நினைவாக இதற்கு "பசிலன் 2000" எனப் பெயரிடப்பட்ட அந்த எறிகணை கோட்டையில் ஆக்கிரமித்திருந்த அத்தனை சிங்களப் படைகளையும் விரட்டியடித்தது.

இதன்படி, 1990 செப்டம்பர் 26 அன்று, இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றிலும் கைவிட்டு, மண்டைதீவை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பின்வாங்கினர்.

இராணுவம் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில், விடுதலைப் புலிகளின் படையினர் கோட்டையினுள் நுழைந்து, அதன் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர்.

அன்று தியாக தீபம் திலீபனின் மூன்றாம் ஆண்டு நினைவுத் தினம். தாயகத்தின் ஊர் எங்கும் உள்ள கோயில் வளாகங்களில் மேடை போட்டு ஒலிபெருக்கியில் திலீபனின் ஐந்தம்ச கோரிக்கைகள் பற்றிய பேச்சுகள் உணர்வுப்பூர்வமாக ஒலித்துக் கொண்டிருந்தன.

திடீரென அந்தப் பேச்சுகள் நிறுத்தப்பட்டு, ஒரு முக்கிய அறிவிப்பு ஒலிபெருக்கியில் இருந்து மக்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது:

"கோட்டை வீழ்ந்துவிட்டது... கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது!"

"கோட்டையில் புலிக்கொடி பறக்க வேண்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் அதை 650 போராளிகளுடன் 651வது ஆளாக வானில் இருந்து பார்க்க வேண்டும்" என்று திலீபன் மரணப் படுக்கையில் உதிர்த்த லட்சிய வரிகளில் பாதி அவர் மறைந்த அதே நினைவு நாளிலேயே ஈழ மண்ணில் சாத்தியமானது.

யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வீழ்ச்சிக்கு முதன்மைப் பங்காற்றியது 'பசிலன் 2000' எறிகணை.

வல்லரசு நாடுகளின் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி, தமிழர்களின் சொந்தப் பொறியியல் திறனாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட "பசிலன் 2000", உலகப் போரியல் வரலாற்றில் தமிழ் மக்களின் இராணுவ மற்றும் உணர்வுப்பூர்வமான மாபெரும் வெற்றியை என்றென்றும் அழியாத எழுத்துக்களால் செதுக்கியுள்ளது.

பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் காவிரி உரிமைப் போராட்டம் !=============================நடிகர் இரஜினி காந்தை தூண்டிவிட்ட...
11/06/2026

பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் காவிரி உரிமைப் போராட்டம் !
=============================
நடிகர் இரஜினி காந்தை தூண்டிவிட்டு இரண்டகம் செய்த கருணாநிதி!
==============================

தமிழர் உரிமைப் போராட்டங்கள் தீவிரமடையும் போதெல்லாம் அந்த போராட்டத்தை இரண்டாக உடைத்து துண்டாடுவதுதான் கருணாநிதியின் பிறவிக்குணமாகும்.

காவிரி உரிமையை இந்திரா காந்தியிடம் கூட்டணி வைத்து, அடகு வைத்தவர் கருணாநிதி என்பது ஊரறிந்த உண்மை.

அவர் தமது தவறை உணர்ந்து மீண்டும் போராட முன்வரா விட்டாலும் பரவாயில்லை. இரண்டகம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

2002ஆம் ஆண்டில் காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை கர்நாடகம் திறக்க மறுத்தது. குறுவை சாகுபடிக்கும் நீரில்லை, சம்பா சாகுபடிக்கும் நீரில்லை, என்ற நிலையில், தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் தமிழ்நாட்டிற்கு நீர் தரக்கூடாது என்று வன்முறையும், கலவரமும் தூண்டிவிடப்பட்டது. தமிழ்நாடு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. தமிழர் கடைகள் குறி வைத்து நொறுக்கப்பட்டன.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருந்த நிலையில், கன்னட திரையுலகினர் ஒன்று கூடி எரிகின்ற தீயை மேலும் ஊதி விட்டனர்.

தமிழ்நாடு திரையுலகம் இதற்கு பதிலடி தராமல் மெளனம் காத்து வந்தது. தமிழ்ப் பால் குடித்ததாக பாட்டுப் பாடிய இரஜிகாந்தும் வாய்திறக்க வில்லை.

இந்நிலையில் தான் இனமான இயக்குநர் பாரதிராஜா கர்நாடக திரைத்துறையினருக்கு பதிலடி தர முடிவு செய்தார்.

தமிழர் பாதுகாப்பு அணி என்ற அமைப்பை பாரதிராஜா உருவாக்கினார்.

தமிழர் பாதுகாப்பு அணி சார்பில் மத்திய அரசு தரும் விருதுகளை திரைத்துறையினர் ஏற்கக் கூடாது என்றும், காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் போகக் கூடாது என்றும் தீர்மானம் போடப்பட்டது.

12.10.2002 இல் நெய்வேலியில் பேரணி- முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிராஜா அறிவித்தார்.

12.10.2002 ஆம் ஆண்டில் காவிரி நீர் உரிமையை மீட்டிட ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தரும் நெய்வேலியை நோக்கித் திரண்டது.

இதற்கு முன்பே, 17.7.1991ல் காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் தராதே என்று முதன்முதலில் போராடிய இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. (தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்) .

தலைவர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், நெய்வேலி தலைமை நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு 35 தோழர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா தலைமையில் சென்னையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் துணை நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் நெய்வேலிக்குப் புறப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான திரையுலகினர் ஒன்று கூடி கர்நாடக அரசுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கமான பெப்சிஅலுலவகம், திரைப்பட கில்டு சபை ஆகியவை நெய்வேலி போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்தன.

