27/05/2026
SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!
அன்பும் தியாகமும் இறைநம்பிக்கையும் ஒன்றிணையும் புனித ஹஜ்ஜுப் பெருநாளில்,இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவூட்டும் இந்த புனித நாளில், மனிதகுலம் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை பேணிக் காக்க வேண்டும்.
இன்று இந்தியாவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதும்,மத சடங்குகளில் தலையீடு செய்வதும், வெறுப்பு அரசியலால் சிறுபான்மையின மக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் ஜனநாயகத்திற்கே ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த புனித நாளில்,நீதியும் சகோதரத்துவமும் நிலைபெறும் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்!
ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
___________
SDPI கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)
மயிலாடுதுறை மாவட்டம்.