DYFI Rameswaram

DYFI Rameswaram political

23/03/2026

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களும், இந்துஸ்தான் சமதர்ம குடியரசு ராணுவம் (Hindustan Socialist Republican Association) அமைப்பின் தலைவர்களுமான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. RAMESWARAM

விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறு தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!
25/02/2026

விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறு தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!

10/02/2026

டிஎன்பிஎஸ்சி அலட்சியத்தால் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் இன்று (பிப்ரவரி 08) நடைபெற இருந்த குரூப் 2,2A முதன்மைத் தேர்வுகள் ஒத்துவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு குளறுபடிகளால் இந்த குரூப் 2 தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைபெற்ற குளறுபடிகளை கலையை செய்து மாற்று தேதியை உடனடியாக அறிவித்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறிவுறுத்துகிறது.

குரூப் 2, 2ஏ வில் காலியாக உள்ள 828 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு 2025 செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. முதல் நிலை தேர்வில் குரூப் 2 வில் 1126 பேரூம், குரூப் 2 ஏ வில் 9457 பேரூம் முதன்மை தேர்வு எழுத தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் காலையில் 9,223 தேர்வர்களும் மாலையில் 9244 தேர்வர்களும் எழுத இருந்த இந்தத் தேர்வுகளுக்காக சென்னையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 3221 பேர் தேர்வுகளை எழுத இருந்தனர். சென்னையில் நூற்றுக்கணக்கான தேர்வர்களுக்கு சென்னை நந்தனம் அரசு கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சென்னை அரும்பாக்கம் டி ஜி வைஷ்ணவா கல்லூரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத் தான் இந்தக் குளறுபடி தெரியவந்தது. இதைக் கண்டித்து தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறை போராட்டத்தை கலைப்பதற்காக கைகளை உயர்த்தி அவுதூராகவும் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது, பிறகு அவர்களை நந்தனம் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் நடக்கவிருந்த தேர்வு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கும், தேவையற்ற அலைச்சலுக்கும் ஆளானார்கள். ஒன்றிய அரசு சார்பில் நடைபெறும் தேசிய தேர்வு முகமை தேர்வுகளில் ஏற்படும் சிக்கலை போல தமிழ்நாட்டின் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மாறிவிடுமோ என அச்சம் எழுகிறது. மாணவர்கள் கடும் பணி சுமையில் தேர்வுக்கு நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில் பல ஆண்டுகள் படித்து தேர்வு எழுத வந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் அலட்சியத்தால் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது

ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிக காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் சிறிய அளவிலான பணியிடங்களுக்காக தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பும் நிலையில் தேர்வு வாரியம் தொழில்நுட்பக் கோளாறு என ஒரே வார்த்தையில் கூறி அலட்சிய போக்கில் நடப்பது ஏற்புடையது கிடையாது. குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரித்து துறை நீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுதலோடு முறையான கால அவகாசத்தோடும் மாற்றுத் தேதியை அறிவித்து தேர்வை நடத்த தமிழ்நாடு தேர்வு வாரியத்தையும். தமிழ்நாடு அரசையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு கேட்டுக் கொள்கிறது.

செல்வராஜ்
மாநிலத் தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்

மக்கள் ஒற்றுமையே மனித நேயத்தின் மகத்துவம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
31/12/2025

மக்கள் ஒற்றுமையே
மனித நேயத்தின் மகத்துவம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

இராமேஸ்வரத்தில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்.இராமநாதபுரம், ...
20/12/2025

இராமேஸ்வரத்தில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம், டிச.19

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் TNPSC தேர்வு நடத்தி ஒரு லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு முழுவதும் 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று DYFI சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் தாலுகா குழு உறுப்பினர் M.ரூபா தாரணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.மாரிக்குமார், தாலுகா செயலாளர் வழக்கறிஞர் க.கலைச்செல்வன், தாலுகா தலைவர் ஜே.அஞ்சனா BA,LLB, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர்
K.தர்மராஜ், வழக்கறிஞர் சங்க நிர்வாகி டி.மாரிமுத்து, மாதர் சங்க தாலுகா செயலாளர் K.சுமதி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். முன்னால் மாவட்ட பொருளாளர் கா.சிவா நிறைவு உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் வாலிபர்சங்க தாலுகா நிர்வாகிகள் K.பாலா,
G.ஜெனிஷா,மு. சூர்யபிரகாஷ்,
இ.நம்புச்செல்வம்,விக்னேஷ், முனீஸ்வரன் ,B.அபிநயா, K.அன்புச்செல்வன்,
சி.தமிழ்ச்செல்வன்,தமிழரசன்
CPI-M மாவட்ட செயற்குழு உறுப்பினர்
க.கருணாகரன்,
CPI-M.தாலுகா குழு உறுப்பினர்கள்
A. அசோக்,N.மாரி
மாதர் சங்க நிர்வாகிகள்
க.வெங்கடேஸ்வரி,
S.சக்திகனி,இராமேஸ்வரம் நகராட்சி தூய்மை பனியாளர் சங்க தலைவர் சின்னபாண்டி,CPI-M
கிளைசெயலாளர்கள்
ஒன்டி வீரன் நகர் கிளைசெயலாளர் தோழர் ராமலெட்சுமி,ராஜிவ்காந்தி நகர் கிளைசெயலாளர் K.முருகன்,உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

