18/11/2021
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக உதவி.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடி கிளை சார்பாக மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து பாதிக்கப்பட்ட சுமார் 5 குடும்பங்களுக்கு தலா ₹1000/- ரூபாய் ஆறுதல் தொகையாக கோவிந்தகுடி ஊராட்சி மன்ற துணை தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவருமாகிய P.A.S.ரஹமத் அலி அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அல் ஜலால் மற்றும் கோவிந்தகுடி கிளை கழக செயலாளர் அஹமது அல் ஜலால் ஆகியோர்கள் உடனிருந்தனர்.