Tamilen Wallfahrt in Kevelaer

Tamilen Wallfahrt in Kevelaer Tamilen-Wallfahrt in Kevelaer

am zweiten Wochenende im August

மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026🏆2026 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர விவிலிய வினா–விடை போட்டி எமது இணையதளத்தில் தர...
10/01/2026

மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026🏆

2026 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர விவிலிய வினா–விடை போட்டி எமது இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு தொடங்கியுள்ளது.
🧑‍🧒‍🧒வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கேற்கலாம்.
🗓️போட்டி ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும். 12 மாதத் தேர்வுகளின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் 2026ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும்.

⏱️ஜனவரி மாதத் தேர்வில் 31–01–2026 வரை கலந்து கொள்ளலாம். அடுத்த மாதத்திற்கான வினாக்கொத்து ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி தரவேற்றம் செய்யப்படும்.

📚இந்தப் போட்டி தமிழ், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும்.

நீங்களும் போட்டிகளில் பங்கேற்று, இந்த போட்டியை உங்கள் பங்கு மக்களுக்கு அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள்.

https://www.tamilcatholicdaily.com/tamilquiz
Bibel Quiz in Tamil: தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி
Web Design Team,
Ruban

Tamil catholic chaplaincy, Germany

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2025-1010
09/10/2025

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2025-1010

Tamil catholic chaplaincy, Germany

05/11/2024

கார்த்திகை 05, 2024
இன்றைய சிந்தனை

💫சர்வவல்லவரின் கரம் உங்கள் மீது உள்ளது, உங்களுக்கு அருள் புரிவார். உங்கள் அனைத்து காரியமும் நிறைவேறும் - உங்கள் இலக்குகளை நீங்கள் கடவுளின் கிருபையால் அடைவீர்கள் - கிறிஸ்து இயேசுவில் உங்கள் தேவையை அவர் பூர்த்தி செய்வார்.

'என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்'
(பிலிப்பியர் 4 : 19)

இன்று இனிய நாளாக அமையட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

04/11/2024

கார்த்திகை 04, 2024
இன்றைய சிந்தனை

💫உங்களுக்கு இவ்வுலகில் பல உறவுகள் உள்ளன, ஆனால் அதில் உறுதியாக நிற்பது மிகவும் கடினம் 👨‍👨‍👦‍👦 ஏனென்றால் நீங்கள் விமர்சனம், ஒப்பீடு, தீர்ப்புகள் போன்றவற்றைப் பெறுகிறீர்கள்... ஆனால் இறைவனுக்கு முன்பாக நீங்கள் விலையேறப்பெற்றவர், மரியாதைக்குரியவர் மற்றும் பாதுகாப்பானவர். . 🤝 அவருடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்'
(பிலிப்பியர் 4 : 1)

இன்று இனிய நாளாக அமையட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

03/11/2024

ஆசீர்வதிக்கப்பட்ட வாரம்

கார்த்திகை 03, 2024
இன்றைய சிந்தனை

💫 நீங்கள் இவ்வுலகில் உள்ள பல விடயங்களை அறிந்து கொள்வதில் மிகவும் பரபரப்பாக இருங்கலாம் 🌎 ஆனால் நம் இரட்சகராகிய ஆண்டவர் இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவு ஆவலாய் உள்ளீர்கள் 📖 - கிறிஸ்துவை ஆதாயப்படுத்த உங்கள் செயல்கள் என்ன ✝️🕊️ சிந்தியுங்கள்???

'உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்'
(பிலிப்பியர் 3 : 😎

இன்று இனிய நாளாக அமையட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

02/11/2024

கார்த்திகை 02, 2024
இன்றைய சிந்தனை

💫 இன்று ஆண்டவர் நீங்கள் அவருடைய பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறார் - ❄️ கடவுளின் ராஜ்யத்திற்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் - உங்களைச் சுற்றி வாழும் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள் மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களில் இயேசுவைக் காண்பார்கள்.

'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்'
(மத்தேயு 25 : 40)

இன்று இனிய நாளாக அமையட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

*அனைத்துப் புனிதர்கள் பெருவிழா 01.11.2024😍*🌹என் பாதைக்கு            🌹🌹விளக்கு🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்...
01/11/2024

*அனைத்துப் புனிதர்கள் பெருவிழா 01.11.2024😍*

🌹என் பாதைக்கு
🌹🌹விளக்கு🌹🌹
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

மத்தேயு நற்செய்தி 5: 8
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

01/11/2024

ஆசீர்வதிக்கப்பட்ட மாதம்

கார்த்திகை 01, 2024
இன்றைய சிந்தனை

💫 புதிய மாதங்கள் புதிய விடயங்களைக் கொண்டுவருகின்றன - கடவுளின் அற்புதமான விடயங்கள் உங்கள் வாழ்க்கையில் தயாராக உள்ளன - இறைவனின் இந்த ஆசீர்வாதத்தால் நீங்கள் பல தடைகளைத் தாண்டிவிட்டீர்கள், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் தெய்வீக நேரம் வந்துவிட்டது. ✨ ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் இதைத் தமதாக்கி கொள்ளுங்கள்.

'அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே'
(இணைச் சட்டம் 10 : 21)

இன்று இனிய நாளாக அமையட்டும்
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

Halloween தினம் என்பது பிசாசுக்கு விழா கொண்டாடும் தினமாகும். இந்த தினத்தை பிசாசே உருவாக்கியுள்ளது. இந்த தினத்தை கத்தோலிக...
30/10/2024

Halloween தினம் என்பது பிசாசுக்கு விழா கொண்டாடும் தினமாகும். இந்த தினத்தை பிசாசே உருவாக்கியுள்ளது. இந்த தினத்தை கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதில்லை. இறைவன் எங்களுக்கு தந்த குழந்தைகளை பிசாசுகள் போன்று உடை அணிந்து, அவர்களை பிசாசுகள் போன்று மாற்று வேடம் போடவைப்பது உண்மை இறைவனை காயப்படுத்தும் நோக்கமாகும். இந்த தினத்தை பல திருத்தந்தையர்கள் கண்டித்து கத்தோலிக்கரை அவதானமாக இருக்கும் படி கேட்டுள்ளார்கள். வத்திக்கான் இந்த பிசாசின் வணக்கத்தையிட்டு கத்தோலிக்கர் கவனமாக இருக்க வேண்டும் என 2014 இல் நடந்த ஒரு பெரிய மகாநாட்டிலே அறிவுரை வழங்கியிருக்கிறது (https://www.asianews.it/.../Pope-Francis-criticises...) இதை தான் புனித சின்னப்பர், "நீங்கள் எல்லாரும் ஒளியைச்(கிறிஸ்துவை) சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ(பிசாசை) சார்ந்தவரல்ல" (1 தெசலோனிக்கர் 5) என சொல்கிறார். பெற்றோர்களே இறைவன் தந்த குழந்தைகளுக்கு பிசாசுக்கு அர்ப்பணம் ஆக்கி விடாதீர்கள்.

30/10/2024

இணைந்து செபிப்போம் - 2024-10-31
ஆண்டவரே இயேசுவே,
என்னை கைதூக்கி விட்டவரே! உம்மை துதிக்கின்றேன். உயிரை காப்பாற்றி வாழ வைத்த தயவிற்கு நன்றியப்பா.பயங்கர ஆபத்தில் இருந்து பாதுகாத்தவரே! நன்றி கூறுகின்றேன். “இறுதியாக, நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும், ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்” என்று இன்றைய இறைவார்த்தை மூலமாய் உமது பாதுகாப்பில் வாழ அழுப்பவரே நன்றி தந்தையே. இயேசு இராயனே! இருள் நிறைந்த இவ்வுலகின் ஏமாற்று மனித தந்திரங்களை அறிந்திடவும் அதை உமது வல்லமையால் வெற்றி கொள்ளவும் ஆற்றல் தாரும். இயேசுவே! உமது உயிருள்ள வார்த்தையை எந்த நேரத்திலும் மனதில் நினைத்து அதை பற்றி எந்நேரமும் தியானித்து உம்மை மட்டும் பற்றி வாழ அருள் தாரும். ஆண்டவரே இயேசுவே! உண்மையான தூய ஆவி நிறைந்த வாழ்வை நான் கண்டு கொள்ள இந்த நாளில் எனக்கு படிப்பிப்பீராக. இந்த நாளில் என்னை உமது திருவுளம் நோக்கி வழி நடத்தும். நம்பிக்கையில் வாழவும், மீட்பை நோக்கிய பயணத்தில் என்னோடு என் துணையாளராம் தூய ஆவியானவர் என்னோடு இருந்து செயற்பட வேண்டும் என்று இயேசுவின் தூய நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்.

30/10/2024

இன்றைய இறைவாக்குத் துகள் - 2024-10-31
‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’(லூக்13:35)

இன்றைய சிறிய வழிச் செபம் - தொலைவு
தொலைதூரம் நடந்து சென்று போதித்த இறைவா, இன்று தொலைதூர நாடுகளில் உம் நற்செய்தி அறிவிக்க ஆர்வம் தாரும் ஆமென்

இன்றைய துதி - 2024-10-31
ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை என சட்டங்களும் நெறிகளும் நம்மை வளப்படுத்த வேண்டும் என்ற இயேசுவே உம்மை துதிக்கிறேன்(மாற்2:27)

Adresse

Kapellenplatz 35
Kevelaer
47623

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamilen Wallfahrt in Kevelaer erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen