அருப்புக்கோட்டை அரண்கள்

அருப்புக்கோட்டை அரண்கள் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் நலனும் அக்கறையும் நமது பிரதான நோக்கம்.

ஆதலால் நாம் அருப்புக்கோட்டை அரண்கள்
(358)

01/06/2026

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

உரிமையியல் நீதிமன்றங்கள் உட்பட மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் கோடைகாலங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

RCB - GT அணிகளுக்கு இடையேயான IPL இறுதி போட்டியில் RCB அணிக்கு ஆதரவு. நமது ஆதரவு என்பது வெளியில் இருந்து தான் ஆதரவு. மற்ற...
31/05/2026

RCB - GT அணிகளுக்கு இடையேயான IPL இறுதி போட்டியில் RCB அணிக்கு ஆதரவு.

நமது ஆதரவு என்பது வெளியில் இருந்து தான் ஆதரவு. மற்றபடி இன்னும் CSK ரசிகராகவே தொடர்கிறோம்.

ஜெய் RCB😎

அருப்புக்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் வாழ்வாங்கி அருகே சாலை விபத்து. அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் இல்ல...
31/05/2026

அருப்புக்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் வாழ்வாங்கி அருகே சாலை விபத்து.

அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. ஒருவர் காயம்.

30/05/2026

மழை மழை...
☺️

25/05/2026

விளாத்திகுளம் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு.

குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

Chief Minister of Tamil NaduDistrict Collector, Virudhunagarஅவசரம். நடவடிக்கை தேவை. ____________________________விருதுநக...
24/05/2026

Chief Minister of Tamil Nadu

District Collector, Virudhunagar

அவசரம். நடவடிக்கை தேவை.
____________________________

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் குலசேகரநல்லூர், கல்லூரணி கிராமங்களுக்கு அருகே அமைந்துள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை.

விசயம் என்னவெனில் தங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கிரஷர் தொழிலுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி தங்கள் கிராமத்தின் விவசாய நிலங்களைக் காப்பாற்றவும் சட்டப்படியாக உதவுமாறு மடத்துப் பட்டி இளைஞர்களின் அழைப்பை ஏற்று இன்று மதத்துப் பட்டி கிராமத்திற்கு சம்பந்தப் பட்ட விளைநிலங்கள் மற்றும் கிரசர் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலங்களை சென்று பார்வையிட்டோம்.

உண்மைதான். கிரஷர் தொழில் துவங்குவதற்கென நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் உள்ளன. எந்தெந்த விசயங்கள் எல்லாம் விதிமுறை மீறல்கள் என்று உள்ளதோ அவைகள் அனைத்தும் கிரஷர் நிலத்தின் உரிமையாளர் வசதிக்கு ஏற்ப வருவாய் துறை அதிகாரிகளால் பொய்யான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

அதாவது அருகாமையில் உள்ள விளைநிலங்களை தரிசு நிலங்களாக ஆவணம் உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல அருகாமையில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை குடியிருப்பு இல்லாத ஆனால் மின் இணைப்பு உள்ள கட்டிடங்கள் என சான்றிதழ்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உட்பட, கிராம நிர்வாக அலுவலர், தலையாரி என அனைவரும் உடந்தை.

ஏற்கனவே கல்லூரணி மற்றும் ஆலடிப்பட்டி பகுதிகளில் சட்டம் முரணான கல்குவாரிகளால் அந்த பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி அந்த பகுதி விவசாயம் அழிந்து போகும் விளிம்பு நிலையில் உள்ள சூழலில் தற்போது மடத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே கிரசர் தொழில் புரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க சட்ட முரணான செயல்களாகும்.

இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கிரசர் தொழில் துவங்க அனுமதி பெற்றுள்ள நிலத்தின் உரிமையாளர் அவரது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலைகள் அமைக்க முற்பட்டு வருகிறார். அவ்வாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டால் சுற்றிலும் உள்ள விளைநிலங்களுக்கு உழவு செய்யவும், அறுவடை காலங்களிலும் சென்று வர இயலாமல் விவசாயிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

தனது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ள அந்த கிரஷர் நில உரிமையாளருக்கு தனிப்பட்ட பாதை எதுவும் கிடையாது. அவர் போக, வர வேண்டுமாயின் விவசாய நிலங்களில் தான் சென்று வந்தாக வேண்டும்.

பொதுவாக கிராமங்களில் விவசாய நிலங்களில் யாரும் மற்றவர் தங்கள் நிலத்தில் நுழையாத வகையில் தடுப்புகள் அல்லது வேலிகள் அமைக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருவர் நிலத்தில் மற்றொருவர் இறங்கி சென்று வந்தாக வேண்டும். அந்த பரஸ்பர ஒத்துழைப்போடு தான் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து விவசாயம் இன்று வரையில் அழிவில்லாமல் நடந்து வருகிறது.

ஆனால் இவர் மட்டும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கம்பி வேலி அமைப்பாராம். ஆனால் அவர் மட்டும் மற்றவர்கள் நிலத்தில் இறங்கி போய் வருவார்களாம். நல்லா இருக்கிறது நியாயம்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் மடத்துப்பட்டி இளைஞர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவர்களுக்கு அரண்கள் சார்பில் நமது சட்ட உதவியை துவக்குகிறோம்.

நிச்சயமாக இந்த சட்ட முரணான செயல் சட்டப்படியாக தடுத்து நிறுத்தப் படும். மடத்துப் பட்டி மக்களுடன் நாம் துணை நிற்கவுள்ளோம்.

- Thangapandian Muthumari

24/05/2026

சரியான வவுத்து எரிச்சல் புடிச்சவனா இருப்பான் pola.. ரோட்டுல போற எல்லோரையும் போட்டுக் கொடுக்கிறான்.. விக்னேஷ் அண்ணா விக்னேஷ் அன்னானு வேற யாரையோ கூப்புடுறான்😂😂 MLA வா இருப்பாரோ..

24/05/2026

டிராபிக் அலர்ட்:

காந்திநகர் பாலத்துக்கு கீழே ஸ்பாட் ஃபைன் நடக்குது மக்களே.

அந்தப் பக்கம் போகாதீங்க. சுத்தி போங்கன்னு சொல்லல. முறையா தலைக்கவசம் அணிந்து, ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் எல்லாம் சரியா வெச்சுகோங்க என்று சொல்கிறோம். 😉

Obey traffic rules and avoid fines..

😎🚦

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்பதை Law Scholar Mr.Vijay ( https://ww...
24/05/2026

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்பதை Law Scholar Mr.Vijay ( https://www.facebook.com/share/1BRYTcviEX/?mibextid=wwXIfr ) அவர்கள் உடன் நேர்காணலில் கலந்துரையாடப் போகிறோம்.

இது ஒரு புதிய முயற்சி. இனிமே அடிக்கடி இது போல கலந்துரையாடல் இருக்கும்.

Address

1-1-33 Ramson Complex, Madurai Road
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருப்புக்கோட்டை அரண்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share