09/06/2026
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தமிழக சமத்துவ மக்கள் கட்சி (தசமக) வெளியிட்டுள்ள அறிக்கை.
முக்கியக்
(முறைகேடுகள்)
நிலம் கையகப்படுத்துதல்: 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக ₹940 கோடி நிதி வழங்கப்பட்டதில் {கமிசன்} என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சாலைப் பணி (Road Work) முறைகேடு: 10.3 கிலோமீட்டர் நீள சாலைப் பணிக்காக மட்டும் ₹175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கணக்கீட்டின்படி ஒரு.கி மீட்டருக்கு ₹ ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் (1 மீட்டருக்கு கணக்கீட்டின்படி அது ₹1,75,000 ஆகும்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது முதல் முக்கிய முறைகேடாகக் கருதப்படுகிறது..
மழைநீர் வடிகால் முறைகேடு: இத்திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக. 10.3 கி.மீட்டருக்கு ₹53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மீட்டர் அளவிற்கு ₹5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது இரண்டாவது முறைகேடாகப் பார்க்கப்படுகிறது.
கம்பி வேலி (Fencing) முறைகேடு: திட்டமிட்டபடி 10.3 கி.மீ அளவிற்கு கம்பி வேலி அமைக்காமல், வெறும் 8 கி.மீ அளவிற்கு மட்டுமே கம்பி வேலி அமைக்கப்படஉள்ளளது. இதற்கு ₹13 கோடிகள் என ஒதுக்கப்பட்ட நிலையில், ஒருமீட்டருக்கு 1.25.000/ ருபாய் என கணக்கீடு மிக அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது மூன்றாவது முறைகேடாகும்.
தற்போதையநிலையில்
"இத்தனை கோடிகள் கொண்ட இத்திட்டத்தில் பல கோடி ருபாய்கள் முறைகேடுகள் நடைபெற்றதாக மக்களின் ஆதங்கம் தற்போது வரை 70% கூட நிறைவடையவில்லை.
தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக. தமிழக அரசுக்கு முக்கியக் கோரிக்கைகள்:
முழுமையான ஆய்வு: தமிழக அரசு இத்திட்டத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் முறைகேடுகள் நடந்தது உறுதியானால், இத்திட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்திட வேண்டும்.
இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகளைச் சீரமைத்து, வரைமுறைப்படுத்தி, விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட வேண்டும். Chief Minister of Tamil Nadu . தமிழக சமத்துவ மக்கள் கட்சி #தமிழகவெற்றிகழகம் #மாநிலநெடுஞ்சாலைதுறை