02/01/2025
Premalatha Balasubramaniam யப்பா என்ன ஒரு விமர்சனம்!!! சத்தியமா காலையில எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப, ரொம்ப அன்புகள் மா.. 🥰 பொறுமையாக அனுபவித்து, படித்து, கருத்து பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிகள் என்று ஒற்றை வார்த்தை ஈடாகாது தான். 🙏🏻🙏🏻
ஒரே மூச்சில் ஒரு காபி ஷாப்பில் ஆரம்பித்து அங்கேயே முற்றும் பெற்ற நாவல்.
//கடவுளே...உங்களுக்குள் இப்படி ஒரு ராட்சசி இருப்பது தெரியாமல் போச்சு.//
🤣வாய் விட்டே சிரித்து விட்டேன் கண்கள் கனிய..
பொற்கிரீடம் பெற்ற உணர்வு நன்றிகள் 🙏🏻
ராட்சசியை வெளியே இழுத்து போட்டது போடுவது ..போட வைப்பது எல்லாம் நமக்கு கிடைத்த நட்புகள் தாங்கள் தான்.🙏🏻
பூமித்ரா, பிரேமாவதி போன்ற பெண்கள் அதிகம்.
திருமணம் எனும்'பெயரால் வெளிநாடுகள் வரும் பெண்கள் மூன்று குழந்தை பெற்றும் பலர் நரக வாழ்க்கை ..சிலர் போராட்டம்.. இன்னும் சிலர் சிதைந்து போதல்.. என நடக்கிறது தான்..
ஆனால் ஒரு விஷயம் வெளிநாடுகளில் பிறந்த (அதிலும் பாரிஸ்) யதுரன் போன்ற எந்த பையனும் எந்த பெண்ணையும் துன்புறுத்துவது இல்லை.
பிடித்தால் வாழ்வோம், இல்லையேல் நண்பர்கள் போல் பிரிவோம் பாலிசி.
From Writer Premalatha Balasubramaniam 👇
#ஜோ.... #தேயாத எனக்கான வெண்ணிலவே! படிச்சாச்சு....கடவுளே...உங்களுக்குள் இப்படி ஒரு ராட்சசி இருப்பது தெரியாமல் போச்சு. பூமித்ராவுக்கு நேர்ந்த கொடுமையை என்னால் படிக்கவே முடியலை. நம்ம மனசு கொஞ்சம் வீக்...கடவுள் அருளால் அவள் பிரேமாவதியின் கையில் கிடைத்தாள்.
யதுரன் -வழக்கம் போல உங்கள் நாயகன் என் மனதை அள்ளி விட்டான். முதல் முறை பார்த்ததில் இருந்து அவளை பார்த்து தவிப்பதாகட்டும், அவளை தன்னம்பிக்கை நிறைந்த மனுஷியாக மாற்றியதாகட்டும்...காதலோடு மணந்தாலும் , அவள் மனம் மாற காத்திருப்பதிலும்...ஐ லவ் யது.
பூமியின் தடுமாற்றத்தையும் பயத்தையும் நன்றாக உணர முடிந்தது ஜோ... அவளுக்காக நம் மனசும் துடித்து தான் போகிறது. ஆனால், யது அவள் பயத்தை போக்குவது அழகு. அதன் பின்னான ரொமான்ஸ் மனதை வருடுகிறது.
ப்ரேமாவதி, யாரிஷா என்று பெண் பாத்திரங்களும் சிறப்பு. விஜயமலர் மேல் ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், மகளுக்கு நடந்த கொடுமைக்கு அழுது கொண்டேயிராமல், அவளுக்கு பக்கபலமாக நின்றதில் பிழைத்து போகிறார்.
வழக்கம் போல கவிதைகள், கவிதையான வசனங்கள், நடைமுறைக்கு ஒத்துப் போகும் வசனங்கள் என்று அனைத்தையும் ரசித்தேன்.
'நான் வெறும் பார்வையாளராக இருந்தால் தான், எந்தப் பிரச்சனையையும் சரியாக அணுகி, தீர்வு காண முடியும்' வெரி ட்ரூ.
உங்கள் கதைகளில் கலகலப்பும் அழுத்தமும் சேர்ந்தே இருக்குமென்றால் இதில் அழுத்தம் சற்று அதிகம் தான் ஜோ. கடைசி அத்தியாயங்களின் மகிழ்வில், ஆரம்ப அத்தியாயங்களின் அழுத்தம் குறைந்தாலும், உலகின் பல இடங்களில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களை எண்ணி மனம் கனத்துதான் போகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பூமித்ராவைப் போல் நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்ற பிரார்த்தனை எழுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல கதை. வாழ்த்துகள் ஜோ.