Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist

  • Home
  • Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist

Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist Business

26/03/2026

வணக்கம் நண்பர்களே

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
மற்றும்
நாகர்கோயில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பாக
100% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் நலத்திட்ட உதவிகளை பேரமைப்பின் மாவட்ட தலைவர் கே.பாபு அவர்கள் தலைமையில்
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உதச்சிகோட்டை பகுதியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக சிறிய உதவியாக 25,000ரூ முதற்கட்ட உதவியாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பேரமைப்பின் கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் சேம்பர்
தலைவர் திரு. கே. பாபு அவர்கள் தலைமையில்,
கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. P.பிரேம் சிங்,
பொருளாளர் திரு. A.ஆதி சிவன்,
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய சேவைகள் உங்களுடைய வாழ்த்துகளுடன் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.

மேலும் எங்களுடைய உதவிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்டாலோ....

ஏழை குடும்பங்களுக்கு எங்களோடு சேர்ந்து நீங்களும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ......
தொடர்பு கொள்ளவும்.
WINGs FOUNDATION
NAGERCOIL

நன்றி

27/02/2026

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வடசேரி கனகமூல சந்தை தொடர்பாகவும் கன்னியா குமரி நகராட்சி கடைகள் தொடர்பாகவும் மனுவளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்

20/02/2026
20/02/2026

வடசேரி பஸ் நிலைய விரிவாக்கத்தினால் 100-ஆண்டு கால பாரம்பரிய கனகமூல சந்தையின் நிலை என்னவாக போகிறது*

*நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சந்தை ஆகும். இந்த சந்தை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களால் உருவாக்கப்பட்ட முக்கிய காய்கறி சந்தையாகும். விடுமுறை இல்லாமல் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் இந்த சந்தையில், வடசேரி கனகமூலம் சந்தை, உள்ளூரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையாகும். இது அண்டை மாவட்டமான கேரளாவின் திருவனந்தபுரத்திற்கும் பல ஆண்டுகளாக சேவை செய்கிறது.*

இது நாகர்கோவிலின் முக்கிய வர்த்தக மையமாக விளங்குகிறது. வடசேரி கனகமூல சந்தை நாகர்கோயில் மையப்பகுதியில் இருப்பதினாலும் சந்தையின் மிக அருகாமையில் பஸ் நிலையம் இருப்பதால் பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் தினமும் வந்து காய்கறிகள் வாங்கி செல்வதற்கு லெகுவாக இருக்கிறது. புதுமையான காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பழங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
இந்த சந்தை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிக முக்கிய உணவு விநியோக மையமாக பல ஆண்டுகளாக தினசரி செயல்பட்டு வருகிறது..
தற்போது கனகமூலம் சந்தையில் செயல்பட்டு வரும் 262 கடை உரிமையாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஒரு தொழிலை மட்டும் நம்பியே அவங்களுடைய குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. ஒரு கடையில் குறைந்த பட்சம் 4 அல்லது 5 நபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய குடும்பமும் இந்த வருமானத்தை நம்பியே இருந்து வருகிறது.

தற்போது வடசேரி பஸ் நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக செயல் பட்டு கொண்டிருந்த வரலாறு படைத்த கனகமூலம் சந்தையை முழுவதுமாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்ற நினைக்கிறது. இப்படி மாற்றப்பட்டால் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 262 வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறுகின்றது. இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது.

வடசேரி கனகமூலம் சந்தையை நம்பியே இருக்கும் ஒவ்வொரு வியாபாரிகளும் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் கிளை சங்கமான கனகமூலம் சந்தை தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அடையாள வேலை நிறுத்தமாக (20.02.2026) வெள்ளிகிழமை மதியம் முதல் இரவு வரை செயல் படாது என்று தீர்மானிக்க பட்டுள்ளது.

*நன்றி

20/02/2026
19/02/2026
வணிக பெருமக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பதவியேற்ற அகமது இஷான் அவர்களுக்கு இன்று திரும...
20/12/2025

வணிக பெருமக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பதவியேற்ற அகமது இஷான் அவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது

இந்த திருமண நிகழ்வில் பேரமைப்பின் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்

உங்கள் அன்பும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் என்றும் நிலைத்திருக்கட்டும். உங்கள் வாழ்க்கை அன்பு, சிரிப்பு, சந்தோஷம் நிறைந்த ஒரு அழகான பயணமாக அமைய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்

💐💐💐💐💐💐💐💐

பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம்
18/12/2025

பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம்

Address

Veerapandi Gowmari Amman Temple, Theni District, Tamil Nadu

625531

Alerts

Be the first to know and let us send you an email when Vanikar Sangankalin Peramaippu Kanyakumari Dist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share