DYFI Sivagangai

DYFI  Sivagangai To enhance the knowledge of youths about .�

  சிவகங்கை மாவட்ட குழு சார்பாக விடுதலை போரில் வித்தாக விழுந்து மடிந்த தோழர்கள்  பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு ஆகியோர்களுக்கு ...
30/03/2026

சிவகங்கை மாவட்ட குழு சார்பாக விடுதலை போரில் வித்தாக விழுந்து மடிந்த தோழர்கள் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு ஆகியோர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்ப...
23/03/2026

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்பான சமூகத்தை மறுகட்டமைக்கும் சரியான திட்டத்தைப் புரட்சி கோருகிறது

விடுதலைப் போராட்டத்த தியாகிகள்
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு
நினைவு தினம் மார்ச் 23,1931

சிபிஐ(எம்) மற்றும் DYFI அமைப்பினரின் அதிரடிப் போராட்டத்தால் அம்பலமான படுகொலை: சிங்கம்புணரி அருகே தொழிலாளி உடல் தோண்டி எட...
22/03/2026

சிபிஐ(எம்) மற்றும் DYFI அமைப்பினரின் அதிரடிப் போராட்டத்தால் அம்பலமான படுகொலை:

சிங்கம்புணரி அருகே தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு - 3 பேர் கைது

சிங்கம்புணரி | மார்ச் 22, 2026
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தேனம்மாள்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி மாயமான வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) தொடர் அழுத்தம் மற்றும் களப்போராட்டத்தால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:
தேனம்மாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்.

இவரது மனைவி பார்வதி, அவர்களின் மகள் சினேகா.

கடந்த 17.03.2026 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாதவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கடந்த 19.03.2026 அன்று காலை S.V.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், காவல்துறையினர் இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

களத்தில் இறங்கிய சிபிஐ(எம்) மற்றும் DYFI:

காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் A.R. மோகன் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க அவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.

அவரது வழிகாட்டுதலின்படி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக S.V.மங்கலம் காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

தோழர் சாந்தி - சிவகங்கை மாவட்டக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தோழர் சேதுராமன் - சிவகங்கை மாவட்டக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தோழர் *சத்தியசீலன்* - சிவகங்கை மாவட்டத் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI).

தோழர் காந்திமதி - சிவகங்கை மாவட்ட சிங்கம்புணரி தாலுகா செயலாளர், சிபிஐ(எம்).

தோழர் தேன்மொழி - சிங்கம்புணரி கிளைச் செயலாளர், சிபிஐ(எம்).

தோழர் பக்ருதின் - பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர், சிபிஐ(எம்).

தோழர் குமார் - பொன்னமராவதி ஒன்றியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

தோழர் பாலமுருகன் - பொன்னமராவதி ஒன்றியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).

மாவட்ட செயலாளர் தோழர் ஏ.ஆர். மோகன் அவர்கள், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் (திருப்பத்தூர் உட்கோட்டம்) DSP அவர்களிடம் நேரடியாக பேசி உரிய அழுத்தம் கொடுத்ததையடுத்து, டிஎஸ்பி அவர்களின் உத்தரவின் பேரில் விசாரணை வேகம் எடுத்தது.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்:

விசாரணையில், மாதவன் கடைசியாக எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையம் எதிரே உள்ள மணி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்றது தெரியவந்தது.

அங்கு பணிபுரிந்து வந்த மாதவனின் மனைவியின் சகோதரர்கள் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது வெளியான உண்மைகள்:

சம்பவத்தன்று மாதவன் மற்றும் அவரது மனைவியின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் சேர்ந்து மாதவனைத் தாக்கியுள்ளனர்.

இதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மறைக்க, பண்ணை அருகே குப்பைகள் கொட்டும் இடத்தில் 2 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி மாதவனின் உடலைப் புதைத்துள்ளனர்.

எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி, அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் வழக்கம்போல பணி செய்து வந்துள்ளனர்.

பண்ணை உரிமையாளர் சந்தேகத்தின் பெயரில் கைது:

புகாரை வாபஸ் செய்யுமாறு மாதவனின் மனைவியை வற்புறுத்திய பண்ணை உரிமையாளர் மணியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதை சிபிஐ(எம்) தோழர்கள் கண்டறிந்தனர்.

தோழர்களின் விடாப்பிடியான கோரிக்கையை அடுத்து, அவரையும் ஒரு தரப்பாகச் சேர்த்து சந்தேகத்தின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் கொலையாளிகள் இருவருடன் சேர்ந்து பண்ணை உரிமையாளர் மணியும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர்.

