07/07/2021
ஸ்டான் சுவாமி மரணம் குறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய கமிட்டி அறிக்கை
ஸ்டான் சுவாமியின் மரணம் நமது அமைப்பின் மீது மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது
மக்களின் உரிமைக்காக போராடுவது குற்றம் ஆகி விட்டது, எந்த நீதிமன்றத்திலும் கேட்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நீதிமன்றங்களில் நீதிக்கு பதிலாக ஏய்பு விளையாட்டின் விளைவாக குழப்பத்தில் உள்ளது. இது ஸ்டான் சாமியின் மரணமல்ல இது சர்வாதிகாரத்தின் கொலை. 84 வயது ஸ்டான் சாமி செய்த குற்றம்தான் என்ன! எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் மரணம் இந்த அரசும் நிர்வாகமும் யாருக்கானது என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. ஸ்டான் சாமி பழங்குடியினர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளர். அவர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்படுகிறார் ,
ஸ்டான் சுவாமி ஜூலை 5 2021 மும்பை பாந்திராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் இருந்த பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது, ஜூலை 5 2021 மருத்துவர்கள் ஸ்டான் சுவாமி மதியம் 1:30 மணி அளவில் இறந்து விட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இது போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சேவகர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.