20/05/2026
இன்று வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். 💐
எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் கிடைக்காத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது அடுத்த வெற்றிக்கான ஒரு அனுபவம் மட்டுமே. மீண்டும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து சிறப்பான வெற்றியை பெற என் வாழ்த்துக்கள்.
மாணவச் செல்வங்கள் அனைவரும் கல்வி, அறிவு, ஒழுக்கம் மற்றும் திறமையில் முன்னேறி, பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உயர்ந்து, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.