700 நடிகர்கள் உள்பட சுமார் 5000 பேர் கறுப்பு உடை அணிந்து பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்றைய நாளில் நெய்வேலி போராட்டத்திற்குப் போட்டியாக திடீரென்று சேப்பாக்கத்தில் நடிகர் இரஜினிகாந்த் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் 40 இலட்சம் தமிழர்கள் தாக்கப் படுவார்கள் என்று இரஜினிகாந்த் பீதியைக் கிளப்பினார்.

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோளுக்கு இணங்க, ரஜினிகாந்த் உண்ணாநிலைப் போராட்டத்தை மறுநாள் நடத்தினர்.

அப்போது பாரதிராஜா தலைமையில் நடைபெறும் நெய்வேலி போராட்டத்தை கருணாநிதி ஆதரிக்க மறுத்து விட்டார். திமுக நடிகர்கள் எவரும் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.

மாறாக, இரஜினிகாந்த் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அதில் கலந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தார். பிறகு தனது மகன் ஸ்டாலினை அனுப்பி ஆதரவு கடிதத்தை கொடுத்து அனுப்பினார்.

"உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு" என்ற பதாகையுடன் தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் தமிழினத்தின் கோடாரிக் காம்பு ப.சிதம்பரம்.

உண்ணாவிரதம் முடிந்த கையோடு, இரஜினி காந்த் ஆளுநர் இராம் மோகன்ராவிடம் காவிரியில் நீர் விடக் கோரி மனு அளித்ததோடு, கங்கை- காவிரி இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக அறிவித்தார்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் கன்னடர்களுக்கு எதிராக திரும்பக் கூடாது என்பதற்காக இரஜினிகாந்த் செய்த மோசடித்தனமான அறிவிப்பு இதுவென்று அப்போதே தமிழின உணர்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

ரஜினி காந்தின் இந்த மோசடி அறிவிப்புக்கு உடனே ஆதரவு தெரிவித்தவர் கருணாநிதி.

நதிகளை இணைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி அறிவித்தது மிகவும் சிறிய தொகையாக இருந்தாலும், "அவரது அறிவிப்பு மிகப் பெரியது'' என்று பாராட்டினார்.

கருணாநிதியின் குடும்ப சன் தொலைக்காட்சி ஊடகம் நெய்வேலி போராட்டத்தை விட , சேப்பாக்கம் போராட்டத்தை அதிகமாகக் காட்டி, அதில் கலந்து கொண்ட சில நடிகர்களிடம் பேட்டி எடுத்து, இரஜிகாந்த் நடத்தும் போராட்டமே உண்மையான போராட்டம் போல சித்தரித்தது.

நெய்வேலி போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இரஜினிகாந்த் நடந்து கொண்டதும், அவரின் "போட்டி" போராட்டத்தை தூண்டி விட்டு ஆதரித்து நின்றதும், நெய்வேலி போராட்டத்திற்கு "துரோகம்" செய்ததும் கருணாநிதிதான் என்பதை வரலாறு சொல்லும்!

அந்தப் போராட்டத்தில் தலைமை தாங்கிய இயக்குநர் பாரதிராஜா தமது மனக்குமுறலை வெளிப்படுத்தி பேசினார். அவர் பேசியது வருமாறு:

தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார் ரஜினி.

எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றால் அது நடக்காது. நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே எனது நண்பர்கள், `உணர்ச்சிவசப்பட்டு பேசிவிடாதீர்கள்' என்றார்கள்.

உணர்ச்சிவசப்பட்டால் தவறா? உணர்ச்சிவசப்படுகிறவன்தான் மனிதன்.

அவன்தான் தமிழன். எல்லா விஷயத்துக்கும் பயந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக முகவரி இழந்து நிற்கிறான் தமிழன்.

நெய்வேலி போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்றார்கள். எந்த அசம்பாவிதமும் இங்கே நடக்கவில்லை. ரத்த ஆறு ஓடவில்லை.

தனது எதிர்ப்பை அமைதியாக வெளிக்காட்டியிருக்கிறான் தமிழன்.

எங்களுக்குத் தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு எங்கள் மண்ணில் எங்கள் உழைப்பில் உருவாகும் மின்சாரத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சொல்லக் கூடாதா?

நெய்வேலியை முற்றுகையிட்டால் தண்ணீர் வந்துவிடுமா என்கிறார்கள். தனியாக உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா?

`தமிழர்கள் ஒற்றுமையாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.

தன் சுயரூபம் தெரிந்துவிடும் என்ற அச்சத்தால்தான் உண்ணாவிரதம் இருக்கிறார்.

காவிரிப் பிரச்னையைக் களங்கப்படுத்த முயற்சி செய்பவர்களை காலம் மன்னிக்காது'' - என்று உணர்ச்சிப் பிழம்பாக முழங்கினார் .

காவிரி உரிமையை காவு கொடுத்ததிலும், இரஜினிகாந்த் போன்றவர்களை தூண்டிவிட்டு துரோகம் செய்வதிலும் கருணாநிதியை மிஞ்சிய அரசியல்வாதி எவருமில்லை என்று தான் கூற வேண்டும்.

இயக்குநர் பாரதிராஜா நடத்திய நெய்வேலி போராட்டம் அன்றைக்கு நடிகர் இரஜினிகாந்த், கருணாநிதி ஆகியோரின் முகத்திரையை கிழித்தது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

- கதிர் நிலவன்

Tamilthesiyan.wordpress.com
Thamilthesiyankathirnilavan.blogspot.com

செய்தி:
ஆனந்த விகடன், ஒன் இந்தியா, தமிழர் கண்ணோட்டம்

Address

Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalini Shantha Kumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category