01/11/2017
கன்னியாகுமரி மாவட்டம்
நாஞ்சில் நாடு
61 வயது நிறைவு... நவம்பர் - 1
எம்மை ஆரல்வாய்மொழிக்கு அப்பால் மலையாளி என்றும் களியக்காவிளைக்கு அப்பால் பாண்டி என்றும்
அழைக்க அடிப்படை காரணியாக அமைந்த நாள்....
♦நெல்லை எங்கள் எல்லை
குமரி எங்கள் தொல்லை
என எதுகை மோனையில்
கருணாநிதியால் சொல்லாடல்
நடத்த காரணம் ஆன நாள்....
♦நீங்கள் தமிழகத்தோடு இணைந்தாலும் பிரத்தியேக சலுகைகளை எதிர்ப்பார்க்க கூடாது ....ஏனெனில்...தமிழகத்தின் பிற மக்களோடு ஒப்பீடு செய்யும்போது
நீங்கள் கல்வியில் வசதி வாய்ப்புகளில் முன்னேறி உள்ளீர்கள்...
♦.என கர்மவீரரால் சொல்ல வழிவகை செய்த நாள்....
♦மொத்தத்தில் நாங்கள் தமிழர்கள் என்று நாங்களாகவே மட்டும் சொல்லிக்கொள்கிறோம்.....
♦தரமான இரப்பர் உண்டு இரப்பர் தொழிற்சாலை இங்கு இல்லை( எம் வயலையும் வரப்பையும் தென்னையையும் பனையையும் காவு வாங்கியது இரப்பர் அது வேறு விஷயம்)
கல்வியில் முதன்மை பெற்ற மாவட்டம் ஆனால் எமக்கு அரசு கல்லூரிகள் கிடைக்க வருடங்கள் 50 க்கும் மேல் காக்க வேண்டிவந்தது .....
♦படித்தவர்களுக்கு எம்மண்ணில் இடமில்லை இரைதேடும் பறவைகளாய் பறக்கிறோம் பல ஊர்களுக்கும் நாடுகளுக்குமாய் ..
ஆரவாரம் இல்லா ஒரு பெரிய வீடு அதனுள் முடங்கிக் கிடக்கும் முதிய பெற்றோர் தனிமையில் வாடும் தம்பதிகள் என பெரும்பாலும் பெருகிவிட்டன காரணம் வேலைவாய்ப்புகள் எம் மண்ணில் இல்லாததால்
♦குமரியில் படித்தாலும் குடும்பத்தோடு குடியிருக்க முடியாது......
தமிழகத்தோடு எம் மண்ணும் மக்களும் இணைந்ததால்
பெரும் சமூகத்தின் ஒரு அங்கமானோம் ...நாங்களும் தமிழர்கள் என தலை நிமிர்ந்து சொல்கிறோம்...
தலைமை செயலகத்திலும் காவல் துறையிலும்
கல்வித்துறையிலும். சுகாதார துறையிலும் கொஞ்சம் வேலை வாய்ப்பினை பெற்றோம் ....இப்போது அதுக்கும் ஆப்பு ......
இயற்கையிலேயே அமைய பெற்ற குளச்சல் துறைமுகத்திட்டம் கடந்த 61 ஆண்டுகளாக தேர்தல் அறிக்கையாகவே கடந்து போனது இன்று இனையமத்திற்கு இடம்மாறி மீனவர் வாழ்வாதாரம் கொள்ளை போக வரிந்து கட்டி வேலை பாக்குது ....
கடந்த 50 வருடங்களாக மருத்துவக்கல்லூரி பொறியியல் கல்லூரி எம் மண்ணுக்கு எட்டா கனியாகவே இருந்தது
தனியார் கல்லூரி கனிகள் கனியகூட இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது......
♦எம்மண்ணில் மதவாத அரசியலுக்கு தொடக்க புள்ளி வைத்தது திராவிட கட்சியே அதை அணையாமல் பாதுகாப்பு காப்பது தேசிய கட்சிகளே......
மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா என முனகும் மக்களில் நானும் ஒருவன்......
♦மொத்தத்தில் கேரளாவில் விடுபட்டு தமிழகத்தோடு குமரியை அடகு வைத்த நாள் ......
என்னை பொறுத்த வரை தமிழ்நாடும் வேண்டாம் கேரளவும் வேண்டாம் தனித்தன்மையுடன் கூடிய
♦ #யூனியன்பிரதேசமாக மாறவேண்டும் எம் குமரி
அன்று குமரி விடுதலைக்காய் மத இனம் கடந்து போராடிய போராளி
பெரியோர்கள் இன்று இருந்திருந்தால் இதைத்தான் சொல்வார்கள் என தீர்க்கமான எண்ணம் எனக்குண்டு...
♦♦என்னத்தான் சொன்னாலும் ....
எமக்கு கன்னியாகுமரிக்காரன் என்ற கர்வமுண்டு..
source: