20/03/2022
இன்று உலக சிட்டுக்குருவி தினம், சிட்டுக்குருவிகளை காப்பது என்பது நம்மை நாம் காத்துக்கொள்ளுவது போன்றதாகும். 1950 களில் சீன கம்யூனிஸ்ட் அரசின் ஒரு முட்டாள்தனமான திட்டத்தால் சிட்டுக்குருவிகளை அழிந்து அதனால் பஞ்சம் வந்து சுமார் 5 கோடி மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.
CHINA'S FOUR PESTS CAMPAIGN!
மிகப்பெரிய மக்கள் புரட்சி நடந்தி 1949ல் சீனாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த மாவோ, 1958 ஆம் ஆண்டு "பெரும் பாய்ச்சல்" (Great Leap Forward) என்கிற திட்டத்தை அறிவிக்கிறார். அதில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விசயங்களை அறிவித்து, அதிலும் குறிப்பாக நிலம் அரசுக்கு தான் சொந்தம் என்றும் மக்கள் உணவு உற்பத்தியில் பணியாற்றலாம் என்று புரட்சிகரமான திட்டத்தை அறிவிக்கிறார். பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும் அந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த பார்வை இல்லாதால், ஒரு மிகப்பெரிய கேடுவிளைவிக்க கூடிய திட்டத்தை அறிவிக்கிறார். அந்த திட்டத்தின் பெயர் "four pests campaign" அதாவது தேவையற்ற பூச்சிகளாக கருதப்பட்டவற்றை அழிப்பது. அழிக்கப்பட வேண்டிய நான்கு பூச்சிகளாக அவர்கள் கருதியது #எலிகள், #ஈக்கள், #கொசுக்கள் மற்றும் #சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் மக்களுக்காக விளைவிக்கப்படும் தானியங்களை உண்டுவிடுகின்றன என்று கருதிய சீன அரசாங்கம் சிட்டுக்குருவிகளை ஒழிப்பதர்காக தொடங்கப்பட்டது தான் "சிட்டுக்குருவி பிரச்சாரம்". அடுத்த 2 முதல் 3 வருடங்களில், சிட்டுக்குருவிகளை அழிப்பதற்காக மக்கள் பல்வேறு உத்திகளை கையாள தொடங்கினார்கள்,
#குருவிகளின் கூட்டை அழித்து, முட்டைகளை உடைப்பது, அதிகமான ஒலி எழுப்பக்கூடிய இசைக்கருவிகளை அடித்து பறவைகளை நெடுந்தூரத்திற்கு விரட்டுவது என்று மக்கள் இறங்கி விளையாடினார்கள்.
#சிட்டு குருவிகள் பல்வேறு நாடுகளின் தூதரகங்களின் கட்டிடங்களில் "தஞ்சம்" புகுந்தாலும் தூதரகங்களுக்கு வெளியே நின்று மக்கள் கொட்டடித்து அவற்றை விரட்டி கொன்று குவித்தார்கள். அவ்வாறு அதிகமான குருவிகளை கொன்றவர்களுக்கு அரசு பரிசுகளை வழங்கியது.
#சீனா முழுவதும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கைகளில் மிகவும் குறைந்த அடுத்த அடுத்த ஆண்டுகளில் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்தது, கொன்று குவித்த பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது, சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை மட்டும் உண்ணவில்லை, ஆனால் பல்வேறு பூச்சிகளை அவை சாப்பிட்டன என்றும் சிட்டுக்குருவிகள் இல்லாதலால் "வெட்டுக்கிளி" போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து, அவை மனிதர்களுக்கு தேவைப்படும் உணவை அழித்தன, என்று தெரிந்து கொண்டார்கள். 1960களின் தொடக்கத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட, இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு சுமார் ஐந்து கோடி மக்கள் பட்டினியால் உயிர் இழந்த சோகம் சீனாவை உலுக்கியது. இதை அறிந்து கொண்ட சீன அரசு அழிக்கப்படவேண்டிய பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியை நீக்கிவிட்டு " #மூட்டைப்பூச்சிகளை" அந்த பட்டியலில் இணைத்து கொண்டது தான் பெரிய முரண்.
உலக சிட்டுக்குருவிகள் தினம்.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த 2010-ம் ஆண்டு முதல், மார்ச் 20-ந் தேதியை ‘உலக சிட்டுக் குருவிகள் தினம்’ என்ற பெயரில் கடைப் பிடித்து வருகிறோம். அரிய வகையாக மாறி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க, தினமும் வீட்டின் முன்பாகவோ, மாடியிலோ, சிறிதளவு தண்ணீரும், உணவும் வைத்தாலே இவற்றின் வாழ்க்கையில் புத்துயிர் பிறக்கும்.
#மீள்பதிவு