SDPI இராமேஸ்வரம்

SDPI இராமேஸ்வரம் பசியில் இருந்து விடுதலை...
பயத்தில் இருந்து விடுதலை....��

 ்சியின் சார்பாக புதுக்கோட்டை மண்ணில் 11/01/2026  நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி   மாநில மாநாட்டி...
08/01/2026

்சியின் சார்பாக புதுக்கோட்டை மண்ணில் 11/01/2026 நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில மாநாட்டிற்கு வைக்கப்பட உள்ள ITWING இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக பிளக்ஸ்.. #பாதாகை....

தகவல் தொழில்நுட்ப அணி

இராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு)

27/09/2025
தமிழக அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கோரிக்கை மனுக்களை அவமதித்து உயிரைக் கொண்ட அரசு நிர்வாகம் - SDPI கட்சி கடும் கண்டனம் ...
25/09/2025

தமிழக அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கோரிக்கை மனுக்களை அவமதித்து உயிரைக் கொண்ட அரசு நிர்வாகம் - SDPI கட்சி கடும் கண்டனம்

தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது

கட்சியின் சார்பாக மாவட்ட முழுவதும் உள்ள நகராட்சி பேரூராட்சி ஊராட்சி என அனைத்து நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுகள் அளித்து தமிழக அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டி தெருநாய்களையும் வெறி நாய்களையும் அகற்றிடுமாறு பல்வேறு கோரிக்கை மனுகள் கொடுக்கப்பட்டுள்ள பின்பு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

இந்த சூழ்நிலையில் இராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியில் ராஜ பிரகாஷ் என்ற இளைஞர் தெரு நாய் கடித்ததில் உயிரிழந்தார்

இந்த உயிரிழப்புக்கு முழு பொறுப்பு மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகம் தான் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்

இந்த உயிர் இழப்பு என்பது நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் படுகொலை செய்ததாகவே பொதுமக்கள் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

தமிழக அரசு உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு தெருநாய் தொல்லைகளிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

அத்தோடு இன்று உயிரிழந்த ராஜ பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் அலட்சியத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை இங்கே உறுதியாக கூறிக் கொள்கிறேன்

மாவட்டம் முழுவதும் தெரு நாய் வெறி நாயின் தொல்லை அதிகரித்து வருகிறது மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திராவிட மாடல் அரசு என முதல்வர் செல்லும் இடமெல்லாம் கூறி வருகிறார்கள்

ஆனால் அதற்கு மாறாக மாவட்ட நிர்வாகமும் திமுக நகர்மன்ற நிர்வாகமும் செயல்படுவது முதல்வரின் நட்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது

தேர்தல் நெருங்கும் சூழலில் இது போன்ற அலட்சியங்கள் தொடரும் பட்சத்தில் இந்த நிகழ்வுகள் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

தெரு நாய் கடித்து உயிரிழந்த ராஜ பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

M. முகமது சுலைமான் MBA
மாவட்ட பொதுச்செயலாளர்
SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்

25/09/2025

நன்றி #தினதந்தி..

Address

Rameshwaram
Rameswaram
623526

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI இராமேஸ்வரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share