18/04/2022
மருத்துவர் என்பவர் யார்? பிறரின் உடல் பிணி தீர்ப்பவர் மட்டுமே மருத்துவரா? பிறரின் மனப் பிணியையும் தீர்ப்பவர் மருத்துவரா? உடல் மற்றும் மனத்தின் பிணியைத் தீர்ப்பவராக இருந்தாலும் அதற்காக ஒரு பெருந்தொகையைப் பெறுபவரை ராசியான மருத்துவர் எனலாம். ஆனால், நல்ல மருத்துவர் என்று மனதார சொல்ல முடியுமா? மேலும் மேலும் வரும் நோய்களுக்கு மேலும் மேலும் மருந்து அளிப்பவர் மருத்துவரா? அல்லது நோயின் வேர் கண்டறிந்து மீண்டும் வராமல் முற்றிலும் களையெடுப்பவர் சரியான மருத்துவரா? இல்லை, நோய் வரும்முன்பே தடுக்கும் வழிமுறையை ஒருவர் நோயாளி ஆகும் முன்பே சொல்பவர் மருத்துவரா?
ஓர் ஊரில் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உடல் மற்றும் மனப் பிணிகளைத் தீர்க்கும் மருத்துவராக மட்டுமல்ல, அந்தப் பிணி வரும் முன்பே தடுப்பதற்கான வழிகளை எல்லாம் பொதுவில் சொன்னார். அதுமட்டுமா? நோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து மக்களுடன் சேர்ந்து போராடி விரட்டி அடித்தார். அதாவது, தனது சம்பாதியத்துக்கான அடிப்படையையே அடித்து விரட்டினார். அதையும் மீறி வந்த நோய்களுக்கு, தான் மட்டுமே மருத்துவராக இல்லாமல், சிறந்த மருத்துவர்களைத் தேடிப் பிடித்து ஓரிடத்தில் கூட்டி, மிகக் குறைந்த செலவில் மக்களுக்கு பிணி தீர்க்க செய்தார். அதாவது, தனது தட்டுக்கு தேடி வருகிற உணவையே பத்து தட்டுகளுக்கு மாற்றினார். மொத்தத்தில், சமூகத்தை ஆக்கிரமிக்க வந்த நோயையே கூட்டுறவுடன் ஒன்றுகூடி, படைத்தலைவனாக முன்நின்று போரிட்டார். சுற்றுச்சூழலுக்கு, இலக்கியத்துக்கு, மருத்துவத்துக்கு, மண்ணுக்கு என எல்லாவற்றுக்கும் மருத்துவராக இருந்தார், வெ.ஜீவானந்தம் என்கிற மாபெரும் மருத்துவர். அவரை அறிந்துகொள்ளும் உங்கள் குழந்தைகளும் நாளை சமூகத்தின் மிகச் சிறந்த மருத்துவராக இருப்பார்கள். அவர்கள் கட்டிடத்தை உருவாக்கும் கலைஞனாக இருந்தாலும் சரி, கணிப்பொறியை இயக்கும் நிபுணனாக இருந்தாலும் சரி, அந்தந்த துறையின் அவலப் பிணியைத் தீர்க்கும் மருத்துவராக இருப்பார்கள்.
ஏப்ரல் மாத #மகிழ் தனித்துவ சிறார் இதழ், அந்த மாபெரும் மருத்துவரின் கதையைத் தாங்கி வருகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். படிக்கவும்... பல்லாண்டுகள் பாதுகாக்கவும்...
சந்தா விவரங்களுக்கு...
மேலும் விபரங்களுக்கு
7397222767 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.
தனி இதழ் ரூ 89/-
ஆண்டு சந்தா (12 இதழ்கள்) 899/-
சந்தா செலுத்த: 9962333388