KKS நண்பர்கள் ,மஞ்சவயல்.

KKS நண்பர்கள் ,மஞ்சவயல். சோழ தேசத்தின் ஒரு துகள்

17/10/2020

தஞ்சாவூர் 😍

இப்போது😍
27/05/2020

இப்போது😍

 #மேகம்_கருக்குது_மழை_வர_பாக்குது #வீசி_அடிக்குது_காத்து___மழை_காத்து...
12/05/2020

#மேகம்_கருக்குது_மழை_வர_பாக்குது
#வீசி_அடிக்குது_காத்து___மழை_காத்து...

23/02/2020

அருள்மிகு ஸ்ரீ தங்கமுத்து காளியம்மன் கோவில்..
#வானவடிக்கை சிறிது
#மஞ்சவயல்..
#மஹா_சிவராத்திரி.

பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்!பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப...
04/02/2020

பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்!
பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மழை குன்றுகளை இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண்,நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார். இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார். கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ராஜராஜசோழன் காலத்தில் திருச்சுற்று மாளிகை அருகே, பிரதான நுழைவு கோபுரத்திற்கு எதிரே அமைந்துள்ளது ராஜராஜன் நுழைவு வாயிலையும், சோழ ஒற்றனை சிறை வைத்த, சேர மன்னன் ராஜராஜ பாஸ்கர ரவிவர்மனை கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை என்னும் பகுதியில் போரில் வென்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயில் எழுப்பட்டது. அதன் பிறகு, கருவறை வடக்கில் சண்டீகேஸ்வர் கோவிலையும், நடராஜர் மண்படபத்தையும், நந்தியம் பெருமானையும் அமைந்தார். அந்த நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் வராஹியம்மன் சன்னதி அருகே, வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலின் பிரம்மாண்டமான சிவலிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரம், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் உள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேகம், ஆராதனை நடத்த இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் நடக்கிறது. தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடக்கின்றன.
தஞ்சைப் பெரியகோயில் விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ !
தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கு மேல் பார்வதியும், சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உட்கூடாக உள்ள விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ 26.75 சதுர அடி சதுரம் கொண்டது. இதன் நான்கு மூலைகளிலும் 1.34 மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் உள்ளன. வடமேற்குத் திசையில் பூத உருவம் ஒன்று உள்ளது. கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன. தட்சிண மேரு என்பது ‘தெற்கே இருக்கும் மலை’ என்று பொருள். தமிழர்களின் கட்டடக் கலைத்திறனுக்குச் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரியகோயில், `ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டம்’ என பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் அதிசயிக்கின்றனர்.
கோமுகத்தை தாங்கும் பூதகணம்
கருவறையில் அபிஷேகம் தீர்த்தம் வெளிவரும் நிர்மால்யத் தொட்டி இங்கு வித்தியாசமானதாகும். விமானத்திற்கு வடக்குப்புற அடிபாகத்தில் உள்ள கோமுகத்தை பூதகணம் ஒன்று தாங்குகிறது. எதையும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்துபவர் ராஜராஜன் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
நன்றி: தினமலர் நாளிதழ்
நன்றி:முகநூள் பக்கம் இராஜராஜ சோழன்.

04/02/2020
14/01/2020

எவ்ளோதான் பொங்கல் கொண்டாடுனாலும் கிராமத்து பொங்கல் கிராமத்து பொங்கல் தான்யா..
என்ன ஒரு அழகு அப்படியே பழைய காலத்தை கண் முண் கொண்டு வந்து செல்கிறார்..😍😍😍
#கிராமத்து_பொங்கல்..
நண்பர்கள் அனைவருக்கும் "KKS "நண்பர்கள் சார்பாக
"இனிய பொங்கல்"நல்வாழ்த்துக்கள்..

12/01/2020

தஞ்சாவூர் ஒன்றிய பெருந்தலைவர் விவரங்கள்.

14 ஒன்றியங்கள்

1.தஞ்சாவூர் ஒன்றியம் - வைஜெயந்தி மாலா திமுக

2.ஒரத்தநாடு ஒன்றியம் - பார்வதி சிவசங்கர் (அதிமுக-திமுக இருவரும் தலா 14 வாக்குகள் திமுக குலுக்கல் முறையில் தேர்வு)

3.அம்மாபேட்டை ஒன்றியம் - (திமுக) கலைச்செல்வன்.

4.பட்டுக்கோட்டை ஒன்றியம் - பழனிவேல் (திமுக)

5.மதுக்கூர் ஒன்றியம்- (அதிமுக) அமுதா (போட்டியின்றி தேர்வு)

6.திருவோணம் ஒன்றியம் - செல்லம் (திமுக)

7.பேராவூரணி ஒன்றியம் - ஒத்திவைப்பு

08.சேதுபாவசத்திரம் ஒன்றியம் - மு.கி.முத்துமாணிக்கம் (திமுக)

09.பூதலூர் ஒன்றியம் - அரங்கநாதன் (திமுக)

10.திருவையாறு ஒன்றியம் - (திமுக) அரசபாகரன்

11.பாபநாசம் ஒன்றியம் - சுமதி (திமுக)

12.கும்பகோணம் ஒன்றியம் - காயத்ரி (திமுக)

13.திருவிடைமருதூர் ஒன்றியம் - திமுக சுபா

14.திருப்பனந்தாள் ஒன்றியம் - தேவி ரவிசந்திரன்

02/01/2020

தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலராக திரு.ஜெயக்குமார் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.KKS நண்பர்கள்கள் மற்றும் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெறிவித்து கொள்கிறோம்...

02/01/2020

தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சி மன்ற தலைவராக திரு.வடிவேலு அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு KKS நண்பர்கள்கள் மற்றும் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்...

 #அதிராம்பட்டினம்  to முத்துப்பேட்டை சாலை #இடம்:- கொட்டாயடிமாலை நேரம்🌖
23/12/2019

#அதிராம்பட்டினம் to முத்துப்பேட்டை சாலை
#இடம்:- கொட்டாயடி
மாலை நேரம்🌖

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKS நண்பர்கள் ,மஞ்சவயல். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category