NEW-FORT OF PUDUKKOTTAI

NEW-FORT OF PUDUKKOTTAI PUDUKKOTTAI NEWS-PHOTOS-HISTORY PLACES-CURRENT EVENTS

சீனாவை சேர்ந்த ஒருவர்காலைக் கடன் கழிக்ககாட்டுக்கு சென்ற போதுவேற்று கிரகவாசி போன்றதோற்றமுடையை இந்த உயிரினத்தைபுகைப்படம் எ...
27/06/2014

சீனாவை சேர்ந்த ஒருவர்

காலைக் கடன் கழிக்க

காட்டுக்கு சென்ற போது

வேற்று கிரகவாசி போன்ற

தோற்றமுடையை இந்த உயிரினத்தை

புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இது யார் சொத்து விபரம் தெரியுமா?1.சட்டை பையில் ..........................ரூபாய் 1002.வங்கிகணக்கில்.........................
27/06/2014

இது யார் சொத்து விபரம் தெரியுமா?

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......

இன்றைய அரசியல்வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது.

27/06/2014

அனைத்து இந்தியர்களும் கண்டிப்பாக பகிர வேண்டிய தொகுப்பு:

"வந்தே மாதரம் " என்னும் சுதந்திர பாடலை இயற்றி இந்திய விடுதலை போராளிகளின் இதயத்தில் விடுதலை தீயை கொலுந்திவிட்டெறியச் செய்து, இந்தியாவின் விடுதலைக்கு உறுதுணைபுரிந்த "பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா" அவர்களின் பிறந்த தினம் இன்று .

நீங்கள் SHARE செய்ய ஒரு தகுதியான தொகுப்பு :திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி(வயது58). திண்டுக்கல் சம...
27/06/2014

நீங்கள் SHARE செய்ய ஒரு தகுதியான தொகுப்பு :

திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி(வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார்.

SHARE மற்றும் LIKES மூலன் உங்கள் பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

23/01/2014

புதுக்கோட்டையில் சிலம்பாட்ட வீரர்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாவட்ட சிலம்ப கழக செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தமிழ்நாடு சிலம்ப கழக இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட செயலாளர் கம்பத்தடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற 8 மாணவர்கள், 2ம் இடம் பெற்ற 8 மாணவர்கள், 3ம் இடம் பெற்ற 5 மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் இந்திய மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தொழில்நுட்ப இயக்குனர் கழுகுமலை சந்திரசேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிலம்பாட்ட பயிற்சியாளர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.

23/01/2014

மாநில-மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகளுக்கு அழைப்புவேளாண் இணை இயக்குனர் தகவல்
புதுக்கோட்டை. : புதுக் கோட்டை மாவட்ட விவசாயிகள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக் கில், தமிழ்நாடு அரசு சிறந்த சாகுபடி முறைகளை கடை பிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத் தியை உயர்த்தும் நோக்கத் திலும், மாநில மற்றும் மாவ ட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படவுள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத் தில் சம்பாநெல் மற்றும் இறவை நிலக்கடலை பயிரில் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் சம்பா நெற்பயிரில் நடப்பாண்டு பயிர் விளைச் சல் போட்டி நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயி கள் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்திருத்தல் வேண்டும். போட்டி யில் கலந்துகொள்ளும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தொடர்பு கொண்டு ரூ.50ஐ முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் குறைந்தது 50 சென்ட் சாகுபடி செய்திருக்க வேண் டும். மாவட்ட அளவில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
நடப்பாண்டு மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும், ரூ.3 ஆயிரத்து 500 மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தினவிழாவில் தமி ழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் முன்பதிவு கட்டணமாக ரூ.150ஐ, தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். போட்டியில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களு க்கு விருதுகள் வரும் ஆண் டில் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்துகொள் ளும் விவசாயிகள் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள இயலாது. போட்டி குறித்து விதிமுறை களை அறிய தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மேற்கண்ட பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..

23/01/2014

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.

அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.

சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள்தான் நாம் வாழும் பூமி. இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் இணைந்துள்ளன. சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை வியாழன் போன்றவைதான். இதுபற்றி தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இது நிலவுதான் என்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்ட முதல் நிலவு இதுவாகத்தான் இருக்கும். இந்த நிலவில் உயிரினங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

23/01/2014

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு

சூரிய மண்டலத்தில்பூமியைப் போன்றபுதிய கிரகத்தைஅமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்தடேவிட் கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில்ஒளி ஆண்டுதூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளஇந்த புதிய கிரகம்பூமியை விடமடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமானநாசாவின்கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில்இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.ஓ.ஐ.-எனபெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலைடிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

23/01/2014

அரசு மகளிர் கல்லூரியில்2நாள் தேசிய கருத்தரங்கு

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு துவக்க விழா நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இன்றைய உயர்கல்வி சூழலில் வரலாற்றின் இன்றியமையாமை என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வரலாற்றுத் துறை தலைவர் ராதாபாய் வரவேற்றார். கல்லூரி முதல் வர் பானு மதி தலைமை வகித்தார். பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவனத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சுப்புராயலு துவக்க உரையாற்றினார்.
இதில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆழ்கடல் அகழாய்வு துறை பேராசிரியர் அதியமான், திருச்சி தூயவளனார் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வரலாற்று ஆய்வாளர் களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. இதனை கல் லூரி முதல்வர் பானுமதி வெளியிட முனைவர் சுப்புராயலு பெற்றுக்கொண் டார். இதில் மா.மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் காயத்திரிதேவி நன்றி கூறினார்.
பல்வேறு கல்லூரிகளி லிருந்து ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆய்வுகட்டுரைகள் வழங்கினர். கருத்தரங்கம் இன்றும் (23ம்தேதி) நடைபெறுகிறது.

23/12/2013

நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம் மார்கழியில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிகள்

புதுக்கோட்டை, : புதுக்கோட்டையை அடுத்த குறுந்தடிமனையில் நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நேரடிநெல் விதைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் தொழில்நுட்ப செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் உதவி பேராசிரியர் கீதா (மனை யியல் துறை) தலைமை வகித்து பேசுகையில், சரி யான அளவில் உரங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மற்றும் உணவு தானியங்களின் தன்மை மாறுபட்டுவிடும் என்றார்.
உதவி பேராசிரியர் கதிரவன் (விதை அறிவியல் மற்றம் தொழிலநுட்பம்) பேசுகையில், உயிர் உரங்களான அசோஸ்பைரில் லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஒரு எக்டர் விதைக்கு 600 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து விதைக்க வேண்டும். நடப்பட்ட நாற்று வேர் பிடித்து பச்சை நிறமடைந்து நன்றாக வளர தழைச்சத்து அடியுரமாக இடுவது அவசியம். பொதுவாக நெல் வயிலில் இட்ட தழைச்சத்து 30 சதவிகிதம் மட்டுமே பயிருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள் ளது. எனவே தழைச்சத்து வீணாவதை குறைத்து பயிரு க்கு கிடைக்க ஏதுவாக 5: 4: 1 என்ற சதவிகிதத்தில் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணா க்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து நடவு வயலில் சீராகத் துவவேண்டும். மேலும் சம்பா நெல் ரகங்களுக்கு நட்ட 25, 50, 75, 100 ஆகிய நாட்களில் இடவேண்டும். மணிச்சத்து நெற்பயிரில் இளமைப் பருவத்தில் வேர் பிடித்து நன் றாக வளர்வதற்கும், பூக்கள் பூப்பதற்கும், நெல் மணி களின் வளர்ச்சி, எண்ணிக் கை, முதிர்வடைதல் ஆகியவற்றை சீராக்கி விளைச்சலை பெருக்கவும் வழிவகை செய்கின்றன. முழு உரத்தையும் அடியுரமாக இடவேண்டும். நெல் மணிகளின் எடையை அதிகரித்து பதர்களின் எண்ணிக்கையை குறைத்து விளைச்சலை அதிகரிக்கின்றன என்றார்.
பூச்சியல் துறை உதவிப்பேராசிரியர் சாமிநாதன் பேசுகையில், புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளையாக காணப்படும். புரட்டாசி முதல் மார்கழி வரை இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும். தழைச்சத்தினை பிரித்து மூன்று தடவை இடவேண் டும். டிரைகடகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட் டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 மிலி என்ற அளவில் நடவு செய்த 37, 44 மற்றும் 51 வது நாட்களில் வயல்களில் விடவேண்டும் என்றார். உதவி பேராசிரியர் மதியழகன் பேசுகையில், நடவு செய்த 3, 4 வாரங்களில் அதாவது தூரடிக்கும் பருவத்தில் தோன்றும் முழு பயிரும் வாடிவிடும், ஆரம்ப நிலையில் மஞ்சள் நிறத்தில் நீர் கசிவுள்ள புள்ளிகள் இலையின் நுனியில் தோன்றி கீழ் நோக்கி விளிம்புகளில் பரவும் இதனால் இலைநுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடும். நோயற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் தழைச்சத்தினை இடவேண்டும். நோயின் தாக்குதல் தீவரமாகும் போது ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைகளின் கலவை 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவரங்குள வட்டார வேளாண் அலுவலர் அன்பரசன், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை ஆராய்ச்சியாளர்களான விஜயசங்கர் மற்றும் சந்தோஷ்குமார் செய்திருந்தனர்.