18/12/2025
தலை நிமிருமா தமிழக இளைஞர்களின் வாழ்வு.? சட்டமன்ற தேர்தலுக்கு முன் TNPSC தேர்வு மூலம் 1 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்பிட...
27/11/2025

தலை நிமிருமா
தமிழக இளைஞர்களின் வாழ்வு.?
சட்டமன்ற தேர்தலுக்கு முன் TNPSC தேர்வு மூலம் 1 இலட்சம் காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி டிசம்பர் 1 தமிழ்நாடு முழுவதும் வேலை கேட்டு
ஒரு நாள் காத்திருப்பு இயக்கம்!

#1இலட்சம்_காலிப்பணியிடங்களை_நிரப்பு #

தமிழக அரசே!==============🔴 இராமேஸ்வரம் சேரான் கோட்டை பகுதி பள்ளி மாணவியின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும்,🔴 குற்றவாளிக்கு...
25/11/2025

தமிழக அரசே!
==============
🔴 இராமேஸ்வரம் சேரான் கோட்டை பகுதி பள்ளி மாணவியின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும்,
🔴 குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க கோரியும்
🔴 மாணவியின் குடும்பத்திற்கு உரிய
நிவாரணம் வழங்க கோரியும்
இராமேஸ்வரத்தில்
எதிர்வரும் 25 .11. 2025 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் பேருந்து நிலையம் முன்பு🔥 DYFI🔥 AIDWA🔥 SFI சார்பில் #கண்டன_ஆர்ப்பாட்டம் மாதர் சங்க மாவட்ட செயலாளர். ஆரோக்கிய நிர்மலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாதர் சங்க நிர்வாகிகள் தோழர் முத்து மாரியம்மாள், தோழர் .வெங்கடேஸ்வரி,லெட்சுமி கண்டன உரையாற்றினர். சார்பாக தாலுகா தலைவர். A. அஞ்சனா BA.,LLB அவர்கள் ,தாலுகா செயலாளர் வழக்கறிஞர் க.கலைச்செல்வன் அவர்கள், மாவட்ட செயலாளர் T.மாரிக்குமார் அவர்கள், SFI சார்பில் மாவட்ட செயலாளர் வில்லியம் ஜாய்சி அவர்கள் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினர்.DYFI சார்பாக தாலுகா பொருளாளர் K.பாலமுருகன் ,தாலுகா குழு உறுப்பினர் நம்புச் செல்வம்,திருமுருகன் , மற்றும் J.பெவன் ,N.தமிழரசன் ,G.முனீஸ்வரன், B.அபிநயா, T.பிரசாத், G.தமிழ் செல்வன்ஆகியோர்கள் மற்றும் DYFI ,SFI ,மாதர் சங்க உறுப்பினர்கள் 100க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் . SFI மாவட்டத் தலைவர் தனபாலன் நன்றியுரை கூறி முடித்து வைத்தார்.

*தமிழக அரசே!*==============🔴 *இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியின் படுகொலை சம்பவத்தை  கண்டித்தும்,...
24/11/2025

*தமிழக அரசே!*
==============
🔴 *இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும்,*

🔴 *குற்றவாளிக்கு* *கடும் தண்டனை* *வழங்கிட அரசு* *நடவடிக்கை எடுக்க* *கோரியும்*

🔴 *மாணவியின்* *குடும்பத்திற்கு உரிய*
*நிவாரணம்* *வழங்க கோரியும்*

இராமேஸ்வரத்தில்
எதிர்வரும் 25 .11. 2025 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் பேருந்து நிலையம் முன்பு

🔥
*அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்*

🔥 *இந்திய ஜனநாயக* *வாலிபர்* *சங்கம்*

🔥 *இந்திய மாணவர் சங்கத்தின்*

*சார்பில்
*கண்டன* *ஆர்ப்பாட்டம்*
நடைபெறுகிறது.. போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம் ...

இராமேஸ்வரத்தில் மாணவி கொலை #இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் # கடும் கண்டனம்.===============இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியை...
19/11/2025

இராமேஸ்வரத்தில் மாணவி கொலை
#இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் #
கடும் கண்டனம்.
===============
இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் மகள் பர்வத வர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் இன்று19.11.2025 காலை 8:30 மணி அளவில் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை வழிமறித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
இச்சம்பவத்தை DYFI சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கொலை செய்த குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்குவதோடு,
பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

Address

Rameswaram
623526

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Rameswaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share