24/09/2025
ஐயங்கோட்டை நகரி இடையே உள்ள கம்மாய் அருகில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அய்யங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் அய்யங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் குப்பைகளை சேமித்து கம்மாய்க்கு அருகில் கொட்டி தீ வைத்து வருகின்றனர் , இது சம்பந்தமாக அய்யங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் இலக்கியச் செல்வம் என்பவர் பலமுறை சுகாதாரத்துறை மற்றும் ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தும் அந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று 24 9 2025 ஐயங்கொட்டை சேர்ந்த சமூக நல இளைஞர்கள் ம.மருது, கார்த்திக் ராஜாங்கம் , விஜி, பைட்டர் சங்கையா, அபிதாஸ், மோ.அருண் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தால் கம்மாய்க்கு அருகில் கொட்டப்பட்ட கழிவுகளை சுத்தம் செய்து மரக்கன்றுகளை ஊண்டினர். இதற்கு பின்பும் ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டினால் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.