15/08/2025
🌿 26ஆம் ஆண்டின் வளர்ச்சிப் பாதையில் – சமூக நன்மைக்கான உறுதியான நடை 🌿
அஸ்ஸலாமு அலைைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு…
அல்லாஹ்வின் பேரருளாலும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தினாலும், நல்லோர்கள்–நாதாக்களின் பாக்கியமான நல்லாசியாலும், நமது சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு – SSF இந்திய அளவில் தொடங்கி 52 ஆண்டுகளாக பல மாநிலங்களில் ஆலமரமாக கிளைகளை விரித்து, சமூக மேம்பாட்டின் பல துறைகளிலும் *இந்தியாவின் கிராண்ட் முஃப்தி சுல்தானுல் உலமா ஷைகுனா AP அபூபக்கர் பாகவி உஸ்தாத்* அவர்களின் சீறிய தலைமையிலும், பணியாற்றி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே...
இப்பயணம், தமிழகத்தில் (கோவையில்) கண்ணியத்திற்குரிய KT தாஹிர் ஸக்காஃபி அவர்களின் பெரும் முயற்சியால் மரியாதைக்குரிய அல்ஹாஜ் N. அப்துல் ஹக்கீம் இம்தாதி ஹளரத் அவர்களின் பொற்கரங்களால், அதிகாரப்பூர்வமாக அடியெடுத்து வைத்த தினம் ஆகஸ்ட் 15.
இன்று, அதன் வளர்ச்சி வெளிப்பாடாக தாய் அமைப்பான தமிழக முஸ்லிம் ஜமாஅத் – TMJ (இளைஞர் மற்றும் பெரியவர்களுக்கான அமைப்பு) அழகிய நபி வழி தோன்றல் செய்யது அப்துல் ரஹ்மான் பாகவி அஹ்ஸனி தங்கள் அவர்களின் தலைமையில் உருவாகி,
அஹ்லுஸ்ஸுன்னத்தி வல்ஜமாஅத் கொள்கைகளை பின்பற்றுதல், (To follow the ideology of ahlussunnathi val jama-ath)
தேச ஒற்றுமைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பாடுபடுதல், (To extend the national integration and social)
மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை காத்தல் (Harmony to respect and save the humanity)
என்ற தாரக மந்திரத்துடன், தமிழகத்தின் பல மாவட்டங்களில் திறம்படச் செயல்பட்டு வருகிறது.
இதன் கிளை அமைப்புகளாக,
சுன்னத் ஜமாஅத் ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் – SJM (ஆசிரியர்கள் சங்கம்): இந்திய இஸ்லாமிய கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை அனைத்து மதரஸா மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்.
சுன்னத் ஜமாஅத் பாலர் சங்கம் – SBS (சிறுவர்கள் மன்றம்): சிறுவயதிலிருந்தே ஒழுக்க நெறி, பொதுநல சிந்தனை, கூட்டமைப்பின் அவசியம் ஆகியவற்றை விதைத்தல்.
அல்ஹம்துலில்லாஹ்!
தனது 26ஆம் ஆண்டின் துவங்கும் இந்நன்னாளில், நமது இந்திய தேச சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும், நம் அமைப்பின் காலம் சென்ற தலைவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கும், அவர்கள் பின் துணை நின்ற குடும்பத்தார்களுக்கும் பிரார்த்தனை செய்வோமாக...
எல்லாம் வல்ல அல்லாஹ், இனியும் பல்லாண்டுகள் அவர்களின் வழியில் உறுதியோடு நின்று, எதிர்வரும் சவால்களை சாதனைகளாக மாற்றி, நம் சமூகம் பல்சமய உறவுகளோடு, அவரவர்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை பேணிக் காத்து, நாட்டை வளர்ச்சி பாதையில் அமைதியோடும், ஒற்றுமையோடும், மனிதநேயத்தோடும், அழைத்து செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்....
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
ஜனாப் S. சபீர் அலி MBA.,
செயலாளர், TMJ தமிழ்நாடு