04/09/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு எரிசக்தி, வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி. டி. ஆர். நிர்மல்குமார் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
| |