07/10/2025
"எங்க ஊர்ல இருந்து ஸ்கூல் க்கு மலை பாதையில் நடந்து வரணும் ன்னா போக வர 4 கி.மீ ஆகும். நான்தான் இந்தப் புள்ளைங்கல கூட்டிட்டு போய்ட்டு வருவேன். என்னைக்காவது வழியில் கரடி ஏதாவது நின்னுச்சுன்னா புள்ளைங்கள கூட்டிட்டு வார மாட்டேன். ஊரிலேயே இருந்துடுவோம். இந்த வேலைக்கு மாசம் 2000 கொடுக்கிறார் அந்த H.M சார்."
இது 2017ம் ஆண்டு கோத்தகிரி மலை மீது இருக்கும் கிராமத்தில் நடந்த உரையாடல். அதன்பிறகு 2018ல் அதே கிராமத்திற்கு H.M மற்றும் சில நண்பர்களால் ஜீப் ஒன்று வைக்கப்பட்டு குழந்தைகளைகள் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், ஜீப் ஓட்டுநர் அவரது சவாரி, அவரது ஒழுங்கின்மை என்றெல்லாம் காரணம் காட்டி பள்ளிக்கு பல நாட்கள் மட்டம் போடவும். மீண்டும் அந்த அக்காவே அழைத்து வரத் தொண்டியதாக தகவல் வந்தது. அதேநேரம் நாளுக்கு நாள் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
Lockdown காலத்திற்கு பிறகு பெரியதாக தொடர்பு எதுவும் இல்லை, அந்தப் பகுதியில் இருந்து. அதேநேரம் நீலகிரி மாவட்டம் மட்டுமல்ல அனைத்து மலைவாழ் பகுதிகளிலும் ஏற்படுகிறன பள்ளி இடை நின்றல் மற்றும் பள்ளிக்கே வர முடியாத நிலை என அனைத்துமே பேசு பொருளாக அவ்வப்போது மாறும்.
இனி அதெல்லாம் இருக்காது. காரணம் மலைவாழ் அரசுப்பள்ளிகளுக்கென தனியாக பள்ளி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும்.
சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேசும்போது கூறினார்,"தி.மு.க வை எதிர்பவர்கள் யாரென்று பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி கற்க கூடாது என்பவர்கள்தான்" என.
கல்வியை நோக்கியப் பெரும் முயற்சிகளையும், பயணத்தையும் தொடர்கதை ஆக்கியுள்ளது கழகத்தின் திராவிட மாடல் அரசு. ஆனால், இன்னும் இன்னும் கூடுதல் உழைப்பு கட்டமைப்பை வலுவாக்குவத்திலும், போதாமைகளை சரி செய்வதிலும், ஆசிரியர்கள் உருவாக்கத்திலும் கூடுதல் கவனமும் தேவை.