04/02/2021
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க செயலாளர் குமார் தலைமை செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய மனு .
அனுப்புதல் ,
குமார்,
தொழிற்சங்க செயலாளர்,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,
பெறுநர்:
உயர்திரு ,தலைமைச் செயலாளர் அவர்கள், அவர்கள்
சென்னை.
ஐயா.
நான் மேற்காணும் அமைப்பின் தொழிற்சங்க மாநில செயலாளராக இருக்கிறேன் கடந்த 31:01:2021 அன்று
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளான் சட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் என்பவர்
இசுலாமியர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய தலைவர் முஹம்மது நபியை ஆண்மையற்றவர் எனவும், இசுலாமிய தலைவர்களின் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியும் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும்
என்ற ஒரே நோக்கத்தில் பேசியிருக்கிறார்.இதேபோல் அவர் பலமுறை தொடர்ந்து பேசியும், இணைய தளங்களில் எழுதியும் வருகிறார். இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் இவரைப்போன்றவர்களை உடனடியாக கைது செய்தும் இவர்மீது
குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இசுலாமிய சமூகத்தின் உணர்ச்சியை தூண்டிவிட்டு எங்களைப்போன்று இசுலாமிய சமுகத்திடம் நெருங்கிப்பழகுபவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டங்களிலும் இதுபோன்ற கருத்துக்களை பேசக்கூடாது என்ற எச்சரிக்கை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் பேசியிருக்கிறார். இசுலாமியர்களை
பன்றிக்கூட்டம் என்றும், தமிழகத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்றுவோம் என மிரட்டுகிறார். மேலும் காவல்துறையை பேடிகள்துறை என்றும் கையில் எதற்காக லத்தி என்றும் உளவுப்பிரிவு சட்டம்ஒழுங்கு பிரிவு குற்றவாளிகள் கையாள்வதற்க்கு ஒரு பிரிவு இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாக்கை வலிக்கிறார்கள் என காவல்துறையை கேவலமாகபேசியுள்ளார் .
இசுலாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகத்தை ஆண்மையற்றவர் என பேசுகிறார். அவரின் குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தி பேசுகிறார். இசுலாமிய தலைவர்களை லாரி
ஏற்றிக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இது அமைதிபூங்காவாக திகழும் தமிழகத்தில் மத வன்முறையைத் தூண்டும் செயலாக உள்ளது . எனவே தலைமை செயலாளர் அவர்கள் இப்படி பேசிய கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.