உடல் மீட்பு மற்றும் தகனம்:

திருப்பத்தூர் DSP, S.V.மங்கலம், எஸ்.எஸ். கோட்டை, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், வருவாய்த் துறையினர் (VAO மற்றும் RI) முன்னிலையில் இன்று (22/03/2026) மாலை 4 மணியளவில் மாதவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு (Post-mortem) செய்யப்பட்ட பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்களின் விருப்பப்படி மாதவனின் உடல் சிங்கம்புணரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

சாதாரண 'ஆள் காணவில்லை' என முடிக்கப்பட இருந்த வழக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சட்டப் போராட்ட முன்னெடுப்பால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, படுகொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின் மெத்தனத்திற்கு எதிராக கட்சித் தோழர்கள் ஆற்றிய இந்தப் பணி பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய தூத்துக்குடி  மாவட்ட குழுவிற்கு சிவகங்கை மாவட்ட குழு புரட்சிகரமான வாழ்த்துக்களை த...
15/03/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய தூத்துக்குடி மாவட்ட குழுவிற்கு சிவகங்கை மாவட்ட குழு புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

இன்குலாப் ஜிந்தாபாத்.

தத்துவவாதிகள் உலகை விளக்குவதில் நேரத்தை செலவிட்டனர். ஆனால், உலகை விளக்குவது அல்ல, அதை மாற்றுவதே நமது இலக்கு.
14/03/2026

தத்துவவாதிகள் உலகை விளக்குவதில் நேரத்தை செலவிட்டனர். ஆனால், உலகை விளக்குவது அல்ல, அதை மாற்றுவதே நமது இலக்கு.

13/03/2026

சிவகங்கை மாவட்ட குழு கண்டனம்!

 #தூத்துக்குடி மாவட்டம்  #விளாத்திகுளம் அருகே+2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்த...
12/03/2026

#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம் அருகே+2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது‌ செய்யப்பட வலியுறுத்தி - - சார்பில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

#ᴛʜᴏᴏᴛʜᴜᴋᴜᴅɪ

சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் லாக்கப் கொலைகள்!கண்டு கொள்ளாத தமிழக காவல் துறை!
10/03/2026

சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் லாக்கப் கொலைகள்!

கண்டு கொள்ளாத தமிழக காவல் துறை!

திருப்புவனம் நெல்முடிகரை மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகத்தில் தொடர்ந்து  முறைகேட்டில்  ஈடுபட்ட AE கிருஷ்ணகுமார் பணி...
10/03/2026

திருப்புவனம் நெல்முடிகரை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட AE கிருஷ்ணகுமார் பணியிடை மாற்றம்!

மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி!

ஆவணங்களை ஆய்வு செய்து அவருக்கு துணையாக உள்ள அதிகாரிகளின் மீதும் துறை ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும்
ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுதான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின்
பிரதான கோரிக்கை!

இவன்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
திருப்புவனம் ஒன்றிய குழு
சிவகங்கை மாவட்ட குழு

  முன்னாள் மாவட்ட பொருளாளர்  தோழர் இளையாங்குடி  #இன்னாசிராஜா அவர்களுக்கு முதலாமாண்டு நினைவு தினம்!
10/03/2026

முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் இளையாங்குடி #இன்னாசிராஜா அவர்களுக்கு முதலாமாண்டு நினைவு தினம்!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுற...
09/03/2026

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சார்ந்த ஆகாஷ் என்ற 26 வயது நிரம்பிய பட்டியல் சமூக வாலிபரை 06/03/26 அன்று பிற்பகல் 12:00 மணிக்கு கைது செய்து, கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி, உயிருக்கு போராடும் நிலையில் 07/03/26 அன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, அவரது பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளது காவல்துறை. தகவல் தெரிய வந்தவுடன், இரவு நேரத்திலேயே தங்கள் மகனை பார்க்கச் சென்ற பெற்றோரிடம் தான் காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதையும், அவர்கள் ஒரு பெரிய கல்லை தன் கால் மீது போட்டு, காலை உடைத்ததாகவும் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையினரிடமோ, நீதிபதியிடமோ அளிக்கக் கூடிய மரண வாக்குமூலத்தை, அதைக் கேட்டுப் பெறக்கூடிய காவல்துறையினர்களின் மீதே குற்றம் சுமத்தி, தன் பெற்றோரிடம் கூறும் அவலம் நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில், சிவகங்கை மாவட்டத்தில்‌‌ நிகழ்ந்தேறிய அஜித்குமாரின் 'லாக்கப்' மரணத்தை தொடர்ந்து, காவல்துறையின் இக்காட்டுமிராண்டித்தனமும், சாதிய கண்ணோட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்த வண்ணமே இருக்கிறது.

1997லேயே, இப்படியான மனித உரிமை மீறல்களைத் தடுத்திடவும், காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையை நிறுத்திடவும் டி.கே பாசு வழக்கில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. இருப்பினும், இவை எதுவும் காவல்துறையினரால் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகின்றன.

இப்படி எந்த சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றாத காவல்துறையின் நடவடிக்கை, மிக அராஜகமானதாகவே நீடித்து வருகிறது. இச்சாதிய மனநிலையும், கொடூரமான குற்றச் செயலும் கடும் கண்டனத்திற்குரியது.

இந்த வெறிச் செயலின் போது காவல் நிலையப் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து அதிகாரிகளின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனோடு, இக்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சீரழிந்து கிடக்கும் சட்ட ஒழுங்கை சரி செய்வதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டுமெனவும், காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இக்கொடூர செயலுக்கு பொறுப்பேற்று, இவை அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், இது மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share