23/12/2013

ஆலங்குடி, : கீரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து மேற்பனைக்காடு வழியாக பேராவூரணி செல் லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சில் மேற்பனைக்காடு சாலை பகுதி யைச் சேர்ந்த முத்தையா மனைவி லட்சுமி (60) என்ற மூதாட்டி கைகாட்டி செல்லும் பஸ் என்று நினைத்து தவறுதலாக ஏறியுள்ளார். பஸ் புறப்பட்ட போது அருகில் இருந்தவர்கள் இந்த பஸ் கைகாட்டி போகாது என்று சொன்னவுடன் பதறியபடியே பஸ்சில் இருந்து லட்சுமி இறங்கியுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் காலில் பின் சக்கரம் ஏறி யதில் படுகாயமடைந்தார். அவரை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

23/12/2013

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தங்க ரதப்பணி ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தங்க ரதப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை தலைவர் வயிரவன் தலைமை வகித் தார். செயலாளர் சேகர், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருவப்பூர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட கவி நாடு ஆயக்கட்டுதாரர்கள் உட்பட பக்தர்கள் திரளா னோர் கலந்துகொண்டனர். கூட்டத் தில் அரசிடம் இருந்து மாவட்ட கருவூலத்தில் இருந்து தங்கம் வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, அந்த தங்கம் வராவிட் டாலும் பொதுமக்களிடம் இருந்து காணிக்கை பெற்று விரை ந்து தங்க ரதப்பணி களை முடிப்பது என்று தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. இக்கோயில் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் தங்க ரதம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கவிநாடு மற்றும் திருவப்பூர் கிராமத்தார்கள மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளோடு அநநிலையத்துறை அதிகாரிகளும் இணைந்து தங்க ரதம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதன்படி தங்க ரதம் செய்வதற்காக 12 அடி உயரமுள்ள தேக்கு மரத்தில் அழகிய வேலைபாடுகளு டன் ரூ.25 லட்சம் மதிப்பில் மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் ரூ. 75 லட்சம் மதிப்பில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது. தங்க தகடுகள் பதிப்பதற்கு முன்பு 750 கிலோவிற்கு மேல் செப்பு தகடுகள் மரத்தேரில் பதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தங்க ரதம் கோயி லை சுற்றி வருவதற்கு ஏது வாக ரூ.1 கோடி மதிப் பில் சுற்றுப் பிரகார மண்ட பம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்க ரதத்திற்கு தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அப்போ தைய அறநிலையத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதின் பேரில் மாவட்ட திருக்கோயில்களின் உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ள 13 கிலோ தங்கம் அதாவது ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் ரதத்திற்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் அதை மும்பை க்கு எடுத்துச்சென்று தங்கம் உருக்கப் பட்டு தங்க தகடுகளாக செய்து அதை மா வட்ட கருவூலத்தில் வைத்துள்ளனர். மேலும் தற் போது செம்பு முலாம் பூசப்பட்ட ரதம் வெள்ளோடம £க நேற்று கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தது. இதில் ஏராள மான பக்தர்கள் மற்றும் மக்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வந்தனர்.

Address

59/2 Konar Kollai Adappanvayal Thirikokarnam (po)
Pudukkottai
622002

Alerts

Be the first to know and let us send you an email when NEW-FORT OF PUDUKKOTTAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NEW-FORT OF PUDUKKOTTAI:

Share